News August 24, 2024

பழனி கோயிலில் பண்டாரத்தார் உரிமை மீட்கப்படுமா?

image

சித்தர் போகர் உருவாக்கிய நவபாஷாண பழனி ஆண்டவருக்கு பூஜை செய்யும் உரிமையை தமிழக அரசு மீட்டுத் தர வேண்டுமென பண்டாரத்தார் சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டாண்டு காலமாக கருவறை வழிபாட்டு உரிமை கொண்ட அம்மக்கள், திருமலை நாயக்கர் ஆட்சியில் கோயிலிலிருந்து வெளியேற்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முத்தமிழ்
முருகன் மாநாடு நடைபெறும் இவ்வேளையில் இக்கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

Similar News

News March 6, 2026

BREAKING: ஆசிரியர்களுக்கு தமிழக அரசு அறிவிப்பு

image

10, +12 பொதுத்தேர்வு கண்காணிப்பாளராக செல்லும் ஆசிரியர்களுக்கு முக்கிய அறிவிப்புகளை அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி, ஆசிரியர்கள் தேர்வு மையங்களுக்குள் செல்போன் கொண்டு செல்லத் தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், தேர்வர்களுக்கு வழங்கியது போக, மீதமுள்ள வினாத்தாள்களை உறையினுள் வைத்து சீலிட்டு தவறாமல் துறை அலுவலரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

News March 6, 2026

UAN நம்பரை மறந்துட்டீங்களா? ஈசியா தெரிஞ்சிக்கும் வழி!

image

➥EPFO பக்கத்திற்கு செல்லவும் ➥Services-ஐ கிளிக் செய்து, ‘For employees’-ஐ தேர்ந்தெடுக்கவும் ➥Member UAN/Online Services-ஐ கிளிக் செய்து, பெயர், DOB, ஆதார் or பான் நம்பரை பதிவிடவும். ரெஜிஸ்டர் செய்துள்ள மொபைல் நம்பரை கொடுத்தால், OTP வரும். அதை பதிவிட்டு, submit-ஐ கிளிக் செய்யவும் ➥பின்னர், ‘Know your UAN’- ஐ தேர்ந்தெடுத்து, ‘Show my UAN’-ஐ கிளிக் செய்தால், உங்களின் UAN நம்பர் காட்டும்.

News March 6, 2026

கடன் வட்டி தள்ளுபடி.. அறிவித்தது தமிழக அரசு

image

வீட்டு வசதி வாரியத்தில் மலிவு விலையில் வீடு வாங்கிய பலரும் தவணை கட்டத் தவறியதால் அபராத வட்டியுடன் சேர்ந்து கடன் சுமை அதிகரித்துள்ளது. அவர்களுக்கான அபாரத வட்டியை தள்ளுபடி செய்வதாக தமிழக அரசு அறிவித்துள்ளது. இது 2015 மார்ச் 31-க்கு முன்னர் தவணை காலம் முடிவடைந்த வீட்டுவசதி வாரிய திட்டங்களுக்கு மட்டுமே பொருந்தும் எனவும், இந்த சலுகை இம்மாதம் 31 வரை அமலில் இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. SHARE

error: Content is protected !!