News May 25, 2024
எந்த மிரட்டலுக்கும் அஞ்ச மாட்டேன்: தேஜஸ்வி

தன்னை யாரும் மிரட்ட முடியாது என பிஹார் முன்னாள் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். தோல்வி அடைந்தால் சிறை செல்ல நேரிடும் என்ற மோடியின் மிரட்டலுக்கு அஞ்சவில்லை என்ற அவர், 34 வயது இளைஞனை 75 வயது முதியவர் மிரட்டுகிறார் எனக் கூறினார். மேலும் பேசிய அவர், கடவுள் கிருஷ்ணர் கூட ஜெயிலில் தான் பிறந்தார் என்றார். முன்னதாக, தேர்தலுக்கு பிறகு பலர் சிறை செல்வார்கள் என மோடி பரப்புரையில் கூறினார்.
Similar News
News March 3, 2026
தங்கம் விலை மளமளவென குறைந்தது

அமெரிக்கா, இஸ்ரேல் – ஈரான் போரின் காரணமாக சர்வதேச சந்தையில் கடந்த 2 நாள்களில் தங்கம் விலை உயர்ந்தது. ஆனால், இன்றைய நிலவரப்படி 1 அவுன்ஸ் (28g) தங்கம் $20 (இந்திய மதிப்பில் ₹1,831) குறைந்து $5,352.60-க்கு விற்பனையாகிறது. அதேபோல வெள்ளியின் விலையும் $5 குறைந்து $90.36-க்கு விற்பனையாகிறது. இதே நிலை நீடித்தால் இந்திய சந்தையிலும் தங்கத்தின் விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளது.
News March 3, 2026
World Dosa day: தோசை உருவான வரலாறு தெரியுமா..?

வாரத்தில் 7 நாள் தோசை கொடுத்தாலும் சாப்பிடுவேன் என சொல்லும் ஆள்கள்தான் அதிகம். இன்று உலக தோசை தினம். சரியாக முதன்முதலில் எப்போது, எங்கு தோசை உருவானது என்ற எந்த தகவலும் இல்லை. ஆனால், சிலப்பதிகாரம் போன்ற நூல்களிலும் தோசை போன்ற ஒரு உணவின் குறிப்பு இடம்பெறுகிறது. அதே போல, 7-ம் நூற்றாண்டில் உடுப்பியின் கோயில் பகுதிகளில் தோசை உருவானதாக சொல்லப்படுகிறது. உங்களுக்கு பிடித்த தோசை வகையை கமெண்ட் பண்ணுங்க!
News March 3, 2026
இந்தியர்களை மீட்க சிறப்பு விமானங்கள்!

வளைகுடா நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க, 10 சிறப்பு விமானங்களை INDIGO இயக்கும் என விமான போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. சவுதி அரேபியாவின் ஜெட்டாவில் இருந்து இந்த விமானங்கள் ஹைதராபாத், மும்பை, டெல்லி வந்தடையும். வளைகுடா நாடுகளை வான்வழியாக ஈரான் தாக்குவதால் அங்குள்ள இந்திய தூதரகங்களிடம் களநிலவரத்தை கேட்டறிந்து, உரிய அனுமதி பெற்ற பிறகே இந்த விமானங்கள் இயக்கப்படும் என கூறப்பட்டுள்ளது.


