News October 10, 2025
டிரம்ப்புக்கு நோபல் பரிசு கொடுக்காதது ஏன்?

டிரம்ப்புக்கு, சமாதானத்துக்கான நோபல் பரிசு வழங்கப்படாததற்கு பின்வரும் காரணங்கள் சொல்லப்படுகின்றன: *நோபல் பரிசுக்கு பெயர்களை முன்மொழிவது ஜனவரியிலேயே முடிந்துவிடுமாம். ஆனால், டிரம்ப் அப்போதுதான் பதவியேற்றார். *2024 அல்லது அதற்கு முன்பு மேற்கொண்ட சமாதான பணிகளுக்கே இந்த ஆண்டு நோபலுக்கு பரிசீலிக்கப்படும். ஆனால், டிரம்ப் சொல்லும் போர்நிறுத்தங்கள் எல்லாமே 2025-ல் நடந்தவையே. அடுத்த ஆண்டு கிடைக்குமா?
Similar News
News December 8, 2025
இரவில் அந்த கனவுகள் வருகிறதா?.. இதுதான் அர்த்தம்

நம்மில் பலருக்கும் இரவில் பேய் துரத்துவது போன்றும், பேய் நம்மை அமுக்குவது போலவும் கனவுகள் வரும். கனவு சாஸ்திரப்படி, கடந்த காலத்தில் செய்த செயலுக்கு நீங்கள் வருந்திக் கொண்டிருந்தால் பேய் கனவுகள் வருமாம். கடந்த கால நினைவுகளை மறப்பதற்கான நேரம் வந்துவிட்டது என்பதையே பேய் கனவுகள் உணர்த்துகின்றன. அதனால், அந்த மாதிரி கனவுகளுக்கு பயப்பட வேண்டாம். SHARE IT.
News December 8, 2025
ED ரகசிய கடிதம் தனிநபருக்கு வந்தது எப்படி?

நகராட்சி நிர்வாக துறையில் முறைகேடு நடந்ததாகவும், இதனை தமிழக DGP விசாரிக்க வேண்டும் என்றும் மதுரையை சேர்ந்த ஒருவர் HC அமர்வில் மனுதாக்கல் செய்தார். இதை விசாரித்த HC, டிஜிபிக்கு அனுப்பிய கடிதம் உங்களுக்கு எப்படி கிடைத்தது என கேள்வி எழுப்பியது. அதற்கு, சோஷியல் மீடியாவில் பகிரப்பட்டதாக மனுதாரர் தரப்பு கூறியது. பின்னர், இது குறித்து போலீஸ் விசாரிக்க வேண்டும் என TN அரசு தரப்பில் கோரப்பட்டது.
News December 7, 2025
அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை.. அரசு அறிவிப்பு

தமிழகத்தை தொடர்ந்து புதுச்சேரியிலும் தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அங்கு அரசுப் பள்ளிகளில் CBSE பாடத்திட்டம் நடத்தப்படும் நிலையில், 3-ம் பருவ தேர்வுகள் டிச.16-ல் தொடங்கி டிச.23 வரை நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு, டிச.24 முதல் ஜன.1 வரை பள்ளிகள் விடுமுறை என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தில் டிச.24 முதல் ஜன.4 வரை அரையாண்டு தேர்வு விடுமுறையாகும்.


