News April 23, 2025

பாக்.-ஐ செதில் செதிலாக தகர்க்கும் இந்தியா?

image

பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாகிஸ்தானை ராணுவ ரீதியாகவும், ராஜதந்திர ரீதியாகவும் பழிவாங்க இந்தியா திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. *பாக். ராணுவம், லஷ்கர் – இ – தொய்பா முகாம்களில் தாக்குதல். *வர்த்தகத்தை முழுமையாக ரத்து செய்வது. *சிந்து நதிநீர் ஒப்பந்தம் ரத்து. *ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர உறுப்பினர்களாக உள்ள P5 நாடுகளிடம் பாகிஸ்தான் உண்மை முகத்தை அம்பலப்படுத்துவது.

Similar News

News September 12, 2025

₹450 கோடியில் அமையும் தொழிற்சாலைக்கு CM அடிக்கல்

image

ஓசூரில் ₹450 கோடியில் அமையும் டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் விரிவாக்க திட்டங்களுக்கு CM ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். பின்னர் நிகழ்ச்சியில் பேசிய அவர், எலக்ட்ரானிக்ஸ் பொருள்கள் ஏற்றுமதியில் தமிழ்நாடு இந்தியாவிலேயே முன்னணி மாநிலமாக திகழ்வதாக கூறினார். டெல்டா எலக்ட்ரானிக்ஸ் நிறுவன விரிவாக்கம் மூலம், 400-க்கும் மேற்பட்டோருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் CM உறுதியளித்தார்.

News September 12, 2025

அடுத்த BCCI தலைவர் சச்சினா? அவரே கொடுத்த விளக்கம்

image

சச்சின் தான் அடுத்த BCCI தலைவர் என கடந்த சில நாள்களாக தகவல் பரவி வந்தது. ஆனால், இந்த தகவலை சச்சின் மறுத்துள்ளார். அவரது SRT Sports Management Private Ltd வெளியிட்ட அறிக்கையில், சச்சின் தொடர்பான வெளியான தகவல் தங்கள் பார்வைக்கு வந்ததாகவும், ஆனால் அவை அனைத்தும் வதந்திகள் என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும், இது போன்ற தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக் கொண்டுள்ளது.

News September 12, 2025

உத்தராகண்டிற்கு ₹1,200 கோடி நிவாரணம்

image

கனமழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட உத்தராகண்ட் மாநிலத்திற்கு PM மோடி ₹1,200 கோடி நிவாரணம் அறிவித்துள்ளார். டேராடூனில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை இன்று ஆய்வு செய்த அவர், வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு தலா ₹2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு தலா ₹50,000 நிவாரணம் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார். முன்னதாக, பஞ்சாப்பிற்கு ₹1,500 கோடி, இமாச்சலுக்கு ₹1,600 கோடி அறிவித்து இருந்தார்.

error: Content is protected !!