News March 29, 2024

ஏன் இந்த ஓரவஞ்சனை?

image

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவந்த தினசரி ஊதியத்தை உயர்த்தி அரசாணை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், மாநிலங்களுக்கு மாநிலம் (3%-10%) ஊதிய உயர்வு வேறுபடுகிறது. அதாவது, அரியானாவில் ரூ.374 ஆகவும், தமிழ்நாட்டில் ₹319ஆகவும் தினசரி ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. பாஜக ஆளாத மாநிலங்களுக்கு ஊதிய உயர்வில் ஓரவஞ்சனை செய்யப்படுவதாக நெட்டிசன்கள் விமர்சனங்களை கூறிவருகின்றனர்.

Similar News

News November 22, 2025

சதுரங்கவேட்டை பாணியில் DMK ஆட்சியை பிடித்தது: ராஜூ

image

மெட்ரோ ரயில் வருவதற்கு திமுக அரசு விரும்பவில்லை என செல்லூர் ராஜூ குற்றம்சாட்டியுள்ளார். 2026 தேர்தலுக்காக திமுக அரசு மெட்ரோ குறித்து ஆர்ப்பாட்டம் நடத்துவதாக தெரிவித்த அவர், கடந்த தேர்தலில் சதுரங்க வேட்டை பாணியில் மக்களை ஏமாற்றி திமுக ஆட்சிக்கு வந்ததாகவும் அவர் விமர்சித்துள்ளார். மெட்ரோ திட்டத்தை வைத்து நாடகமாடி மீண்டும் ஆட்சியை பிடிக்க திமுக முயல்வதாகவும் அவர் சாடியுள்ளார்.

News November 22, 2025

BREAKING: இங்கெல்லாம் கனமழை கொட்டும்.. ALERT

image

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் இன்று ஒரு காற்றழுத்த <<18348127>>தாழ்வு பகுதி உருவாகக்கூடும் <<>>என IMD தெரிவித்துள்ளது. இதனால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது. முக்கியமாக கன்னியாகுமரி, நெல்லை, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், புதுக்கோட்டை, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது. உங்க ஊரில் மழை பெய்யுதா?

News November 22, 2025

மத்திய அரசு ஓரவஞ்சனை காட்டுகிறது: வைகோ

image

மத்திய அரசு படுமோசமாக தமிழகத்தை வஞ்சிக்கிறதாக வைகோ குற்றம்சாட்டியுள்ளார். கோவையை விட மக்கள் தொகை குறைவாக உள்ள நகரங்களுக்கு மெட்ரோ ரயில் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் தமிழக அரசின் அறிக்கையை மட்டும் ரத்து செய்து மத்திய அரசு ஓரவஞ்சமாக செயல்படுவதாக விமர்சித்துள்ளார். மேலும், பாஜக தேர்தலில் எளிதாக வெற்றி பெற இது பிஹார் இல்லை தமிழ்நாடு என்றும் கூறியுள்ளார்.

error: Content is protected !!