News August 24, 2024
பழனி கோயிலில் பண்டாரத்தார் உரிமை மீட்கப்படுமா?

சித்தர் போகர் உருவாக்கிய நவபாஷாண பழனி ஆண்டவருக்கு பூஜை செய்யும் உரிமையை தமிழக அரசு மீட்டுத் தர வேண்டுமென பண்டாரத்தார் சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டாண்டு காலமாக கருவறை வழிபாட்டு உரிமை கொண்ட அம்மக்கள், திருமலை நாயக்கர் ஆட்சியில் கோயிலிலிருந்து வெளியேற்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முத்தமிழ்
முருகன் மாநாடு நடைபெறும் இவ்வேளையில் இக்கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
Similar News
News November 22, 2025
தாக்குதலுக்கு 2 ஆண்டுகளாக தயாரான தீவிரவாதிகள்

<<18342042>>டெல்லி கார் குண்டுவெடிப்பில்<<>> முக்கிய குற்றவாளியான டாக்டர் முசாமில் ஷகீல், NIA விசாரணையில், பல அதிர்ச்சி தகவல்களை தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலுக்காக கடந்த 2 ஆண்டுகளாக தயாராகி வந்ததாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார். மேலும், அம்மோனியம் நைட்ரேட் போன்ற குண்டு தயாரிக்கும் பொருள்கள் மற்றும் ரிமோட்களை வாங்கியதாகவும், இதற்காக ₹26 லட்சத்தை திரட்டியதாகவும் தெரிவித்துள்ளார்.
News November 22, 2025
மனிதர்களை விட அதிக நாள்கள் வாழும் உயிரினங்கள்

சில விலங்குகளின் ஆயுள்காலம் நம்மை ஆச்சரியப்படுத்துகிறது. ஆழ்கடல் உயிரினங்கள் முதல் ஆமைகள் வரை, மனிதர்களை விட அதிக ஆயுளைக் கொண்டுள்ளன. அவை, என்னென்ன விலங்குகள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். அவற்றை ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE
News November 22, 2025
ஆசிரியர்களை அரசு கைவிடாது: CM ஸ்டாலின்

டெட் தேர்வு குறித்து CM ஸ்டாலினுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் ஆலோசனை செய்தார். ஆசிரியர்கள் அனைவரும் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற வேண்டும் என்ற SC-யின் தீர்ப்பை எதிர்த்து செய்யப்பட்ட மேல்முறையீடு, ஆசிரியர்களின் அச்சம் ஆகியவை குறித்து அவர் எடுத்துரைத்தார். அதற்கு, ஆசிரியர் நலன் காத்திட உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும், அரசு எந்த சூழ்நிலையிலும் ஆசிரியர்களை கைவிடாது என்றும் CM உறுதியளித்தார்.


