News July 7, 2025

கூட்டுறவு வங்கிகள் நகைக் கடன் வழங்க மறுப்பா?

image

பாமர மக்களின் அவசர நிதித் தேவையை தீர்த்து வைப்பதே நகைக் கடன் தான். இந்நிலையில், திருவள்ளூர் மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் 3 மாதங்களாக நகைக் கடன் வழங்குவதில்லை என புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து விளக்கம் அளித்த அதிகாரிகள், நிதி நெருக்கடி காரணமாக கடன் வழங்க முடியவில்லை எனத் தெரிவித்துள்ளனர். அரசு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்துகின்றனர். உங்க ஏரியாவுல நகைக் கடன் கிடைக்குதா?

Similar News

News July 7, 2025

8 இடங்களில் சதமடித்த வெயில்… கவனம் தேவை மக்களே!

image

தமிழகம், புதுச்சேரியில் வெப்பநிலை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இன்று சென்னை, வேலூர், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 இடங்களில் வெயில் சதமடித்து (100 டிகிரி பாரன்ஹீட்) மக்களை வாட்டி வதைத்துள்ளது. இந்நிலையில், மேலும் 2 நாள்களுக்கு வெயில் 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது. இதனால், வீட்டில் இருந்து பகல் 11 மணி – மதியம் 3 வரை வெளியே செல்வதை தவிருங்கள் நண்பர்களே..!

News July 7, 2025

2001 தேர்தலை மறந்தாச்சா? திமுகவுக்கு EPS கேள்வி

image

பாஜகவுடன் கூட்டணி வைப்பதை விமர்சிக்கும் மு.க.ஸ்டாலினுக்கு, பழைய சம்பவம் மறந்துவிட்டதா எனக் கேட்டுள்ளார் இபிஎஸ். 1991-ல் பாஜகவோடு கூட்டணி வைத்தீர்களா இல்லையா? 2001 தேர்தலில் கூட்டணி வைத்தீர்களா இல்லையா? நீங்கள் கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி. நாங்கள் கூட்டணி வைத்தால் பாஜக மதவாத கட்சியா? என்றதுடன், நாட்டுக்கு நல்ல திட்டங்கள் தரும் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் என்ன தவறு எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

News July 7, 2025

ரெஸ்ட் எடுங்க பாஸ்…ஆனால்?

image

ஓய்வு நேரம் குறைந்தால், மன அழுத்தம் அதிகரிக்கும் ஆபத்து அதிகம் என அமெரிக்காவின் ஓஹியோ பல்கலை., நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது. குறைந்த ஓய்வு எடுப்பவர்கள், குறைந்த அளவிலேயே மகிழ்ச்சியை அனுபவித்து வருகின்றனராம். அதேநேரம், அளவுக்கு அதிகமாக ஓய்வு எடுப்பதும் உடல், மன நலத்தை பாதிக்குமாம். அதீத ஓய்வால் பிபி, மன அழுத்தம், தூக்கமின்மை, அலர்ஜி போன்ற பாதிப்புகள் ஏற்படலாம். ஆகவே அவசியம் ஓய்வெடுங்க.. அளவாக!

error: Content is protected !!