News April 5, 2025
மோடி பயணத்தால் மீன்பிடி உரிமை கிடைக்குமா?

பிரதமர் மோடி இலங்கை சென்றுள்ள நிலையில், TN மீனவர்கள் பிரச்னைக்கு தீர்வு கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு வலுவாக எழுந்துள்ளது. ஆழ்கடலில் மீன்பிடி உரிமை, கச்சத்தீவு உள்ளிட்ட கோரிக்கைகள் மீண்டும் வலுத்துள்ளன. வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர் கூட மீன்பிடி உரிமையை நாம் பெற்றே ஆக வேண்டும் என வலியுறுத்தியிருந்தார். திமுக MP டி.ஆர்.பாலுவும் கச்சத்தீவுக்காக மக்களவையில் குரல் எழுப்பியிருந்தார்.
Similar News
News November 29, 2025
22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு: IMD

7 கிமீ., வேகத்தில் நகர்ந்து வரும் ‘டிட்வா’ புயல், சென்னையில் இருந்து 450 கிமீ., தொலைவில் நிலைகொண்டுள்ளது. இதனால், சென்னை, காஞ்சி, குமரி, மதுரை, நாகை, திருச்சி, காரைக்கால் உள்ளிட்ட 22 மாவட்டங்களில், காலை 4 மணி வரை இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக IMD கணித்துள்ளது. மேலும், கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, செங்கை மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
News November 29, 2025
பாலய்யாவுக்கு பதில் விஜய் சேதுபதியா?

‘ஜெயிலர் 2’ படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாக அண்மையில் தகவல்கள் வெளியாகின. அதேநேரம், இப்படத்தில் பாலய்யா கேமியோ ரோலில் நடிப்பதாக கூறப்பட்டது. இந்நிலையில், பாலய்யா படத்தில் இருந்து விலகியதாகவும், அந்த ரோலில் தான் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் ஷூட்டிங் 2026, பிப்ரவரியில் முடிவடைந்து, சம்மரில் ரிலீஸாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. யாரெல்லாம் வெயிட்டிங்?
News November 29, 2025
அரிஸ்டாட்டில் பொன்மொழிகள்

*தன் எதிரிகளை வெல்பவனை விட, தன் ஆசைகளை வெல்பவனே தைரியமானவன் என்று நான் எண்ணுகிறேன்.
*அமைதி, போரை விட மிகவும் கடினமானது.
*உங்கள் மகிழ்ச்சி உங்களை மட்டுமே சார்ந்துள்ளது.
*இயற்கை, ஒரு நோக்கம் இல்லாமல் எதையுமே உருவாக்காது.
*கல்வியின் வேர்கள் கசப்பானவை, ஆனால் அதன் பழங்கள் இனிப்பானவை. *உடலை குணப்படுத்துவதற்கு முன், முதலில் மனதை குணப்படுத்த வேண்டும்.


