News August 31, 2025

இனி எலெக்ட்ரிக் கார்களின் விலை உயரும்?

image

ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் வரும் செப்., 3 – 4-ம் தேதிகளில் நடைபெற உள்ளது. இதில் எலெக்ட்ரிக் கார்களுக்கான ஜிஎஸ்டி தற்போது 5% இருக்கும் நிலையில், அதை 18% உயர்த்தப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், ₹20 முதல் ₹40 லட்சம் வரையிலான எலெக்ட்ரிக் கார்களின் விலை உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேவேளையில் ₹20 லட்சத்திற்கு குறைவான கார்களுக்கான ஜிஎஸ்டி 5% சதவீதமாகவே இருக்கும் என கூறப்படுகிறது.

Similar News

News September 3, 2025

BREAKING: வைரஸ் பரவல்.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

image

தமிழகத்தின் பல மாவட்டங்களில் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்நிலையில், காய்ச்சல் பாதிப்பால் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியவர்களையும் கண்காணிக்க மாவட்ட சுகாதார அதிகாரிகளுக்கு மாநில சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. வைரஸ் பரவலை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. பொது இடங்களுக்கு செல்பவர்கள் மாஸ்க் அணியுமாறு நேற்று அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கது.

News September 3, 2025

திருமணத்துக்கு அரசே பணம் கொடுக்கும் செம்ம திட்டம்!

image

சாதி மறுப்பு திருமணங்களை செய்யும் பட்டியலின சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கு Dr.அம்பேத்கர் கலப்பு திருமண உதவித் திட்டத்தில் ₹2.50 லட்சம் நிதியுதவி வழங்கப்படுகிறது. இதனை பெற, தம்பதியருள் ஒருவர் SC/ST-ஆகவும், மற்றொருவர் BC/MBC-ஆகவும் இருக்க வேண்டும். தம்பதியினரின் மொத்த ஆண்டு வருமானம் ₹5 லட்சத்துக்கு மிகாமல் இருந்தால், திருமணமான 1 ஆண்டுக்குள் ambedkarfoundation@nic.in -ல் விண்ணப்பிக்கலாம்.

News September 3, 2025

15,320 பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் என CM நம்பிக்கை

image

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு ஐரோப்பிய பயணம் துணை நிற்கும் என CM ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழ் உறவுகள் அளித்திட்ட அன்பும், ஜெர்மனியில் ஈர்த்த முதலீடுகளும் கொடுத்திருக்கும் ஊக்கத்துடன் இங்கிலாந்து சென்றுள்ளதாகவும் கூறியுள்ளார். 26 நிறுவனங்களுடன் ₹15,320 பேருக்கு வேலைவாய்ப்பு அளித்திடும் வகையில் 7,020 கோடி முதலீட்டுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும் X தள பதிவில் பகிர்ந்துள்ளார்.

error: Content is protected !!