News March 29, 2024

ஏன் இந்த ஓரவஞ்சனை?

image

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவந்த தினசரி ஊதியத்தை உயர்த்தி அரசாணை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், மாநிலங்களுக்கு மாநிலம் (3%-10%) ஊதிய உயர்வு வேறுபடுகிறது. அதாவது, அரியானாவில் ரூ.374 ஆகவும், தமிழ்நாட்டில் ₹319ஆகவும் தினசரி ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. பாஜக ஆளாத மாநிலங்களுக்கு ஊதிய உயர்வில் ஓரவஞ்சனை செய்யப்படுவதாக நெட்டிசன்கள் விமர்சனங்களை கூறிவருகின்றனர்.

Similar News

News November 28, 2025

பூதக்கண்ணாடியில பாருங்க PM: செல்வப்பெருந்தகை

image

பிஹார் காற்று TN-ல் வீசுவதாக PM மோடி பேசியதற்கு செல்வப்பெருந்தகை பதிலடி கொடுத்துள்ளார். பிஹாரில் பாஜக குறுக்கு வழியில் வென்றதாகவும், அதை வைத்து அனைத்து மாநில தேர்தல் முடிவுகளையும் முடிவு செய்யக்கூடாது எனவும் தெரிவித்துள்ளார். மேலும், காங்., இரண்டாக உடையும் என PM பேசியதை குறிப்பிட்ட அவர், TN பாஜக எத்தனை கோஷ்டிகளாக உடைந்திருக்கிறது என்பதை PM பூதக்கண்ணாடி வைத்து பார்க்கவேண்டும் என கூறியுள்ளார்.

News November 28, 2025

வெள்ளி விலை ₹12,000 உயர்ந்தது

image

வெள்ளி விலை மீண்டும் ஜெட் வேகத்தில் அதிகரித்து வருகிறது. கடந்த 4 நாள்களில் மட்டும் கிலோவுக்கு ₹12,000 உயர்ந்தது. இன்று(நவ.28) கிராமுக்கு ₹3 அதிகரித்து ₹183-க்கும், கிலோவுக்கு ₹3,000 அதிகரித்து ₹1,83,000-க்கும் விற்பனையாகிறது. உலக சந்தையில் வெள்ளி விலை தொடர்ந்து உயர்ந்து வருவதே, இந்தியாவில் விலை அதிகரிப்புக்குக் காரணம் என வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.

News November 28, 2025

தவெக உடன் கூட்டணி வைக்கும் அடுத்த தலைவர் இவரா?

image

தவெகவில் இணைந்த செங்கோட்டையன், டிடிவி தினகரனிடம் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்துவதாக தகவல் கசிந்துள்ளது. ஏற்கனவே பாஜக அவரிடம் கூட்டணி குறித்து பேசி வருவதாக கூறப்படுகிறது. ஆனால், CM வேட்பாளராக EPS இருக்கக்கூடாது என டிடிவி வைக்கும் கோரிக்கையை நிறைவேற்ற முடியாத இடத்தில் பாஜக இருக்கிறது. எனவே, டிடிவி தவெக பக்கம் செல்ல வாய்ப்பிருப்பதாக அரசியல் விமர்சகர்கள் சொல்கின்றனர்.

error: Content is protected !!