News March 22, 2025
கணவனை கொன்றுவிட்டு நாடகமாடிய மனைவி கைது!

கள்ளக்காதலனுடன் உல்லாசமாக இருந்ததை கணவர் பார்த்துவிட்டதால், கணவனை மனைவியே கழுத்தை நெரித்துக் கொன்ற கொடூரம் அரங்கேறியுள்ளது. தஞ்சை காசாங்காட்டை சேர்ந்த பிரகாஷ் (40) கடந்த 13ம் தேதி தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்பட்ட நிலையில், அவரது உடலை உறவினர்கள் எரித்துவிட்டனர். ஆனால், பிரகாஷை மனைவி நாகலட்சுமியும், அவரது கள்ளக்காதலன் வீரக்குமாரும் சேர்ந்து கொன்று தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்துள்ளது.
Similar News
News March 22, 2025
‘BIG BOSS’ எண்ணம் எங்களிடம் எடுபடாது: கே.டி.ராமா ராவ்

மத்திய அரசு BIG BROTHER-ஆக செயல்பட வேண்டும் தவிர BIG BOSS-ஆக செயல்படக் கூடாது என பிஆர்எஸ் கட்சி தலைவர் கே.டி.ராமா ராவ் கூறியுள்ளார். தொகுதி மறுவரை தொடர்பாக இப்போது ஏன் பேசுகிறீர்கள் என சிலர் கேள்வி எழுப்புவதாகவும், இப்போது இந்த பிரச்னையை பேசவில்லை என்றால் வரலாறு தங்களை மன்னிக்காது என்றும் தெரிவித்துள்ளார். தென் மாநிலங்களின் உரிமை பறிபோவதை அனுமதிக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News March 22, 2025
IPL: வரலாறு படைக்கப்போகும் அந்த 9 பேர்…!

ஐபிஎல் தொடர் 17 ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான வீரர்களை பார்த்துவிட்டது. ஆனால், அதில் 9 பேர் மட்டுமே 18வது சீசனிலும் விளையாடுகிறார்கள். இந்த பட்டியலில், தோனி, கோலி, ரோஹித் ஆகிய மூவரும் நமக்கு உடனே ஞாபகத்திற்கு வந்துவிடுவர். மீதியுள்ள ஆறு பேர் யார் தெரியுமா? ஜடேஜா, அஸ்வின், ரஹானே, மனீஷ் பாண்டே, இஷாந்த் சர்மா, ஸ்வப்னில் சிங் இவர்கள்தான் அது. 9 பேருமே இந்திய வீரர்கள் என்பது கூடுதல் சிறப்பு.
News March 22, 2025
பகலில் டீச்சர்… இரவில் ஆபாசப் பட நடிகை…

ஆசிரியர்கள் சமூகத்தில் கடவுளாக பார்க்கப்படுகிறார்கள். சில ஆசிரியர்களின் செயல் ஒட்டுமொத்த ஆசிரியர் சமூகத்தையும் களங்கமாக்கி விடுகிறது. இத்தாலியில் பள்ளி ஆசிரியராக இருந்த எலெனா மரகா(29), Onlyfans என்ற ஆபாச இணையதளத்தில் தனது வீடியோக்களை அப்லோட் செய்துள்ளார். ஆசிரியராக பெறும் மாத ஊதியத்தை ஆபாச இணைய தளத்தில் ஒரே நாளில் சம்பாதிப்பதாக அவர் கூறியுள்ளார். தற்போது, அவர் சஸ்பென்ட் செய்யப்பட்டுள்ளார்.