News April 20, 2025
மனைவியின் 4 காதலர்கள்.. கணவர் பரபரப்பு புகார்

4 காதலர்களுடன் சேர்ந்து மனைவி ரிடான்ஷி ஷர்மா தன்னை கொல்ல சதித்திட்டம் தீட்டுவதாக உ.பி.யைச் சேர்ந்த கவுரவ் ஷர்மா போலீசில் புகார் அளித்துள்ளார். 1,200 பக்க மொபைல் ஸ்க்ரீன்ஷாட் ஆதாரங்கள், வீடியோக்களுடன் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னை கொன்றுவிட்டு, இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுக் கொள்ள மனைவி திட்டம் போடுவதாகவும், குடித்துவிட்டு தன்னை அடிக்கடி அடிப்பதாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.
Similar News
News December 5, 2025
ரத்தன் டாடாவின் வளர்ப்பு தாயார் காலமானார்

ரத்தன் டாடாவின் வளர்ப்பு தயார் சிமோன் டாடா (95) உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்ட அவர், கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் ஹாஸ்பிடலில் சிகிச்சை பெற்று வந்தார். தற்போது சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். ஜெனிவாவில் பிறந்த சிமோன், 1955-ல் நாவல் டாடாவை திருமணம் செய்தார். Lakmé, Trent Ltd உள்ளிட்ட பிராண்ட் உருவாக்கத்தில் முக்கிய பங்காற்றியவர். #RIP
News December 5, 2025
சற்றுமுன்: விடுமுறை.. 3 நாள்களுக்கு ஹேப்பி நியூஸ்

வார விடுமுறையையொட்டி இன்று முதல் டிச.7 வரை சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. சென்னை,கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மக்கள் சிரமமின்றி ஊருக்குச் செல்ல ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இதுவரை சுமார் 5,000-க்கும் மேற்பட்டோர் டிக்கெட் முன்பதிவு செய்துள்ளனர். www.tnstc.in இணையதளம், மொபைல் ஆப் மூலம் டிக்கெட் முன்பதிவு செய்யலாம். ஊருக்கு செல்ல தயாராகிட்டீங்களா?
News December 5, 2025
மதமோதலை ஏற்படுத்த TN அரசு முயற்சி: அண்ணாமலை

சிக்கந்தர் மசூதியை தவிர, திருப்பரங்குன்றம் மலை முழுவதும் இந்துக்களுக்கு சொந்தமானது என அண்ணாமலை தெரிவித்துள்ளார். முந்தைய நீதிமன்ற தீர்ப்புகளை சுட்டிக்காட்டிய அவர், தீபத்தூண் கோயிலுக்கு சொந்தமானது என்பது தீர்ப்புகளில் உறுதியாக உள்ளதாக கூறினார். இந்த விவகாரத்தில் அமைச்சர் ரகுபதி பொய்களை கூறி வருவதாக விமர்சித்த அவர், மதமோதலை ஏற்படுத்த தமிழக அரசு தான் முயற்சி செய்து வருவதாக குற்றஞ்சாட்டியுள்ளார்.


