News December 27, 2024
Follow Onஐ தவிர்க்குமா இந்தியா?

டெஸ்ட் போட்டிகளில் எதிரணியின் ஸ்கோரை விட 200 ரன்கள் குறைவாக முதல் இன்னிங்சில் ஒரு அணி ஆட்டமிழந்தால், அந்த அணி பாலோ ஆன் ஆட அழைக்கப்படும். அப்படி நடைபெற்று வரும் 4வது BGT டெஸ்டில் இந்திய அணி இந்த போட்டியில் 275 ரன்களை எடுக்க வேண்டும். தற்போது 164/5 எடுத்து இந்தியா தடுமாறும் நிலையில், நாளை பாலோ ஆனை தவிர்க்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஜடேஜா – பண்ட் ஆகியோர் இந்தியாவை காப்பாற்றுவார்களா?
Similar News
News August 15, 2025
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: போக்சோவில் நடிகை கைது

கேரளாவை சேர்ந்தவர் நடிகை மினு முனிர். இவர் தமிழிலும் சொற்பமான படங்களில் நடித்துள்ளார். கடந்த 2014-ம் ஆண்டு 14 வயது சிறுமியை சினிமாவில் நடிக்க வைப்பதாக கூறி சென்னைக்கு அழைத்து வந்து விடுதியில் 4 பேரை அறிமுகம் செய்துள்ளார். அவர்கள் சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததற்கு உடந்தையாகவும் இவர் இருந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக சிறுமி அளித்த புகாரில் தற்போது அவர் போக்சோவில் கைதாகியுள்ளார்.
News August 15, 2025
தொடர் தோல்வியால் அதிரடி மாற்றத்தில் இறங்கிய LSG

IPL 18-வது சீசனில் LSG அணியின் ஆலோசகராக இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான ஜாகீர் கான் நியமிக்கப்பட்டார். இருப்பினும் அந்த அணியால் பிளே ஆப்-க்கு தகுதி பெறவில்லை. இதனால் ஜாகீர்கான் அப்பதவியில் இருந்து விலக முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. லக்னோ அணியின் பவுலிங் பயிற்சியாளராக பரத் அருண் ஒப்பந்தமான நிலையில், புதிய ஆலோசகரை தேர்வு செய்யும் பணியில் லக்னோ அணி நிர்வாகம் இறங்கியுள்ளது.
News August 15, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: அறிவுடைமை ▶குறள் எண்: 428 ▶குறள்: அஞ்சுவ தஞ்சாமை பேதைமை அஞ்சுவது
அஞ்சல் அறிவார் தொழில். ▶ பொருள்: அறிவில்லாதவர்கள் தான் அஞ்ச வேண்டியதற்கு அஞ்ச மாட்டார்கள். அறிஞர்கள் மட்டுமே அஞ்ச வேண்டியதற்கு அஞ்சுவார்கள்.