News May 7, 2025

தாடியால் கணவரை பிரிந்த மனைவி.. மைத்துனருடன் ஓட்டம்

image

கணவர் தாடியுடன் இருந்தது பிடிக்காமல் அவரின் சகோதரருடன் மனைவி ஓட்டம் பிடித்தது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மீரட்டை சேர்ந்த முகமது சாகீர், அர்சியை 7 மாதத்திற்கு முன்பு திருமணம் செய்தார். அவர் தாடி வளர்த்தது அர்சிக்கு பிடிக்கவில்லை. இதனால் தாடியில்லாமல் இருந்த சாகீரின் தம்பி சபீருடன் ஓட்டம் பிடித்துள்ளார். இனி அவருடனே வாழ விரும்புவதாகவும் கூறியுள்ளார். சாகீர் புகாரின்பேரில் போலீஸ் விசாரிக்கிறது.

Similar News

News November 26, 2025

சீனா விவகாரத்தில் மோடி பேசுவாரா? தமிமுன் அன்சாரி

image

அருணாச்சலப் பிரதேசத்தினரின் இந்திய பாஸ்போர்ட் செல்லாது எனக்கூறி, இந்திய பெண் அலைக்கழிக்கப்பட்டது அதிர்ச்சியளிப்பதாக தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார். இது நம் இந்தியாவின் இறையாண்மைக்கு விடப்பட்டிருக்கும் சவாலாகும். அருணாச்சலப் பிரதேசத்தை உரிமை கொண்டாடி வரும் சீனாவுக்கு, நமது பதில் என்ன, இதுகுறித்து PM மோடி பேசுவாரா, வெளியுறவு துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாய் திறப்பாரா என கேள்வி எழுப்பினார்.

News November 26, 2025

விடுமுறை அறிவித்தார் கலெக்டர்

image

நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு டிசம்பர் 1-ம் தேதி நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து அம்மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். நவம்பர் 29, 30 ஆகிய தேதிகளில் சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறை வருகிறது. அதனைதொடர்ந்து டிச.1-ம் தேதியும் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டதால், நாகைக்கு தொடர்ந்து மூன்று நாள்கள் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையாகும்.

News November 26, 2025

அடுத்த 2 மணி நேரத்திற்கு மழை

image

தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்திற்கு 16 மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது. அதன்படி, அரியலூர், கோவை, கடலூர், குமரி, மயிலாடுதுறை, நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், தஞ்சை, திருவாரூர், தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, தி.மலை, வேலூர், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மழை பெய்யக்கூடும். எனவே, பள்ளிகளுக்கு செல்லும் குழந்தைகள் குடை, ரெயின்கோட் போன்றவற்றை எடுத்து செல்லவும்

error: Content is protected !!