News August 2, 2024

வெற்றிக் கணக்கை தொடருமா இந்தியா?

image

இலங்கை – இந்தியா இடையிலான 3 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் கிரிக்கெட் தொடர் இன்று தொடங்குகிறது. முதல் போட்டி இன்று மதியம் 2.30 மணிக்கு நடைபெறுகிறது. டி20 போட்டிகளில் ஓய்வை அறிவித்த பின் ரோஹித், கோலி களமிறங்க உள்ளதால் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மேலும், ஸ்ரேயஸ், கே.எல்.ராகுல் அணியில் மீண்டும் இணைந்துள்ளனர். முன்னதாக, இலங்கைக்கு எதிரான 3 டி20 போட்டிகளிலும் இந்திய அணி வென்றது குறிப்பிடத்தக்கது.

Similar News

News November 16, 2025

இந்த செயல்களை செய்தால் ஜாலியாக இருக்கலாம்

image

நமக்கு பிடித்த செயல்களைச் செய்வதால் உடலும் மனமும் ஓய்வு பெறுகிறது. இது தினசரி பதட்டத்தை குறைத்து, மனநிறைவை அதிகரிக்கிறது. வாழ்க்கை எவ்வளவு பிஸியாக இருந்தாலும், சிறிது நேரம் நமக்காக ஒதுக்குவது ஆரோக்கியத்திற்கும் மகிழ்ச்சிக்கும் பெரிய பலன் தரும். அந்த வகையில், என்னென்ன செயல்களில் நாம் ஈடுபடுவது நல்லது என்று, மேலே போட்டோக்களில் பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE

News November 16, 2025

இரவில் விஜய் கட்சிக்கு வந்த அதிர்ச்சி

image

SIR-ஐ எதிர்த்து தமிழகம் முழுவதும் இன்று போராட்டம் நடத்தப்போவதாக தவெக அறிவித்து இருந்தது. இன்று கனமழை பெய்யும் என அறிவிக்கப்பட்டதால், போராட்டம் நடக்கும் பகுதிகளில் முன்னெச்சரிக்கையாக பந்தல் அமைத்தனர். ஆனால், போராட்டம் நடத்த மட்டுமே அனுமதி, பந்தல் அமைக்க இல்லை என போலீசார் கூறியதால், பந்தல் அகற்றப்பட்டது. இதையடுத்து தவெக என்றாலே போலீசார் கெடுபிடி காட்டுவதாக தொண்டர்கள் குற்றஞ்சாட்டி வருகின்றனர்.

News November 16, 2025

சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறப்பு

image

நடப்பு மண்டல, மகர விளக்கு சீசனுக்காக, சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று மாலை 5:00 மணிக்கு திறக்கப்படுகிறது. டிசம்பர் 27-ல் மண்டல பூஜையும், ஜன.14-ல் மகர விளக்கு பூஜையும் நடைபெறவுள்ளது. எனவே, மாலை அணிந்து விரதம் இருப்போர், சுவாமியை தரிசிக்க திட்டமிட்டுக் கொள்ளலாம். 18-ம் படிக்கு மேல் சுவாமி சன்னதி வரை செல்போன், கேமரா ஆகியவை பயன்படுத்த தேவஸ்தானம் தடை விதித்துள்ளது.

error: Content is protected !!