News October 15, 2025
தண்ணீர் குடிக்காவிட்டால் தலைவலி ஏற்படுமா?

அன்றாடம் போதுமான அளவு தண்ணீர் குடிக்க தவறினால் நமக்கு தலைவலி ஏற்படும் என்பது உண்மையா? ஆம். நம் உடலில் நீரிழப்பு ஏற்பட்டால் தலைவலி ஏற்படும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். இதனால் மூளை சுருங்குவதோடு, நரம்புகளில் அழுத்தம் உண்டாகி சோர்வு, தலைச்சுற்றல் மற்றும் குமட்டல் ஏற்படும். எனவே, அன்றாடம் சராசரியாக 3 லிட்டர் தண்ணீர் மற்றும் ஜூஸ் உள்ளிட்ட நீர்ச்சத்து நிறைந்த பானங்களை அருந்தலாம்.
Similar News
News October 16, 2025
ஒற்றைத் தலைவலியை குறைக்க உதவும் பானம்

ஒரு பாத்திரத்தில் 300 மில்லி அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடுங்கள். அதில் மிளகு, இடித்த இஞ்சி சேர்த்து கொள்ளுங்கள். இஞ்சி நன்கு பச்சை வாசனை போகும் வரை கொதித்த பிறகு, அதில் மஞ்சள் பொடியை சேர்த்து அடுப்பை அணைத்துவிடுங்கள்.
கொஞ்சம் வெதுவெதுப்பான நிலைக்கு வந்த பிறகு அதில் எலுமிச்சை சாறை பிழிந்து கொள்ளுங்கள்.
நன்கு கலந்து சூடாக அப்படியே குடித்துப் பாருங்கள். உங்கள் ஒற்றைத் தலைவலி குறைய ஆரம்பிக்கும்.
News October 16, 2025
₹12,400 கோடி சொத்து இருந்தும் இது தேவையா?

₹12,400 கோடி சொத்து இருந்தும் பான் மசாலா விளம்பரங்களில் ஏன் நடிக்கிறீர்கள் என்று, நடிகர் ஷாருக்கானுக்கு பிரபல யூடியூபர் துருவ் ரதீ கேள்வி எழுப்பியுள்ளார். பான் மசாலா விளம்பரத்திற்காக ஷாருக் ₹100 கோடி சம்பளம் பெற்றதாக கூறப்படுகிறது. இந்நிலையில், ₹12,400 கோடி சொத்து இருக்கும்போது, கூடுதலாக ₹100 கோடி தேவையா எனவும், உங்களுக்கு சமூக பொறுப்பு இல்லையா எனவும் யூடியூபர் துருவ் கேள்வி எழுப்பியுள்ளார்.
News October 16, 2025
அண்ணாமலைக்கு நன்றி தெரிவித்த தனுஷ்

‘இட்லி கடை’ படத்தை பாராட்டிய அண்ணாமலைக்கு தனுஷ் நன்றி கூறியுள்ளார். படத்தில் எழுத்து, இயக்கம், நடிப்பு என மூன்றையும் சிறப்பாக கையாண்டு அற்புதமான படைப்பை, தனுஷ் வெளிக்கொண்டு வந்திருப்பதாக அண்ணாமலை கூறியிருந்தார். இதற்கு X-ல் பதிலளித்துள்ள தனுஷ், உங்களின் அன்பான வார்த்தைகளுக்கும், பாராட்டுகளுக்கும் படக்குழு சார்பில் நன்றி என்றும் நேரம் ஒதுக்கி படம் பார்த்ததற்கு மகிழ்ச்சி எனவும் தெரிவித்துள்ளார்.