News August 24, 2024
பழனி கோயிலில் பண்டாரத்தார் உரிமை மீட்கப்படுமா?

சித்தர் போகர் உருவாக்கிய நவபாஷாண பழனி ஆண்டவருக்கு பூஜை செய்யும் உரிமையை தமிழக அரசு மீட்டுத் தர வேண்டுமென பண்டாரத்தார் சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டாண்டு காலமாக கருவறை வழிபாட்டு உரிமை கொண்ட அம்மக்கள், திருமலை நாயக்கர் ஆட்சியில் கோயிலிலிருந்து வெளியேற்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முத்தமிழ்
முருகன் மாநாடு நடைபெறும் இவ்வேளையில் இக்கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.
Similar News
News November 26, 2025
தமிழ்நாட்டில் இப்போ இதுதான் TRENDING நியூஸ்

*அதிமுக MLA பதவியை ராஜினாமா செய்தார் செங்கோட்டையன்
*விஜய்யை சந்தித்து செங்கோட்டையன் முக்கிய ஆலோசனை.
*இந்தியா படுதோல்வி; ஒயிட்வாஷ் செய்த தென்னாப்பிரிக்கா
*<
News November 26, 2025
ஸ்டாலினின் பழைய பழக்கம் மாறவே இல்லை: EPS

மேற்கு மண்டலக்காரர் என்று சொல்லிக் கொள்ளும் EPS, செய்தது எல்லாம் துரோகம்தான் என CM குற்றம்சாட்டியிருந்தார். இந்நிலையில், எதிர்க்கட்சியாக இருந்த போது எது நடந்தாலும், தன்னை குறை சொல்லிய பழக்கம் இன்னும் ஸ்டாலினுக்கு மாறவில்லை என EPS பதிலடி கொடுத்துள்ளார். உங்கள் பக்கம் இருந்த மைக்கை, மக்கள் பக்கம் திருப்பி இருந்தால், அவர்களே தான் என்னென்ன செய்தேன் என சொல்லியிருப்பார்கள் எனவும் அவர் கூறியுள்ளார்.
News November 26, 2025
தந்தை, காதலன் டிஸ்சார்ஜ்.. ஸ்மிருதி திருமணம் எப்போது?

கடந்த 23-ம் தேதி கோலாகலமாக நடைபெற இருந்த ஸ்மிருதி மந்தனாவின் திருமணம், அவரது தந்தைக்கு மாரடைப்பு ஏற்பட்டதால் நிறுத்தி வைக்கப்பட்டது. அதேவேளையில், மந்தனாவை கரம்பிடிக்க இருந்த பலாஷ் முச்சாலுக்கும், உடல்நல குறைவு ஏற்பட்டு ஹாஸ்பிடலில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று இருவரும் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ள நிலையில், மீண்டும் திருமண தேதி அறிவிக்கப்படுமா என பலரும் எதிர்பார்த்து இருக்கின்றனர்.


