News March 29, 2024

ஏன் இந்த ஓரவஞ்சனை?

image

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவந்த தினசரி ஊதியத்தை உயர்த்தி அரசாணை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், மாநிலங்களுக்கு மாநிலம் (3%-10%) ஊதிய உயர்வு வேறுபடுகிறது. அதாவது, அரியானாவில் ரூ.374 ஆகவும், தமிழ்நாட்டில் ₹319ஆகவும் தினசரி ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. பாஜக ஆளாத மாநிலங்களுக்கு ஊதிய உயர்வில் ஓரவஞ்சனை செய்யப்படுவதாக நெட்டிசன்கள் விமர்சனங்களை கூறிவருகின்றனர்.

Similar News

News November 28, 2025

பாலியல் வன்கொடுமை வழக்கில் சிக்கிய காங்., MLA

image

கேரளா காங்கிரஸ் MLA ராகுல் மம்கூத்ததில் மீது, பாலியல் வன்கொடுமை வழக்கை போலீசார் பதிவு செய்துள்ளனர். பெண் ஒருவர் நேரடியாக CM பினராயி விஜயனிடம் கொடுத்த புகாரின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே மலையாள நடிகை உட்பட பல பெண்கள் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவித்திருந்தனர். கடந்த ஆகஸ்ட் மாதமே காங்கிரஸின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து அவர் நீக்கப்பட்டார்.

News November 28, 2025

நடிகர் தர்மேந்திரா மறைவு: ஹேமமாலினி உருக்கம் (PHOTOS)

image

நீங்கள் விட்டு சென்ற இடம் எப்போதும் வெற்றிடமாகவே இருக்கும் என நடிகை ஹேமமாலினி, கணவர் தர்மேந்திராவின் மறைவால் மீளா துயரத்தில் ஆழ்ந்துள்ளார். முதல் மனைவியை விவாகரத்து செய்யாமலே ஹேமமாலினியை தர்மேந்திரா 2-வது திருமணம் செய்ததால், அது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. தற்போது நீங்காத நினைவுகளாக இருக்கும் போட்டோக்களை X தளத்தில் ‘Some memorable moments’ என உருக்கமாக தொடர்ச்சியாக பதிவிட்டு வருகிறார்.

News November 28, 2025

நெருங்கும் டிட்வா புயல்: வார் ரூமில் CM ஸ்டாலின்!

image

டிட்வா புயலால் <<18411226>>5 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்<<>> விடுக்கப்பட்டுள்ள நிலையில், வார் ரூமில் CM ஸ்டாலின் ஆய்வு செய்தார். கலெக்டர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை மேற்கொண்ட CM, முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தார். தொடர்ந்து பேட்டியளித்த அவர், போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், மழையில் மக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான பணிகளை செய்ய ஆணையிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

error: Content is protected !!