News August 24, 2024
பழனி கோயிலில் பண்டாரத்தார் உரிமை மீட்கப்படுமா?

சித்தர் போகர் உருவாக்கிய நவபாஷாண பழனி ஆண்டவருக்கு பூஜை செய்யும் உரிமையை தமிழக அரசு மீட்டுத் தர வேண்டுமென பண்டாரத்தார் சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டாண்டு காலமாக கருவறை வழிபாட்டு உரிமை கொண்ட அம்மக்கள், திருமலை நாயக்கர் ஆட்சியில் கோயிலிலிருந்து வெளியேற்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முத்தமிழ்
முருகன் மாநாடு நடைபெறும் இவ்வேளையில் இக்கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
Similar News
News December 16, 2025
பூவின் மடலாக மிர்னா மேனன்

‘ஜெயிலர்’ திரைப்படம் மூலம் பிரபலமான மிர்னா மேனன், இன்ஸ்டாவில் லேட்டஸ்ட் போட்டோக்களை பதிவிட்டுள்ளார். இதில், கருப்பு நிற உடையும், அலைபாயும் தலைமுடியும் அவரது அழகுக்கு மேலும் அழகு சேர்க்கிறது. சோபாவில் அவரது போஸ், தன்னம்பிக்கை, ஸ்டைல் மற்றும் உறுதி தன்மையை வெளிப்படுத்துகிறது. இந்த போட்டோஸ் உங்களுக்கும் பிடிச்சிருந்தா ஒரு லைக் போடுங்க.
News December 16, 2025
விவசாயிகளுடன் பொங்கல் கொண்டாடவுள்ள PM மோடி

ஜனவரியில் PM மோடி தமிழகம் வரவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. விவசாயிகளுடன் பொங்கல் பண்டிகையை கொண்டாடும் அவர், நயினாரின் யாத்திரை நிறைவு விழாவிலும் பங்கேற்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், பூந்தமல்லி – போரூர் வரையிலான மெட்ரோ ரயில் சேவையை அடுத்த மாதம் PM மோடி தொடங்கி வைக்கவுள்ளாராம். இந்நிகழ்ச்சியில் CM ஸ்டாலினும் கலந்துகொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
News December 16, 2025
தவெக தொண்டர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்

வரும் 18-ம் தேதி ஈரோட்டில் நடைபெற உள்ள மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், பங்கேற்கும் தவெக தொண்டர்களுக்கு கட்சித் தலைமை அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. *குறிப்பிட்ட எண்ணிக்கையில் மட்டுமே பங்கேற்பாளர்கள் அனுமதிக்கப்படுவர். *கர்ப்பிணிகள், குழந்தைகள், முதியோர்களுக்கு அனுமதி இல்லை. *விஜய்யின் வாகனத்தை பின் தொடர கூடாது. *மரங்கள், மின் கம்பங்களில் ஏறக்கூடாது. *உரிய அனுமதியின்றி பிளக்ஸ் பேனர் வைக்க கூடாது.


