News January 23, 2025

இந்த ஆண்டாவது TNTET தேர்வு நடக்குமா?

image

TNஇல் 2 ஆண்டுகளாக TET தேர்வு நடத்தப்படாததால் இடைநிலை, பட்டதாரி ஆசிரியர்கள் மனஉளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக பலரும் பதிவிட்டு வருகின்றனர். கடந்தாண்டு ஏப்ரல் மாதம், ஜூலையில் டெட் தேர்வு நடத்தப்படும் என TRB அறிவித்தது. ஆனால், தற்போது வரை எவ்வித அப்டேட்டும் இல்லை. இதுஒருபுறம் இருக்க 2013இல் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்ற பலருக்கும் இன்னும் வேலை கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உள்ளது கவனிக்கத்தக்கது.

Similar News

News December 9, 2025

விஜய் கூட்டம்: துப்பாக்கி உடன் வந்தவர் இவர்தான் (PHOTO)

image

புதுச்சேரி தவெக பொதுக்கூட்டத்திற்கு துப்பாக்கியுடன் சென்ற நபரின் போட்டோ வெளியாகியுள்ளது. இவரிடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையில், இவர் சிவகங்கையை சேர்ந்த தவெக நிர்வாகியின் தனி பாதுகாவலர் என சொல்லப்படுகிறது. இந்நிலையில் அந்த தவெக நிர்வாகி யார்? சட்டவிரோதமாக துப்பாக்கியை பெற்றது எப்படி என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடந்து வருவதாக கூறப்படுகிறது.

News December 9, 2025

வீட்டு வாசலில் இந்த ‘3’ பொருள்களை வைக்காதீங்க..

image

வாஸ்து சாஸ்திரத்தின் படி, வீட்டு வாசலில் இந்த 3 பொருள்களை வைப்பது, கேடு விளைக்கும் என நம்பப்படுகிறது. ➤வாடிய செடிகள், கொடிகள் வீட்டு வாசலில் இருப்பது துரதிர்ஷ்டத்தை உண்டாக்கும் ➤கருப்பு அல்லது அடர் நிறத்திலான பொருள்கள் வாசப்படி மேட், சிலைகள் இருப்பது அதிர்ஷ்டத்தைத் தடுக்கும் என நம்பப்படுகிறது ➤உடைந்த சேதமடைந்த பொருள்கள், ஓடாத கடிகாரங்கள் வாசலில் இருந்தால், எதிர்மறையான ஆற்றலை கொடுக்கும்.

News December 9, 2025

உலகக் கோப்பை ஸ்குவாஷ்: 3 தமிழக வீரர்கள் பங்கேற்பு

image

சென்னையில் இன்று முதல் டிச.14 வரை 5-வது உலகக் கோப்பை ஸ்குவாஷ் போட்டிகள் நடைபெறுகின்றன. இந்நிலையில், இதற்கான கோப்பையை DCM உதயநிதி ஸ்டாலின் அறிமுகம் செய்து வைத்தார். இந்தியா, ஜப்பான், மலேசியா, எகிப்து உள்ளிட்ட 12 அணிகள் பங்கேற்கின்றன. இந்திய அணியில் அனாஹத் சிங், தமிழகத்தை சேர்ந்த ஜோஷ்னா சின்னப்பா, அபய் சிங், வேலவன் செந்தில் குமார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

error: Content is protected !!