News June 24, 2024

இடைத்தேர்தலில் கள்ளக்குறிச்சி சம்பவம் எதிரொலிக்குமா?

image

கள்ளக்குறிச்சியில் விஷச்சாராயம் குடித்த 55க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சையில் உள்ளனர். விக்கிரவாண்டி தொகுதியில் வருகிற 10ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், இந்த அசம்பாவிதம் நேர்ந்துள்ளது. இதனை இடைத்தேர்தல் பிரசாரத்தில் திமுகவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் பயன்படுத்தினால், அது தேர்தல் முடிவை பாதிக்குமா, இல்லையா என்பதை பொறுத்திருந்து காணலாம்.

Similar News

News September 14, 2025

காலையில் எழுந்தவுடன் செய்யக்கூடாத விஷயங்கள்

image

காலையில் எழுந்ததும் நாம் என்ன செய்கிறோம் என்ற விஷயம் தான் நமது நாளே எப்படி இருக்கும் என்பதை தீர்மானிக்கிறது. உதாரணத்துக்கு, காலையில் எழும்போதே பரபரப்பாக எழுந்தால், அன்றைய நாளே நிதானமாக போகாது, செய்யும் விஷயங்களை எல்லாம் பதற்றத்தோடே செய்வீர்கள். இதுபோல, காலையில் எழுந்ததும் செய்யவே கூடாத பல விஷயங்கள் இருக்கிறது. அது என்ன என்பதை SWIPE செய்து தெரிந்துகொள்ளுங்கள். நண்பர்களுக்கும் SHARE பண்ணுங்க.

News September 14, 2025

இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும்: ப.சிதம்பரம்

image

இந்தியாவிலும் புரட்சி வெடிக்காமல் இருப்பதற்கு, நாம் இன்னும் ஜனநாயக நாடாக இருப்பதே காரணம் என்று ப.சிதம்பரம் கூறியுள்ளார். சிவகங்கையில் நிகழ்வு ஒன்றில் பேசிய அவர், பசி, வேலையின்மை, வறுமை அதிகரித்துவிட்டால் இந்தியாவிலும் புரட்சி வெடிக்கும் என தெரிவித்துள்ளார். ஆனால், இது எப்போது வெடிக்கும், எங்கு வெடிக்கும், அப்போது யார் தலைமை தாங்குவார்கள் என்று தன்னால் கூற முடியாது என்றார்.

News September 14, 2025

மகளிர் உரிமைத் தொகை: CM ஸ்டாலின் கொடுத்த அப்டேட்

image

மகளிர் உரிமைத் தொகை குறித்து அதிகாரிகளுக்கு CM ஸ்டாலின் முக்கியமான உத்தரவு பிறப்பித்துள்ளார். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் செயல்பாடுகள் பற்றி தலைமை செயலகத்தில் CM ஆய்வு மேற்கொண்டார். அப்போது மகளிர் உரிமைத் தொகை தொடர்பான கள ஆய்வுகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார். எனவே, உங்களுடன் ஸ்டாலின் முகாமில் உரிமைத் தொகை கோரி விண்ணப்பித்தவர்களுக்கு விரைவில் நற்செய்தி கிடைக்க போகிறது.

error: Content is protected !!