News March 29, 2024
KKR-ஐ பழிதீர்க்குமா RCB

ஐபிஎல் தொடரில் இன்று RCB-KKR அணிகள் மோதும் போட்டி பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் நடைபெறுகிறது. முன்னதாக 2015ஆம் ஆண்டு பெங்களூரு மைதானத்தில் நடந்த போட்டியில் KKR அணியை RCB வீழ்த்தியது. அதன் பிறகு 2017, 2018, 2019, 2023ஆம் ஆண்டுகளில் இந்த மைதானத்தில் நடந்த அனைத்துப் போட்டிகளிலும் RCB அணி தோல்வியையே தழுவியது. இதனால், இன்றைய போட்டியில் KKR அணியை RCB வெல்லுமா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.
Similar News
News August 21, 2025
தவெக மாநாட்டில் 40 அடி உயர கொடிக்கம்பம்

தவெக மாநாட்டில் புதிதாக 40 அடி உயர கொடிக்கம்பம் நிறுவப்பட்டது. நேற்று பிற்பகல் <<17463695>>100 அடி உயர கொடிக்கம்பத்தை<<>> கிரேன் கொண்டு நிறுவ முயன்ற போது கீழே விழுந்து சேதமடைந்தது. இதனால் கொடிக்கம்பம் நிறுவும் பணியில் பின்னடைவு ஏற்பட்டது. இதையடுத்து மாநாட்டு மேடைக்கு அருகே 40 அடி உயர கொடிக்கம்பத்தை நிறுவியுள்ளனர். புதிய இடத்தை N.ஆனந்தும், ஆதவ் அர்ஜுனாவும் பார்வையிட்டனர்.
News August 21, 2025
கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுகிறேன்: ரஹானே

மும்பை அணியின் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகுவதாக அஜிங்கியா ரஹானே அறிவித்துள்ளார். எதிர்வரும் உள்ளூர் போட்டிகளை கருத்தில்கொண்டு இளம் வீரர்களுக்காக இம்முடிவை எடுத்துள்ளதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். 2023 – 2024 ரஞ்சி கோப்பை வின்னிங் கேப்டனான இவர், இரானி டிராபியையும் வென்றார். இதனால் 2026 IPL சீசனில், ரஹானே KKR அணியின் கேப்டனாக தொடர்வாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.
News August 21, 2025
இன்னும் சற்றுநேரத்தில் … ரெடியா இருங்க

தவெக மாநாடு சற்றுநேரத்தில் தொடங்கவிருக்கிறது. நேற்று இரவு முதலே மாநாட்டு திடலில் வெயிலையும் பொருட்படுத்தாமல், விஜய்யை காண தொண்டர்கள் உற்சாகமாக காத்திருக்கின்றனர். வெயில் தாக்கம் அதிகமாக இருப்பதால், 4 மணிக்கு பதில் ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே (3 மணிக்கு) மாநாட்டு மேடைக்கு விஜய் வருகிறார். இதன் காரணமாக தற்போது ஆதவ், என்.ஆனந்த் வாக்கி டாக்கியுடன் மாநாடு மேடைக்கு வந்து ஆய்வு செய்கின்றனர்.