News August 24, 2024
பழனி கோயிலில் பண்டாரத்தார் உரிமை மீட்கப்படுமா?

சித்தர் போகர் உருவாக்கிய நவபாஷாண பழனி ஆண்டவருக்கு பூஜை செய்யும் உரிமையை தமிழக அரசு மீட்டுத் தர வேண்டுமென பண்டாரத்தார் சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டாண்டு காலமாக கருவறை வழிபாட்டு உரிமை கொண்ட அம்மக்கள், திருமலை நாயக்கர் ஆட்சியில் கோயிலிலிருந்து வெளியேற்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முத்தமிழ்
முருகன் மாநாடு நடைபெறும் இவ்வேளையில் இக்கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
Similar News
News December 10, 2025
உலகின் டாப் 10 அழகான நடிகைகள்

2025 நிறைவடைய உள்ள நிலையில், IMDB பட்டியலிட்டுள்ள இந்த ஆண்டின் டாப் 10 அழகான நடிகைகளை இங்கு பார்க்கலாம். ஹாலிவுட் முதல் பாலிவுட் வரை உள்ள நடிகைகளின் அழகை அலசி ஆராய்ந்து இந்த பட்டியல் தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் ஒரே ஒரு இந்திய நடிகை மட்டும் இடம்பிடித்துள்ளார். இவர்களின் போட்டோக்களை மேலே தொகுத்துள்ளோம். ஒவ்வொன்றாக Swipe செய்து பார்த்து, உங்களுக்கு பிடித்த நடிகை யார் என்பதை கமெண்ட் பண்ணுங்க.
News December 10, 2025
ஆணவக்கொலை வழக்கை இழுத்தடிக்கும் அரசு: கௌசல்யா

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவப்படுகொலை வழக்கை தமிழக அரசு வேண்டுமென்றே தாமதப்படுத்துவதாக கௌசல்யா குற்றஞ்சாட்டியுள்ளார். கொலைக்கு காரணமானவர்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து SC-யில் மேல்முறையீடு செய்தோம். அங்கு துணையாக நிற்க வேண்டிய அரசு மெத்தனப்போக்கு காட்டியது. நீதி கிடைத்தால் சாதிய வாக்குகள் பறிபோய் விடுமோ என்ற அச்சத்தில், வழக்கை இழுத்தடிக்க முயல்வதாகவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News December 10, 2025
3 EX அமைச்சர்கள்.. EPS-க்கு ஷாக் கொடுக்க போகும் KAS

வரும் 18-ம் தேதி ஈரோட்டிற்கு விஜய் வரும்போது, சில அதிமுக EX அமைச்சர்கள் தவெகவில் இணைவார்கள் என செங்கோட்டையன் கூறியிருந்தார். அதன்படி, கொங்கு மண்டலத்தில் EPS மீது அதிருப்தியில் இருக்கும் 2 EX அமைச்சர்கள் மற்றும் டெல்டா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு EX அமைச்சர் என மூவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இது EPS-க்கு அதிர்ச்சி தருவதாக இருக்கும் என்றும் செங்கோட்டையன் ஆதரவாளர்கள் கூறியுள்ளனர்.


