News April 13, 2024

எதற்காக இந்த ஓரவஞ்சனை?

image

தமிழகத்தின் வரி பணத்தை, வட மாநிலங்களுக்கு மோடி தருவதாக அமைச்சர் உதயநிதி குற்றம் சாட்டியுள்ளார். பீகார், உ.பி உள்ளிட்ட மாநிலங்கள் ரூ.1 வரியாக செலுத்தினால் திருப்பி பல மடங்காக அவர்களுக்கு கொடுக்கும் மோடி, தமிழ்நாட்டுக்கு மட்டும் வெறும் 29 பைசா தருவது ஏன்? என்று கேள்வி எழுப்பிய அவர், பாஜகவின் இந்த மாற்றாந்தாய் மனப்பான்மைக்கு தமிழக மக்கள் தக்க பாடம் வழங்குவார்கள் என்றும் தெரிவித்தார்.

Similar News

News November 13, 2025

நாட்டாமை சாதிப்படம் கிடையாது: சரத்குமார்

image

‘நாட்டாமை’ சாதிப்படம் கிடையாது என்று சரத்குமார் கூறியுள்ளார். தீர்ப்பு வழங்கக்கூடிய ஒருவரின் திறன் உள்ளிட்ட பண்புகளை பற்றி மட்டுமே சொல்லக்கூடிய படமாக அது இருந்தது என்றும், ‘தேவர் மகன்’ படமும் சாதியை திணிக்கும் படமல்ல எனவும் விளக்கமளித்துள்ளார். மாரி செல்வராஜின் படங்கள், ஏற்கெனவே நிகழ்ந்தவற்றை மீண்டும் அழுத்தமாக கூறுவதாக உள்ளதாகவும், தனக்கு சமத்துவமே முக்கியம் என்றும் கூறியுள்ளார்.

News November 13, 2025

₹1,000 மகளிர் உரிமைத் தொகை: ஸ்டாலின் முக்கிய அறிவிப்பு

image

போடிநாயக்கனூர், சாத்தூர் சட்டமன்றத் தொகுதி திமுக நிர்வாகிகளுடன் ‘உடன்பிறப்பே வா’ என்ற ஒன்-டூ-ஒன் ஆலோசனையை CM ஸ்டாலின் இன்று மேற்கொண்டார். அப்போது, விடுபட்டவர்களில், தகுதியானவர்களுக்கு மகளிர் உரிமைத்தொகை பெற்றுத் தர திமுகவினர் உதவ வேண்டும் என ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாமில் மகளிர் உரிமைத்தொகைக்கு விண்ணப்பிப்போருக்கு திமுகவினர் உதவ வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

News November 13, 2025

இந்தியர்களின் சிரமத்தை போக்கிய ஒற்றை லெட்டர்!

image

ரயில் பயணத்தின் போது, கழிப்பறை இல்லாத நிலையை யோசித்து பார்க்க முடியுமா? 1909-க்கு முன், நாட்டில் ரயில்கள் அப்படிதான் இருந்துள்ளன. மக்கள் ஸ்டேஷன் கழிப்பறையையே பயன்படுத்தி உள்ளனர். அப்படி, கழிப்பறையை பயன்படுத்த சென்ற சந்திரா சென் என்பவர், ரயில் புறப்பட்டதால் வேட்டியை சரியாக கட்டாமல் ஓடிவந்து, பெரும் அவமானத்தை சந்தித்துள்ளார். அவர் அன்று ரயில்வேக்கு எழுதிய லெட்டர் தான், கழிப்பறையை கொண்டுவந்துள்ளது.

error: Content is protected !!