News March 22, 2025
ஐபிஎல் போட்டி இன்று நடக்குமா?

நாடே எதிர்பார்த்து காத்துக் கொண்டிருக்கும் ஐபிஎல் கிரிக்கெட் போட்டி இன்று தொடங்குகிறது. கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் RCB-ம், KKR-ம் மோதும் முதல் போட்டி இரவு 7.30-க்கு தொடங்கும் நிலையில், அங்கு மழை வெளுத்து வாங்கிக் கொண்டிருக்கிறது. மேலும், கொல்கத்தாவில் மிக கனமழைக்கான அலர்ட்டையும் வானிலை மையம் விடுத்திருப்பதால், இன்று போட்டி நடைபெறுமா என ரசிகர்கள் புலம்பி வருகின்றனர்.
Similar News
News March 22, 2025
கூட்டாட்சி பரிசு அல்ல, உரிமை: பிஆர்எஸ்

கூட்டாட்சி என்பது பரிசு அல்ல; உரிமை என தொகுதி மறுசீரமைப்பு கூட்டு நடவடிக்கைக் குழுக் கூட்டத்தில் பிஆர்எஸ் கட்சியின் செயல் தலைவர் ராமராவ் தெரிவித்துள்ளார். உரிமைகளை காக்கும் போராட்டத்திற்கு தமிழ்நாடு ஊக்கமளிக்கிறது என புகழாரம் சூட்டிய அவர், கூட்டாட்சி என்பது மாநிலங்களுக்கான பரிசு அல்ல; உரிமை என்பதை மத்திய அரசுக்கு நினைவூட்டுகிறேன். அடிப்படை உரிமைக்கான போராட்டம் தொடர வேண்டும் என்றார்.
News March 22, 2025
தொகுதி மறுசீரமைப்பு: பிரதமருக்கு ஜெகன் கடிதம்

சென்னையில் திமுக தலைமையில் தொகுதி மறுசீரமைப்புக்கு எதிரான கூட்டு நடவடிக்கைக் குழு கூட்டம் நடந்த நிலையில், ஆந்திர முன்னாள் CM ஜெகன் மோகன் ரெட்டி, பிரதமர் மோடிக்கு கடிதம் எழுதியுள்ளார். நாடாளுமன்றத்தில் எந்த மாநிலத்திற்கும் பிரதிநிதித்துவம் குறையக் கூடாது என வலியுறுத்தியுள்ளார். மேலும், மாநிலங்களின் பிரதிநிதித்துவம் பாதிக்காதவாறு மறுசீரமைப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.
News March 22, 2025
சினிமாவில் செண்டிமெண்ட் பார்த்தாரா உதயநிதி?

சேலம் பின்னணியில் எடுக்கப்படும் படங்கள் ஓடாது என்ற செண்டிமெண்ட் இருப்பதாக சொன்னபோது, உதயநிதி தயக்கம் அடைந்ததாக மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார். ஆனால், என்னுடைய கதையின் மீது நம்பிக்கை வைத்து மாமன்னனில் நடித்தார் எனக் கூறிய மாரி, கதை சொல்லும் விதத்தில், ஒரு மனிதரை மேலே கீழே என்று இழிவாக காட்டக்கூடாது என்ற என்னுடைய சினிமா பாணி, இன்றைக்கு பல இயக்குனர்களுக்கு சிக்கலாக மாறியுள்ளதாகவும் தெரிவித்தார்.