News March 21, 2024
சோனியா காந்தி பிரதமராவதை தடுத்தது ஏன்?

மக்களவைத் தேர்தலில் திருச்சி தொகுதிக்காக பாஜகவினரிடையே பிரச்சனை எழுந்துள்ளது. ராம ஸ்ரீனிவாசனை வேட்பாளராக அறிவித்ததற்கு எதிர்ப்பு தெரிவித்த சூர்யா சிவா, மண்ணின் மைந்தனை வேட்பாளராக அறிவிக்க வேண்டும் என்றார். இதற்கு பதிலளித்த ஸ்ரீனிவாசன், நான் மண்ணுக்கு மைந்தனாக இருப்பேன் என்றார். மண்ணுக்கு மைந்தனாக இருந்தால் போதும் என்றால், சோனியா காந்தி பிரதமராவதை தடுத்தது ஏன்? என பதில் கேள்வி எழுப்பியுள்ளார்.
Similar News
News December 22, 2025
திருச்சி மக்கள் தெரிந்து கொள்ள வேண்டிய எண்கள்

▶மாநில கட்டுப்பாட்டு அறை-1070,
▶மாவட்ட கட்டுப்பாட்டு அறை- 1077,
▶காவல் கட்டுப்பாட்டு அறை-100,
▶விபத்து உதவி எண்-108,
▶தீ தடுப்பு, பாதுகாப்பு-101,
▶குழந்தைகள் பாதுகாப்பு- 1098,
▶பேரிடர் கால உதவி- 1077
பிறரும் தெரிந்து கொள்ள இதை SHARE செய்யவும்.
News December 22, 2025
பொங்கல் பரிசாக ₹5,000 கொடுங்க: EPS கூறும் காரணம்

திமுக, மீண்டும் ஆட்சிக்கு வரப்போவதில்லை என்பதால் மக்கள் மனம் குளிர, ஒவ்வொரு குடும்ப அட்டைக்கும் பொங்கல் பரிசு தொகுப்புடன் ₹5,000 வழங்க வேண்டும் என EPS கூறியுள்ளார். சேலத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், அதிமுக ஆட்சியில் இருந்த போது நாங்கள் ₹2,500 வழங்கினோம். அப்போது எதிர்க்கட்சி தலைவரான ஸ்டாலின், ஏன் ₹5,000 வழங்கக்கூடாது என கேள்வி எழுப்பினார். அதே கோரிக்கையை இப்போது நாங்கள் வைக்கிறோம் என்றார்.
News December 22, 2025
திருப்பரங்குன்றம் மலைக்கு செல்ல பக்தர்களுக்கு அனுமதி

20 நாள்களுக்கு பிறகு திருப்பரங்குன்றம் மலையின் மேல் பக்தர்கள் செல்ல மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் மலையின் மேல் செல்லலாம் என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. ஆனாலும், தீபத்தூண் விவகாரம் தொடர்பான வழக்கு கோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் மலைக்கு செல்லும் பாதையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.


