News March 12, 2025
2025 டிசம்பருக்குள் சென்செக்ஸ் 1.05 லட்சத்தை தாண்டும்?

மும்பை பங்குச்சந்தையில் சென்செக்ஸ் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது. ஆனால் பங்குச்சந்தை முதலீடு கணிப்பு நிறுவனமான மோர்கன் ஸ்டான்லி, சென்செக்ஸ் 2025 டிச.க்குள் 1.05 லட்சத்தை தாண்டும் என கூறியுள்ளது. இது தற்போதைய நிலவரத்தை விட 41% அதிகம். இதேபோல், 2024 டிசம்பரிலும் அது கணித்திருந்தது. உலக அரசியல் சில நாடுகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தினாலும், இந்தியாவுக்கு சாதகமாகவே இருக்குமெனவும் தெரிவித்துள்ளது.
Similar News
News March 13, 2025
ODI WC-2027: ரோஹித்தின் முக்கிய முடிவு?

இந்திய அணியின் கேப்டன் ரோஹித் ஷர்மா முக்கிய முடிவு எடுத்துள்ளதாகத் தெரிகிறது. ODI WC-2027 வரை விளையாட முடிவு செய்துள்ள அவர், உடற்தகுதியில் கவனம் செலுத்த உள்ளார். இதற்காக இந்திய அணியின் உதவிப் பயிற்சியாளர் அபிஷேக் நாயருடன் இணைந்து பணியாற்றவுள்ளதாகவும், அவரிடம் பேட்டிங் மற்றும் ஃபிட்னஸ் டிப்ஸ்களை பெறுவார் என்றும் கூறப்படுகிறது. அபிஷேக் IPLல், தினேஷ் கார்த்திக்கிற்கு வழிகாட்டியாக இருந்தார்.
News March 13, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: அறத்துப்பால் ▶அதிகாரம்: தீவினையச்சம் ▶குறள் எண்: 205 ▶குறள்: இலன்என்று தீயவை செய்யற்க செய்யின் இலனாகும் மற்றும் பெயர்த்து. ▶பொருள்: யான் வறியவன் என்று நினைத்துத் தீய செயல்களைச் செய்யக்கூடாது, செய்தால் மீண்டும் வறியவன் ஆகி வருந்துவான்.
News March 13, 2025
ரூ.4,386 கோடி மோசடி தடுப்பு: மத்திய அரசு

ரூ.4,386 கோடி மோசடி தடுக்கப்பட்டு இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதுகுறித்து மாநிலங்களவையில் மத்திய இணையமைச்சர் சஞ்சய் பண்டி குமார் தாக்கல் செய்துள்ள பதிலில், மோசடி குறித்து தொலைபேசி மூலம் 13.36 லட்சம் புகார்கள் சைபர் க்ரைம் தடுப்பு மையத்திற்கு வந்ததாக கூறப்பட்டுள்ளது. மோசடிக்கு பயன்படுத்தப்பட்ட 7.81 லட்சம் சிம்கார்டுகளின் சேவை துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.