News December 24, 2024
ஓட்டு கூட பனையூரில் இருந்தே கேட்பாரா விஜய்?

கட்சி தொடங்கியது முதலே விஜய்யை சர்ச்சைகளும் விடாமல் துரத்துகின்றன. பெரியாரின் நினைவு தினத்தையொட்டி பனையூர் கட்சி ஆபிஸில் பெரியார் போட்டோவுக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினார். இதுவும் சர்ச்சையாக வெடித்துள்ளது. அரசியல் கட்சியைத் தொடங்கிவிட்டு பொதுவெளிக்கு வரத் தயங்குவது ஏன் எனக் கேள்வி எழுப்பும் நெட்டிசன்கள், எலக்ஷனின் போது ஓட்டு கூட்ட பனையூரில் இருந்தே கேட்பாரா? என வினவுகின்றனர்.
Similar News
News September 7, 2025
₹200 கோடி வசூலை நெருங்கும் ‘லோகா’

இந்தியாவின் முதல் ‘Super Women’ படமான ‘லோகா சாப்டர் 1: சந்திரா’, விரைவில் ₹200 கோடி வசூலை எட்ட உள்ளது. கல்யாணி பிரியதர்ஷன் நடித்துள்ள இப்படம், இதுவரை உலகம் முழுவதும் ₹175+ கோடி வரை வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. இப்படம் இன்னும் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருப்பதால், வசூல் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. ₹30 கோடி பட்ஜெட்டில் துல்கர் சல்மான் தயாரித்த இப்படத்தை, டொமினிக் அருண் இயக்கியுள்ளார்.
News September 7, 2025
நாளை பள்ளி ஆசிரியர்கள் தயாரா இருங்க!

2012-ம் ஆண்டுக்கு முன் பணியில் சேர்ந்த இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் TET தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி, தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளை(செப்.8) மாலை 5 மணியுடன் முடிவடைகிறது. விண்ணப்பிக்க விரும்பும் ஆசிரியர்கள் trb.tn.gov.in இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கான தேர்வு நவம்பரில் நடைபெற உள்ளது. SHARE IT.
News September 7, 2025
CM ஸ்டாலினுக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்க பிளான்

ஜெர்மனி, இங்கிலாந்தில் முதலீடுகளை ஈர்க்க சென்ற CM ஸ்டாலின் முன்னிலையில், ₹15,516 கோடி தொழில் முதலீட்டிற்கான புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. இதனையடுத்து லண்டனில் இருந்து இன்று ஸ்டாலின் புறப்படுகிறார். நாளை காலை 7.30 மணிக்கு சென்னை திரும்பும் அவருக்கு உற்சாக வரவேற்பு கொடுக்க திமுகவினர் திட்டமிட்டுள்ளனர். விமான நிலையத்தில் இருந்து கத்திப்பாரா வரை இந்த வரவேற்பு இருக்கும் என கூறப்படுகிறது.