News April 25, 2025
தாக்குதல் நடந்த இடத்தில் வீரர்கள் இல்லாதது ஏன்?

பஹல்காம் தீவிரவாத தாக்குதல் நடந்த இடத்தில் பாதுகாப்பு வீரர்கள் இல்லாதது ஏன் என்று எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ளன. அனைத்துக் கட்சி கூட்டத்தில் இதற்கு பதிலளித்த மத்திய அரசு, பைசரன் பள்ளத்தாக்கில் வழக்கமாக அமர்நாத் யாத்திரைக்கு பக்தர்கள் செல்லும் போதுதான் பாதுகாப்பு அளிக்கப்படும். ஆனால் அனுமதியின்றி சுற்றுலா பயணிகளை அங்கு அழைத்துச் சென்றதால் பாதுகாப்பு வழங்க முடியவில்லை என்று தெரிவித்துள்ளது.
Similar News
News April 26, 2025
சிந்து நதியில் இந்தியர்களின் ரத்தம் பாயும்: பாக். Ex அமைச்சர்

சிந்து நதி குறித்து பாகிஸ்தான் முன்னாள் வெளியுறவு அமைச்சர் பிலாவல் பூட்டோ பேசியது சர்ச்சையாகியுள்ளது. பஹல்காம் தாக்குதல் எதிரொலியாக சிந்து நதி ஒப்பந்தத்தை இந்திய அரசு ரத்து செய்தது. இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பிலாவல் பூட்டோ, ‘சிந்து நதி நம்முடையது. நமக்கான நீர் இந்த நதியில் பாயும். இல்லையென்றால், அவர்களின் (இந்தியர்கள்) ரத்தம் பாயும்’ எனத் தெரிவித்துள்ளார்.
News April 26, 2025
ஏப்ரல் 26: வரலாற்றில் இன்று

▶ 1897 – தமிழ்தாய் வாழ்த்து பாடல் கொடுத்த பேராசிரியர் மனோன்மணீயம் சுந்தரனார் நினைவு நாள். ▶ 1970 – நடிகை சரண்யா பொன்வண்ணன் பிறந்த நாள். ▶ 1973 – நடிகரும் இயக்குநருமான சமுத்திரக்கனி பிறந்த நாள். ▶ 1989 – வங்கதேசத்தில் சூறாவளிக் காற்றால் 1,300-க்கும் அதிகமானோர் உயிரிழப்பு. ▶ 1994 – ஜப்பானில் சீன விமானம் விபத்துக்குள்ளானதில் 264 பேர் உயிரிழப்பு.
News April 26, 2025
CSK செய்த மோசமான சாதனை..!

ஐபிஎல் தொடரில் ஆதிக்கம் செலுத்தும் அணியாக இருந்த CSK-க்கு இந்த ஆண்டு சோதனை காலம்தான். சேப்பாக்கம் மைதானத்திலேயே மோசமான சாதனையை பதிவு செய்திருக்கிறது அந்த அணி. ஐபிஎல் தொடங்கியதில் இருந்தே சேப்பாக்கத்தில் தொடர்ந்து 4 போட்டிகளில் CSK தோற்றதில்லை. ஆனால், இந்த ஆண்டு RCB, DC, KKR, SRH என 4 அணிகளிடம் அடுத்தடுத்து தோல்வியடைந்து ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இன்னும் என்னெல்லாம் பார்க்கப் போறோமோ?