News May 7, 2025
தாடியால் கணவரை பிரிந்த மனைவி.. மைத்துனருடன் ஓட்டம்

கணவர் தாடியுடன் இருந்தது பிடிக்காமல் அவரின் சகோதரருடன் மனைவி ஓட்டம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரட்டை சேர்ந்த முகமது சாகீர், அர்சியை 7 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்தார். அவர் தாடி வளர்த்தது அர்சிக்கு பிடிக்கவில்லை. இதனால் தாடியில்லாமல் இருந்த சாகீரின் தம்பி சபீருடன் ஓட்டம் பிடித்துள்ளார். இனி அவருடனே வாழ விரும்புவதாகவும் கூறியுள்ளார். சாகீர் புகாரின்பேரில் போலீஸ் விசாரிக்கிறது.
Similar News
News December 4, 2025
அணு பேரழிவு நடந்த இடத்தில் செழித்து வளரும் உயிர்!

உலகின் மிகமோசமான அணு உலை பேரழிவு நடந்த பகுதியாக உக்ரைனின் செர்னோபில் உள்ளது. இங்கு நிலவும் அணு கதிர்வீச்சால் இன்று வரை மனிதர்கள் வாழ தகுதியற்ற இடமாக கருதப்படும் நிலையில், கருப்பு பூஞ்சை எனும் ஒரே ஒரு உயிர் மட்டும் செழித்து வளர்ந்து வருகிறது. பிற தாவரங்கள் எப்படி சூரிய ஒளியை வளர்ச்சிக்கான ஆற்றலாக மாற்றுகிறதோ, அதேபோல், இந்த பூஞ்சைகள் கதிர்வீச்சை ஆற்றலாக மாற்றுவதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.
News December 4, 2025
ஆணுறைகளுக்கு வரி விதித்த சீனா.. ஏன் தெரியுமா?

ஆணுறை உள்ளிட்ட கருத்தடை சாதனங்கள் மீது, 2026 ஜனவரி முதல் வரி விதிக்க சீன அரசு முடிவு செய்துள்ளது. அந்நாட்டில் தொடர்ந்து குழந்தை பிறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால், இத்தகைய வரி விதிப்பின் மூலம் பிறப்பு விகிதம் அதிகரிக்கும் என சீனா நம்புகிறது. ஒரு குழந்தை கொள்கையை கடுமையாக கடைபிடித்து வந்த சீனா, 1993 முதல் கருத்தடை சாதனங்களுக்கு வரிவிலக்கு அளித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News December 4, 2025
டிசம்பர் 4: வரலாற்றில் இன்று

*1898–இயற்பியலாளர் கே.எஸ்.கிருஷ்ணன் பிறந்தநாள் *1910–முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமன் பிறந்தநாள் *1953-தமிழறிஞர் அ.வேங்கடாசலம் பிள்ளை நினைவு நாள் *1971-இந்திய கடற்படை கராச்சி துறைமுகத்தை தாக்கியது *1974–நடிகை அனுபமா குமார் பிறந்தநாள் *1984–மன்னாரில் இலங்கை ராணுவம் நடத்திய தாக்குதலில் 150 தமிழ் மக்கள் படுகொலை


