News July 25, 2024
அமித்ஷா மீது வழக்கு தொடர்வேன்: மூத்த வழக்கறிஞர்

தமிழக ஆளுநர் R.N.ரவியின் பதவிக்காலம் ஜூலை 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. இதையடுத்து அவருக்கு மீண்டும் ஆளுநர் பதவி வழங்கப்படுமா? என கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு சென்னை உயர்நீதிமன்ற மூத்த வழக்கறிஞர் துரைசாமி RTI சட்டத்தின் கீழ் மனு அனுப்பியுள்ளார். அதில், “அரசியலமைப்புச் சட்டத்தை மீறி, அவரை மீண்டும் அப்பதவியில் நியமித்தால், வழக்கு தொடர்வேன்” எனக் கூறியுள்ளார்.
Similar News
News March 24, 2026
தேர்தலில் போட்டியிடும் பிரேமலதா

வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் பிரேமலதா போட்டியிடுவாரா, இல்லையா என்ற கேள்வி எழுந்தது. இந்நிலையில், சென்னை தலைமை அலுவலகத்தில் நேற்று தேமுதிக மா.செ.க்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் ரிஷிவந்தியம் அல்லது விருத்தாசலத்தில் பிரேமலதாவும், சாத்தூர் அல்லது விருதுநகரில் விஜய பிரபாகரனும் போட்டியிட வேண்டும் என மா.செ.க்கள் வலியுறுத்தியுள்ளனர். அதற்கு இருவரும் ஓகே சொல்லி இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
News March 24, 2026
வியர்க்குருவுக்கு ‘பவுடர்’ யூஸ் பண்றது சரியா?

சம்மர் சீசனில், வியர்க்குரு வாட்டி வதைத்து விடும். இந்த வியர்க்குருவை சமாளிக்க, பிரத்யேக பவுடர்களை பலர் பயன்படுத்துவார்கள். அந்த பவுடர்களில் Arrow root starch, Corn starch, Menthol, Zinc oxide போன்றவை இருக்க வேண்டும். அப்போது தான், அவை பயன்படுத்தும் போது, இதமாக உணர முடியும். இருப்பினும், இதனை அளவுக்கு அதிகமாக யூஸ் செய்தால், அது சருமத்தில் பிரச்னைகளை உண்டாக்கலாம் எனவும் எச்சரிக்கின்றனர். SHARE.
News March 24, 2026
தேர்தலில் போட்டியிடவில்லை: வைகோ

தன்னுடைய சின்னத்திலேயே மதிமுக களமிறங்கவுள்ள தொகுதியில் வைகோ போட்டியிட வேண்டும் என கட்சியின் நிர்வாகிகள் வலியுறுத்தியதாக <<19452850>>செய்திகள்<<>> வந்தது. இந்நிலையில் ’சட்டப்பேரவையில் உங்கள் குரல் ஒலிக்க வாய்ப்புள்ளதா?’ வைகோவிடமே செய்தியாளர்கள் கேட்டதற்கு, ’ஒலிக்காது’ என ஒற்றை வார்த்தையில் அவர் பதிலளித்துள்ளார். இதனால், வைகோ போட்டியிட வேண்டும் என வலியுறுத்திய நிர்வாகிகள் சற்று அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.


