News December 15, 2024

மனைவி, மாமியார் கைது.. சுபாஷுக்கு நீதி கிடைத்ததா?

image

அதுல் சுபாஷ் தற்கொலை வழக்கில், அவரது மனைவி நிகிதா, மாமியார், மனைவியின் சகோதரரைப் KA போலீசார் கைது செய்துள்ளனர். போலி வரதட்சணை கொடுமை கேஸ் கொடுத்துள்ளதாக மனம் நொந்த சுபாஷ், 24 பக்க லட்டர் எழுதிவைத்துவிட்டு லைவில் தற்கொலை செய்துகொண்டார். சுபாஷின் சகோதரர் அளித்த புகாரின் பேரில் மாரத்தள்ளி போலீசார் மூவரை அதிரடியாகக் கைது செய்துள்ளனர். சுபாஷுக்கு நீதி கிடைக்கச் செய்வோம் என KA போலீஸ் கூறியிருந்தது.

Similar News

News March 31, 2026

ரூபாய் மதிப்பு சரிவு.. நிதியமைச்சரின் பதில்

image

ரூபாய் மதிப்பு சரிவை பற்றி கவலைப்பட தேவையில்லை என FM நிர்மலா சீதாராமன் விளக்கமளித்துள்ளார். மேற்காசியாவில் போர் சூழலால் ரூபாயின் மதிப்பு 4.1% சரிந்துள்ளதாகவும், அதேநேரம் தென்கொரியாவின் won(4.6%), தாய்லாந்து Baht(5.5%) அதிகம் சரிந்துள்ளதாகவும் கூறினார். இந்திய பொருளாதாரம் வலுவாக இருப்பதாக குறிப்பிட்ட அவர், நிதிப் பற்றாக்குறை கட்டுக்குள் உள்ளதால் இந்தியாவை பலரும் பாராட்டுவதாகவும் அவர் தெரிவித்தார்.

News March 31, 2026

CSK-வின் தோல்விக்கு முக்கிய காரணங்கள்

image

*ஆடுகளத்தின் தன்மையை CSK வீரர்கள் தவறாக கணித்தது போல் தெரிந்தது *விக்கெட் சரிவை பொருட்படுத்தாமல் ஒவ்வொருவரும் அதிரடியாக ஆடியது *8 பேட்ஸ்மேன்கள் இருந்தும் ஒரு 50+ பார்ட்னர்ஷிப் கூட அமையவில்லை *Off Spin வீசக்கூடிய மேத்யூ ஷார்ட்டை ஜெய்ஸ்வால், சூர்யவன்ஷிக்கு எதிராக பயன்படுத்தவில்லை *முக்கியமான கேட்ச்சுகளை கார்த்திக் சர்மா, மேட் ஹென்றி தவறவிட்டனர். அடுத்த போட்டிக்கு CSK 11-ல் என்ன மாற்றங்கள் தேவை?

News March 31, 2026

சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு

image

தமிழகத்தின் 60 சுங்கச்சாவடிகளில் நள்ளிரவு 12 மணி முதல் சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. வானகரம், சூரப்பட்டு, ஆத்தூர் உள்ளிட்ட 60 சுங்கச்சாவடிகளில் சுங்கக் கட்டணம் 5%-7% அதிகரிக்கப்பட்டுள்ளது. கார், ஜீப் போன்ற லேசான வாகனங்களுக்கு தற்போது வசூலிக்கப்படும் கட்டணத்தை விட ₹10 முதல் ₹40 வரையும், லாரி, பேருந்து போன்ற கனரக வாகனங்களுக்கு ₹50 முதல் ₹200 வரை கூடுதல் கட்டணம் விதிக்கப்பட வாய்ப்புள்ளது.

error: Content is protected !!