News August 24, 2024
பழனி கோயிலில் பண்டாரத்தார் உரிமை மீட்கப்படுமா?

சித்தர் போகர் உருவாக்கிய நவபாஷாண பழனி ஆண்டவருக்கு பூஜை செய்யும் உரிமையை தமிழக அரசு மீட்டுத் தர வேண்டுமென பண்டாரத்தார் சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டாண்டு காலமாக கருவறை வழிபாட்டு உரிமை கொண்ட அம்மக்கள், திருமலை நாயக்கர் ஆட்சியில் கோயிலிலிருந்து வெளியேற்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முத்தமிழ்
முருகன் மாநாடு நடைபெறும் இவ்வேளையில் இக்கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
Similar News
News November 22, 2025
கள்ளக்குறிச்சி: சிறுமிக்கு சூடு வைத்து பாலியல் வன்கொடுமை!

கள்ளக்குறிச்சி: உளுந்தூர்பேட்டை அருகே 4 வயது சிறுமியின் முகம், உடல் மற்றும் மர்ம உறுப்பில் சிகெரெட்டால் சூடு வைத்தும், கடித்த காயங்களும் இருந்துள்ளன. இது குறித்த தகவல் போலீசாருக்கு கிடைத்த நிலையில், சிறுமியை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அப்போது சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு ஆளாகியது தெரியவந்துள்ளது. இதுகுறித்து வழக்கு பதிந்த போலீசார், சிறுமியின் தாயிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
News November 22, 2025
மந்த நிலையில் சர்வதேச தங்கம் விலை!

சர்வதேச சந்தையில் தங்கம் விலையில் மந்த நிலை நீடிக்கிறது. கடந்த 30 நாள்களில் 1 அவுன்ஸ்(28g) $68(1.67%) சரிந்துள்ளது. இதனால் தான் நம்மூரில், இம்மாதம் தங்கம் விலையில் பெரிய மாற்றமின்றி, ஏற்ற இறக்கத்தில் இருந்து வருகிறது. இதனிடையே, இன்று(நவ.22) பெரிய அளவில் மாற்றமின்றி 1 அவுன்ஸ் $4,065-க்கும், வெள்ளி $0.55 குறைந்து $50-க்கும் விற்பனையாகிறது. இது நம்மூர் சந்தையிலும் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.
News November 22, 2025
ச்சீ! கட்சி பெயரை கூட திருடி வைத்துள்ளார்கள்: துரை

2024-ல் கே.பி.சரவணன் என்பவர் தொடங்கிய ‘திராவிட வெற்றிக்கழகம்’ பெயரில், மல்லை சத்யாவும் புதிய கட்சியை தொடங்கியது சர்ச்சையாகியுள்ளது. இதுதொடர்பான கேள்விக்கு துரை வைகோ, தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை; ஆரம்பிக்கும் போதே திருட்டுப் பழக்கத்தில் ஆரம்பித்தால் கடைசி வரை திருட்டுப் பழக்கம் இருக்கத்தான் செய்யும். அப்படித்தான் கட்சி பெயரைக்கூட இன்னொரு கட்சியிடம் களவாடி வைத்துள்ளனர் என காட்டமாக விமர்சித்தார்.


