News March 25, 2025
29ஆம் தேதி சனி பெயர்ச்சி இருக்கா? இல்லையா?

வரும் 29ம் தேதி சனி பெயர்ச்சியா? இல்லையா? என மக்கள் குழப்பமடைந்துள்ளனர். வாக்கிய பஞ்சாங்கப்படி சனிப்பெயர்ச்சி இல்லை. ஆனால், திருக்கணித பஞ்சாங்கத்தின்படி 29ஆம் தேதி இரவு 10:07 மணிக்கு சனி பெயர்ச்சி ஆகும். கும்பம் ராசியில் இருந்து மீனம் ராசிக்கு சனி நகரப் போகிறார். இதனால், துலாம், ரிஷபம், கடகம் ஆகிய 3 ராசிக்காரர்களுக்கு பதவி உயர்வு, பண வரவு போன்ற பல நன்மைகள் கிடைக்கும் என ஜோதிடர்கள் கூறுகின்றனர்.
Similar News
News December 18, 2025
நாளை காலை வீட்டை விட்டு வெளியே வராதீங்க

மார்கழி தொடங்கிய முதல்நாளே தமிழகத்தில் மழை பெய்தது. தற்போது, மழை குறைந்து பனியின் தாக்கம் மெல்லமெல்ல அதிகரித்து வருகிறது. சென்னை உள்பட பல மாவட்டங்களில் காலையில் பனிமூட்டம் நிலவும் என IMD கணித்துள்ளது. அதனால், அதிகாலை நேரத்தில் வாகனங்களில் வெளியே செல்வதை தவிருங்கள். பணிக்குச் செல்பவர்கள் வாகனத்தை மெதுவாக ஓட்டுங்கள். ஸ்வெட்டர், மப்ளர் உள்ளிட்டவற்றை எடுத்துச் செல்லுங்கள். SHARE IT.
News December 18, 2025
ஷில்பா ஷெட்டி வீட்டில் ஐடி ரெய்டு

ஷில்பா ஷெட்டியின் மும்பை வீட்டில் வருமான வரித்துறை (IT) அதிகாரிகள் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர். பாஸ்டியன் ஹோட்டல் தொடர்பான வரிஏய்ப்பு புகாரில் இச்சோதனை நடந்து வருவதாக முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஹோட்டலின் உரிமையாளர்களில் ஒருவராக ஷில்பா உள்ளார். அதேநேரம், பெங்களூருவில் உள்ள பாஸ்டான் ஹோட்டலிலும் IT அதிகாரிகள் சோதனை நடத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.
News December 18, 2025
தீக்குளித்து உயிரிழந்த பக்தர்: அண்ணாமலை வருத்தம்

மதுரை, நரிமேடு பகுதியை சேர்ந்த பூர்ண சந்திரன் என்பவர் தீக்குளித்து தற்கொலை செய்துள்ளார். இந்நிலையில், திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபம் ஏற்றுவதை தடை செய்த திமுக அரசை கண்டித்து பூர்ண சந்திரன் என்ற முருக பக்தர் உயிரிழந்தது வருத்தம் அளிப்பதாக அண்ணாமலை தெரிவித்துள்ளார். வழக்கு கோர்ட்டில் உள்ளது, கோர்ட் மீது அனைவருக்கும் நம்பிக்கை இருக்கிறது என்றும் குறிப்பிட்டுள்ளார். *தற்கொலை எதற்கும் தீர்வல்ல


