News April 20, 2025

மனைவியின் 4 காதலர்கள்.. கணவர் பரபரப்பு புகார்

image

4 காதலர்களுடன் சேர்ந்து மனைவி ரிடான்ஷி ஷர்மா தன்னை கொல்ல சதித்திட்டம் தீட்டுவதாக உ.பி.யைச் சேர்ந்த கவுரவ் ஷர்மா போலீசில் புகார் அளித்துள்ளார். 1,200 பக்க மொபைல் ஸ்க்ரீன்ஷாட் ஆதாரங்கள், வீடியோக்களுடன் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார். தன்னை கொன்றுவிட்டு, இன்சூரன்ஸ் பணத்தை பெற்றுக் கொள்ள மனைவி திட்டம் போடுவதாகவும், குடித்துவிட்டு தன்னை அடிக்கடி அடிப்பதாகவும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.

Similar News

News December 6, 2025

நம்பிக்கைகளை தீர்ப்பில் காட்டக்கூடாது: பெ.சண்முகம்

image

அரசியல் சாசனத்திற்கும், சட்டத்திற்கும் உட்பட்டுதான் நீதிபதிகள் தீர்ப்பளிக்க வேண்டும் என சிபிஎம் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். திருப்பரங்குன்றம் விவகாரத்தை பற்றி பேசிய அவர், நீதிபதிகள் தங்களுடைய மத நம்பிக்கைகளை தீர்ப்பில் வெளிப்படுத்துவது சட்டவிரோதமானது என விமர்சித்துள்ளார். மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழக அரசை ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பாராட்டி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

News December 6, 2025

BREAKING: இந்தியா பந்துவீச்சு

image

தெ.ஆப்., அணிக்கு எதிரான 3-வது மற்றும் கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா அணி பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில், ஜெய்ஸ்வால், ரோஹித் சர்மா, கோலி, ருதுராஜ், கே.எல்.ராகுல், ஜடேஜா, குல்தீப், ராணா, அர்ஷ்தீப் சிங், பிரசித் கிருஷ்ணா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். டெஸ்ட் தொடரை பறிகொடுத்த நிலையில், இந்தியா கடைசி போட்டியான இன்று வெற்றிபெற்று தொடரை கைப்பற்ற தீவிரமாக களமிறங்கவுள்ளது.

News December 6, 2025

முருகன் இப்போதுதான் தெரிகிறாரா? சீமான்

image

பல கோடி மக்கள் வாழ்வில் விளக்கின்றி இருளில் கிடக்கும் நிலையில், திருப்பரங்குன்றம் மலையில் விளக்கேற்ற துடிக்கின்றனர் என சீமான் விமர்சித்துள்ளார். மலைகள் கல்குவாரிகளாக மாற்றப்பட்ட போது ஏன் அவர்கள் வரவில்லை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக உள்ளிட்ட ஹிந்துத்துவா அமைப்புகளுக்கு இன்று தான் முருகன் கண்ணுக்கு தெரிகிறாரா என்றும் சீமான் கேட்டுள்ளார்.

error: Content is protected !!