News August 24, 2024
பழனி கோயிலில் பண்டாரத்தார் உரிமை மீட்கப்படுமா?

சித்தர் போகர் உருவாக்கிய நவபாஷாண பழனி ஆண்டவருக்கு பூஜை செய்யும் உரிமையை தமிழக அரசு மீட்டுத் தர வேண்டுமென பண்டாரத்தார் சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டாண்டு காலமாக கருவறை வழிபாட்டு உரிமை கொண்ட அம்மக்கள், திருமலை நாயக்கர் ஆட்சியில் கோயிலிலிருந்து வெளியேற்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முத்தமிழ்
முருகன் மாநாடு நடைபெறும் இவ்வேளையில் இக்கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
Similar News
News November 23, 2025
லண்டனில் ஓர் தமிழரின் சாதனை பயணம்!

அதிமுகவில் வட்ட செயலாளராக இருந்த ஒருவர் தற்போது லண்டனில் உள்ள கிரேடன் நகராட்சியின் துணை மேயர் என்றால் நம்ப முடிகிறதா. 1991-ல் வில்லிவாக்கத்தில் வட்ட செயலாளராக இருந்த தாமோதரன், படிப்புக்காக லண்டன் சென்று அங்கேயே செட்டில் ஆகி இந்த நிலையை அடைந்துள்ளார். அண்மையில், லண்டன் சென்ற CM ஸ்டாலினை அவர் சந்தித்தார். விரைவில் இங்கிலாந்து பார்லிமென்ட்டில் நுழைய உள்ளதாகவும் கூறப்படுகிறது. வாழ்த்துக்கள் சார்!
News November 23, 2025
எல்லைகளை ஆக்கிரமிக்கும் நாடுகளுக்கு வார்னிங்!

எந்தவொரு நாடும் தனது வலிமை (அ) அச்சுறுத்தல்களை பயன்படுத்தி, பிறநாட்டின் பகுதிகளை ஆக்கிரமிக்க கூடாது என்ற கூட்டு பிரகடனத்தை ஜி20 நாடுகள் ஏற்றுக்கொண்டன. இது ரஷ்யா, இஸ்ரேல், மியான்மருக்கான மறைமுக எச்சரிக்கையாக பார்க்கப்படுகிறது. அதேபோல், நேற்றைய உச்சிமாநாட்டில், பயங்கரவாதத்தை அதன் அனைத்து வடிவங்களிலும் கண்டித்தன. மேலும், பசியின்மை, பாலின பாகுபாட்டை களையவும் அறைகூவல் விடுத்துள்ளன.
News November 23, 2025
மது, Fast Food-க்கு தடை, மீறினால் ₹1 லட்சம் அபராதம்

திருமணம் போன்ற நிகழ்வுகளில் மது, Fast Food உள்ளிட்டவை சர்வசாதாரணமாக மாறிவிட்டது. இந்நிலையில், உத்தராகண்டின் ஜான்சர்-பவர் பழங்குடி பகுதியிலுள்ள 25 கிராமங்களில், மது, Fast Food-க்கு தடை விதித்து கிராம சபைக் கூட்டங்களில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இனி திருமணம் போன்ற நிகழ்வுகளில் மது, பீட்சா, பாஸ்தா, மோமோஸ் போன்ற Fast Food-ஐ விருந்தினர்களுக்கு வழங்கினால் ₹1 லட்சம் அபராதம் விதிக்கப்படுமாம்.


