News November 22, 2024
மக்களவையில் பிரியங்கா குரல் ஒலிக்குமா?

2019, 2024 தேர்தல்களில் வயநாட்டில் 2 முறை போட்டியிட்டு ராகுல் காந்தி வெற்றி வாகை சூடினார். ஆனால் 2024இல் ரேபரேலியிலும் வென்றதால் வயநாடு எம்பி பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து அங்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் பிரியங்கா போட்டியிடுகிறார். இதில் பிரியங்கா வென்றால், மக்களவையில் ராகுல், பிரியங்கா குரல் கூட்டாக ஒலிக்கும். இத்தேர்தல் முடிவு நாளை வெளியாகவுள்ளது. முடிவை அறிய WAY2NEWS உடன் இணைந்திருங்க.
Similar News
News November 2, 2025
பிரபல நடிகர் காலமானார்

ஜேம்ஸ்பாண்ட் படத்தில் வில்லனாக நடித்து உலகம் முழுவதும் புகழ்பெற்ற டெக்கி கார்யோ(72) காலமானார். பேட் பாய்ஸ், நோஸ்ட்ராடாமஸ், த பேட்ரியாட் என பிரபலமான பல படங்களில் இவர் நடித்துள்ளார். பிரான்ஸில் பிறந்த கார்யோ, த மெசஞ்சர், கிஸ் ஆஃப் டிராகன் உள்ளிட்ட பிரெஞ்சு படங்களிலும் நடித்துள்ளார். அவரது மறைவுக்கு ஹாலிவுட் திரைபிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். RIP
News November 2, 2025
மல்லையா, நீரவ் மோடியை நாடு கடத்துவது எப்போது?

நிதி மோசடியில் ஈடுபட்ட 42 பேர், கடந்த 2 ஆண்டுகளில் நாடு கடத்தப்பட்டுள்ளதாக மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் தப்பியுள்ளவர்கள், அந்தந்த நாட்டு சட்ட திட்டங்களுக்கு உட்பட்டு விரைவில் இந்தியாவிற்கு நாடு கடத்தப்படுவார்கள் என்றும் அவர் உறுதியளித்துள்ளார். விஜய் மல்லையா, நீரவ் மோடி, மெகுல் சோக்சி உள்ளிட்ட பலர் வெளிநாடுகளுக்கு தப்பி சென்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
News November 2, 2025
ஆந்திரா கூட்டநெரிசல்: கோயில் நிர்வாகம் சொல்வது என்ன?

<<18173836>>ஆந்திர கோயில் கூட்டநெரிசல் <<>>விவகாரத்தில், கோயில் நிர்வாகம் அரசுக்கு தகவல் தெரிவித்து இருந்தால், உயிரிழப்புகளை தடுத்திருக்கலாம் என அம்மாநில CM சந்திரபாபு நாயுடு தெரிவித்து இருந்தார். ஆனால், சொந்த நிலத்தில் கோயில் கட்டிய நான் ஏன் அரசுக்கு தெரிவிக்க வேண்டும் என அக்கோயிலை கட்டிய ஹரி முகுந்தா பாண்டா கூறியுள்ளார். மேலும், எத்தனை வழக்குகளை போட்டாலும் தனக்கு கவலை இல்லை என்றும் தெரிவித்துள்ளார்.


