News August 18, 2024
பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த போவதில்லை: ஜெய்ஷா

இந்தியாவில் இனி பகலிரவு டெஸ்ட் போட்டிகளை நடத்த போவதில்லை என BCCI செயலாளார் ஜெய்ஷா தெரிவித்துள்ளார். 5 நாள்களுக்கும் சேர்த்து ரசிகர்கள் டிக்கெட் வாங்கும் நிலையில், போட்டி 2, 3 நாள்களுக்குள் முடிந்து விடுவதாகவும், இதனால் மீதம் உள்ள நாள்களுக்கான டிக்கெட் விலையை தங்களால் கொடுக்க முடியாது என்றும் அவர் கூறியுள்ளார். மேலும், ரசிகர்களின் நலனுக்காக இந்த நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
Similar News
News November 24, 2025
ஷுப்மன் கில் எப்போது அணிக்கு திரும்புவார்?

தெ.ஆ., அணிக்கு எதிரான முதல் டெஸ்டில் ஷுப்மன் கில்லுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதனால் தீவிர சிகிச்சையில் இருந்துவரும் அவர் இதுவரை எந்த போட்டியிலும் பங்கேற்கவில்லை. இந்நிலையில் அவர் மீண்டும் எப்போது அணிக்கு திரும்புவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. தற்போது மும்பையில் பிரபல முதுகுத்தண்டுவட சிகிச்சை நிபுணரிடம் சிகிச்சை பெற்றுவரும் அவர், 2026-ல் தான் அணிக்கு திரும்புவார் என கூறப்படுகிறது.
News November 24, 2025
BREAKING: மொத்தம் 17 மாவட்டங்களில் விடுமுறை

கனமழை எதிரொலியால் மேலும் 3 மாவட்டத்திற்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகியுள்ளது. ஏற்கெனவே, <<18372068>>14 மாவட்டங்களுக்கு<<>> விடுமுறை அளிக்கப்பட்ட நிலையில், தற்போது புதிதாக மதுரை, அரியலூர், கடலூர் ஆகிய 3 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளித்து அந்தந்த மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளனர். இன்னும் சில பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
News November 24, 2025
திமுகவுக்கு, தவெக என்றாலே ஒரு உறுத்தல்: டிடிவி தினகரன்

திமுகவுக்கு தவெக என்றாலே உறுத்தலாக இருப்பது அவர்களின் பேச்சிலேயே தெரிவதாக டிடிவி தினகரன் கூறியுள்ளார். கூட்டணி பற்றி பல கட்சிகள் பேசுவதாக கூறிய அவர், அமமுக இடம்பெறும் கூட்டணி வெற்றிக் கூட்டணியாக இருக்கும் என மீண்டும் உறுதியாக கூறியுள்ளார். சமீபகாலமாக இவர் விஜய்க்கு ஆதரவான கருத்துகளை பேசி வருவதால், அமமுக தவெக உடன் கூட்டணி அமைக்க வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறிவருகின்றனர்.


