News January 23, 2025
குக்கரில் மனைவி உடல்: வெளியான காரணம்

ஹைதராபாத்தில் மனைவியை கொலை செய்து அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி, குக்கரில் வேக வைத்த கொடூர சம்பவத்தின் பின்னணி தற்போது வெளியாகியுள்ளது. சங்கராந்தியை (பொங்கல்) ஒட்டி தனது வீட்டிற்கு செல்ல வேண்டும் என மனைவி மாதவி கூறியுள்ளார். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் முற்றிய நிலையில், மாதவியை கணவர் குருமூர்த்தி கொலை செய்துள்ளார். பின்னர் அவரது உடலை குக்கரில் வேக வைத்து ஏரியில் அவர் வீசியுள்ளார்.
Similar News
News November 27, 2025
5 நாள்கள் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம்: அமுதா

வங்க கடலில் நிலைகொண்டுள்ள ‘டிட்வா’ புயலால் காற்று மற்றும் மழை அதிகமாக இருக்கும் என தென் மண்டல வானிலை ஆய்வு மையத் தலைவர் அமுதா தெரிவித்துள்ளார். இதனால் அடுத்த 5 நாள்களுக்கு மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் எனவும் எச்சரித்துள்ளார். மேலும் வரும் 30-ம் தேதி சென்னையில் மிக கனமழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
News November 27, 2025
BREAKING: செங்கோட்டையனுக்கு பதவி.. விஜய் அறிவித்தார்

தவெகவில் இணைந்துள்ள செங்கோட்டையனுக்கு வழங்கப்பட்டுள்ள பதவிகள் குறித்து விஜய் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். அதன்படி, உயர்மட்ட நிர்வாகக் குழுவின் தலைமை ஒருங்கிணைப்பாளராக செங்கோட்டையன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும், ஈரோடு, கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களின் அமைப்புச் செயலாளராகவும் செங்கோட்டையன் நியமிக்கப்பட்டுள்ளார்.
News November 27, 2025
துயரத்தில் தோள் கொடுப்பதே நட்பு❤️

மங்களகரமாக நடைபெறவிருந்த திருமணம் திடீரென நின்றதால், <<18381176>>ஸ்மிருதி மந்தனா<<>> பெரும் துயரத்தில் ஆழ்ந்துள்ளார். இத்தகைய இக்கட்டான சூழலில் தனது தோழியுடன் நிற்க வேண்டும் என கருதிய ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஆஸி.,யில் நடைபெறும் WBBL தொடரில் இருந்து விலகியுள்ளார். இந்த கோரிக்கையை அவர் விளையாடி வந்த Brisbane Heat அணியும் ஏற்றுக்கொண்டது. தோழிக்காக ஜெமிமா செய்த செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.


