News August 18, 2024

இனி இதுவும் தீவிரவாதமாகக் கருதப்படும்?

image

பெண்களுக்கு எதிரான பாலாதிக்க வன்முறைகளை தீவிரவாதத்தின் ஒரு வடிவமாகக் கருத இங்கிலாந்து அரசு திட்டமிட்டுள்ளது. பொது இடங்கள், பணியிடங்கள் & ஆன்லைனில் சிறுமிகள் & பெண்களுக்கு எதிராக ஆபாச & வெறுப்பூட்டும் வகையில் கருத்துக்களை வெளியிடுபவர்களை கண்டறிந்து, கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு அந்நாட்டின் உள்துறை அமைச்சர் கூப்பர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

Similar News

News November 28, 2025

மிகவும் விலையுயர்ந்த 10 வீடுகள்

image

இந்தியாவின் பல முன்னணி தொழிலதிபர்கள் மிகப்பெரும் செலவில் அழகான, பிரமாண்டமான வீடுகளை கட்டியுள்ளனர். அவர்களில் யாரெல்லாம் மிகவும் விலையுயர்ந்த வீடுகளை வைத்துள்ளனர்? அந்த வீடுகள் எங்கு அமைந்துள்ளன? அவற்றின் மதிப்பு எவ்வளவு? இந்த தகவல்களை எல்லாம் மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொரு படமாக ஸ்வைப் செய்து பார்த்து விவரங்களை தெரிந்து கொள்ளுங்கள். SHARE

News November 28, 2025

காற்றுமாசு விவகாரத்தில் மோடி மௌனம் சரியா? ராகுல் காந்தி

image

டெல்லியில் காற்று மாசுபாடு குறித்து நாடாளுமன்றத்தில் விரிவாக விவாதிக்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். தங்கள் குழந்தைகள் விஷக்காற்றை சுவாசித்து வருவதாக ஒவ்வொரு தாய்மாரும் வேதனைப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். குழந்தைகள் மூச்சுத்திணறலால் துடிக்கும் போது மோடி அமைதியாக இருப்பது சரியா என கேள்வி எழுப்பியுள்ளார். உங்கள் அரசு ஏன் எந்த அவசர நடவடிக்கையும் எடுக்கவில்லை என சாடியுள்ளார்.

News November 28, 2025

புயல் அலர்ட்: 10 மாவட்டங்களில் அடைமழை வெளுக்கும்

image

டிட்வா புயல் எதிரொலியாக தமிழகத்தில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில், இரவு 7 மணி வரை புதுக்கோட்டை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, குமரி, தென்காசி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 10 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என IMD கணித்துள்ளது. தேவையின்றி வெளியே செல்வதை தவிர்க்குமாறு CM ஸ்டாலினும் அறிவுறுத்தியுள்ளார். ஆகையால், பாதுகாப்பாக இருங்கள் மக்களே!

error: Content is protected !!