News April 28, 2025
பழைய ஓய்வூதிய திட்டம் அமலுக்கு வருமா?

பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றனர். அரசு இதனை கருத்தில் கொண்டு 3 வகை ஓய்வூதிய திட்டங்கள் குறித்து ஆராய குழு அமைத்திருந்தது. இந்த குழு செப்டம்பரில் தனது அறிக்கையை அரசிடம் சமர்ப்பிக்கும் என CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதனை அடுத்து, பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவருவது குறித்து அரசு பரிசீலிக்கும்.
Similar News
News December 17, 2025
இருமொழிக் கொள்கையில் திமுக அரசு வெளி வேஷம்: EPS

நவோதயா பள்ளி விவகாரத்தில் திமுக அரசு இரட்டை வேடம் போடுவதாக EPS சாடியுள்ளார். TN-ல் நவோதயா பள்ளிகள் அமைக்க உத்தரவிட்ட சென்னை ஐகோர்ட்டின் ஆணைக்கு எதிரான மேல்முறையீட்டு மனுவை SC கடந்த 15-ம் தேதி தள்ளுபடி செய்தது. இவ்வழக்கில் முறையாக வாதிடாமல் TN அரசு கோட்டை விட்டதாக EPS அறிக்கை வெளியிட்டுள்ளார். மேலும், இருமொழி கொள்கையில் பொம்மை முதல்வரின் குட்டு மக்களுக்கு புரிந்துவிட்டதாகவும் விமர்சித்துள்ளார்.
News December 17, 2025
ரேஷன் கடையில் புதிய பொருள்.. அமைச்சர் அறிவிப்பு

ரேஷன் கடைகளில் பாமாயிலுக்கு பதில் தேங்காய் எண்ணெய் வழங்கப்பட வேண்டுமென்பது நீண்ட நாள்களாகவே தென்னை விவசாயிகளின் கோரிக்கையாக உள்ளது. இந்நிலையில், இத்திட்டம் பரிசீலனையில் உள்ளதாக அமைச்சர் சக்கரபாணி தனியார் ஊடகத்திற்கு அளித்த பேட்டியில் கூறியுள்ளார். அத்துடன், அரை லிட்டருக்கான தொகையில் பாதியை மானியமாக வழங்கி, மீதியை விலையாக நிர்ணயிக்கலாம் என்று ஆலோசிக்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார்.
News December 17, 2025
மகளிர் உரிமைத் தொகை உயர்வு.. NEW UPDATE

நிச்சயமாக மகளிர் உரிமைத்தொகை உயரும் என CM ஸ்டாலின் ஒன்றுக்கு 2 முறை கூறியதில் இருந்தே, <<18565227>>₹2,000<<>> வரை உயர்த்தப்படலாம் என தகவல்கள் வெளியாகி வருகின்றன. இந்நிலையில், முதியோர்களுக்கான உதவித்தொகையை உயர்த்தியது போல, மகளிர் உரிமைத்தொகையும் சில நூறுகள் உயர்த்தப்படலாம் என தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


