News April 6, 2024
சிப்காட் விவகாரம் ஆரணியில் வெற்றியைத் தீர்மானிக்குமா?

செய்யாறு சிப்காட் விவகாரத்தில் விவசாயிகளை குண்டர் சட்டத்தில் திமுக அரசு கைதுசெய்தது அனைவரும் அறிந்ததே. விவசாயிகள் & கூலித் தொழிலாளர்கள் பெரும்பான்மையாக கொண்ட ஆரணி தொகுதியில் இது திமுகவின் வெற்றி வாய்ப்பிற்கு பெரும் தலைவலியாக மாறியிருக்கிறது. இதனால், அங்கு வாக்கு கேட்க செல்லும் திமுகவினருக்கு வரவேற்பு இல்லையாம். இதை மையப்படுத்தி இப்போது அதிமுக தீவிர பிரசாரம் மேற்கொள்வதாக தகவல்.
Similar News
News January 18, 2026
விடுபட்டவர்களுக்கு நாளை முதல் பொங்கல் பரிசு ₹3,000

பொங்கல் பரிசுத் தொகுப்பை பெறாத குடும்பங்கள் நாளை(ஜன.19) முதல் ரேஷன் கடைகளில் பெற்றுக் கொள்ளலாம் என அரசு அறிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் மொத்தமுள்ள 2.22 கோடி ரேஷன் அட்டைகளில் ஜன.14-ம் தேதி வரை 2.15 கோடி குடும்பங்கள் மட்டுமே பொங்கல் பரிசை பெற்றுக் கொண்டனர். விடுபட்ட 7 லட்சம் குடும்பங்களுக்கு ₹3,000 ரொக்கம், பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, முழுக் கரும்பு வழங்கப்படவுள்ளன. SHARE IT.
News January 18, 2026
ரோஹித்தின் 5% ரெக்கார்டு கூட இல்லை..

NZ-க்கு எதிரான முதல் 2 ODI-ல் ரோஹித் சொதப்ப, அவர் சரியாக பயிற்சி எடுக்கவில்லை என இந்திய துணை பயிற்சியாளர் ரயான் டென் டோசேட் விமர்சித்திருந்தார். இந்நிலையில், ரோஹித்தின் கரியர் ரெக்கார்டுகளில் 5%-ஐ கூட ரயான் செய்ததில்லை என இந்திய Ex கிரிக்கெட்டர் மனோஜ் திவாரி விமர்சித்துள்ளார். பொதுவெளியில் அணி வீரர் குறித்து இப்படி கருத்து தெரிவிப்பது வீரரை மனதளவில் தளர்வடைய செய்யும் எனவும் அவர் சாடினார்.
News January 18, 2026
அதிமுகவில் இருந்து விலகி திமுகவில் இணைந்தனர்

ஸ்டாலின் முன்னிலையில் ராமநாதபுரம் மாவட்ட அதிமுக நிர்வாகிகள் தங்களை திமுகவில் இணைத்துக் கொண்டனர். மாவட்ட MGR மன்ற இணை செயலாளர்கள் பிச்சை, M.முத்துராமன், நகர அம்மா பேரவை தலைவர் கண்ணன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டோர் இணைந்துள்ளனர். இதன் பின்னணியில், திமுகவில் ஐக்கியமான அதிமுக Ex அமைச்சர் அன்வர் ராஜா செயல்பட்டுள்ளார்.


