News August 24, 2024

பழனி கோயிலில் பண்டாரத்தார் உரிமை மீட்கப்படுமா?

image

சித்தர் போகர் உருவாக்கிய நவபாஷாண பழனி ஆண்டவருக்கு பூஜை செய்யும் உரிமையை தமிழக அரசு மீட்டுத் தர வேண்டுமென பண்டாரத்தார் சமூகத்தினர் கோரிக்கை விடுத்துள்ளனர். ஆண்டாண்டு காலமாக கருவறை வழிபாட்டு உரிமை கொண்ட அம்மக்கள், திருமலை நாயக்கர் ஆட்சியில் கோயிலிலிருந்து வெளியேற்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். முத்தமிழ்
முருகன் மாநாடு நடைபெறும் இவ்வேளையில் இக்கோரிக்கை வலுப்பெற்று வருகிறது.

Similar News

News December 12, 2025

கள்ளக்குறிச்சியில் கல்வி உதவித்தொகை வேண்டுமா..?

image

அரசு மற்றும் அரசு உதவி பெறும் கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகளில் மூன்றாண்டு இளங்கலை பட்டப்டிப்பு பயிலும் பிற்படுத்தப்பட்ட, மிகப்பிற்படுத்தப்பட்ட, சீர்மரபினர் பிரிவைச் சார்ந்த மாணவ, மாணவிகளுக்கு எவ்வித நிபந்தனையுமின்றி கல்வி உதவித்தொகை வழங்கப்படுகிறது. கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள மாணவர்கள் கல்வி உதவித்தொகைக்கு <>இந்த இணையதளத்தில்<<>> 31 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம்.

News December 12, 2025

தேர்தல் பணிகளை ஆலோசிக்க தமிழகம் வரும் அமித்ஷா

image

தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அதிமுக – பாஜக கூட்டணியில் தமாகாவை தவிர வேறு கட்சிகள் இதுவரை இணையவில்லை. இதனிடையே நேற்று EPS-ஐ சந்தித்து ஆலோசனை நடத்திய நயினார் நாகேந்திரன், கள நிலவரத்தை தலைமையிடம் விளக்க நாளை டெல்லி செல்கிறார். இந்நிலையில் வரும் 15-ம் தேதி அமித்ஷா தமிழகம் வருகிறார். அப்போது கூட்டணி விவகாரம், தேர்தல் பணிகள் குறித்து மாநில நிர்வாகிகளுடன் அமித்ஷா ஆலோசனை நடத்த உள்ளதாக தெரிகிறது.

News December 12, 2025

ஏறுமுகத்தில் இந்திய சந்தைகள்!

image

மும்பை தேசிய பங்குச்சந்தைகள் இன்று ஏற்றத்துடன் வர்த்தகத்தை தொடங்கின. இதில், சென்செக்ஸ் 352 புள்ளிகளுக்கு மேல் உயர்ந்து, 85,170 என்ற அளவில் வர்த்தகமாகி வருகிறது. நிஃப்டி 109 புள்ளிகள் உயர்ந்து, 26,007-ஐ எட்டியுள்ளது. உலகளாவிய சந்தைகளின் வலுவான ஆதரவு காரணமாக ஏற்றம் காணப்பட்டதாக நிபுணர்கள் கூறுகின்றனர். இதில் உலோக பங்குகளே அதிகம் லாபம் ஈட்டி, சந்தைக்கு ஊக்கமளித்துள்ளன.

error: Content is protected !!