News March 29, 2024

ஏன் இந்த ஓரவஞ்சனை?

image

மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் வழங்கப்பட்டுவந்த தினசரி ஊதியத்தை உயர்த்தி அரசாணை ஒன்றை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இதில், மாநிலங்களுக்கு மாநிலம் (3%-10%) ஊதிய உயர்வு வேறுபடுகிறது. அதாவது, அரியானாவில் ரூ.374 ஆகவும், தமிழ்நாட்டில் ₹319ஆகவும் தினசரி ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. பாஜக ஆளாத மாநிலங்களுக்கு ஊதிய உயர்வில் ஓரவஞ்சனை செய்யப்படுவதாக நெட்டிசன்கள் விமர்சனங்களை கூறிவருகின்றனர்.

Similar News

News December 5, 2025

வைகோவின் முடிவால் திமுகவுக்கு நெருக்கடியா?

image

2021 தேர்தலில் 6 தொகுதிகளிலும் உதய சூரியன் சின்னத்தில் நின்றது மதிமுக. எனவே இம்முறை தேர்தல் கமிஷனில் அங்கீகாரம் பெறவும், கட்சியினரை திருப்திப்படுத்தவும் வைகோ முடிவுசெய்துள்ளாராம். இதற்காக, ஏற்கெனவே வென்ற 4 தொகுதிகள் உள்பட 12 தொகுதிகளை கேட்பதாக கூறப்படுகிறது. மேலும், காங்., விசிகவுக்கு அதிக தொகுதிகளை ஒதுக்கினால் தங்களுக்கும் ஒதுக்கவேண்டும் என மதிமுக திமுகவிடம் முறையிடுவதாக பேசப்படுகிறது.

News December 5, 2025

மன அழுத்தம் பற்களை பாதிக்குமா? பாத்துக்கோங்க!

image

அதீத மன அழுத்தம் பற்கள், அதன் ஈறுகள், எலும்புகளை பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். Stress-ஆல் உடலில் சுரக்கும் கார்டிசோல் ஹார்மோன், எதிர்ப்பு சக்தியை குறைக்கிறதாம். இதனால் மன அழுத்தத்தை முறையாக கையாள்வதோடு, 8 மாதங்களுக்கு ஒரு முறை பல் செக்-அப் செய்துகொள்ள வேண்டும் எனவும் தினமும் 2 முறை பல் துலக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE IT.

News December 5, 2025

மன அழுத்தம் பற்களை பாதிக்குமா? பாத்துக்கோங்க!

image

அதீத மன அழுத்தம் பற்கள், அதன் ஈறுகள், எலும்புகளை பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கின்றனர். Stress-ஆல் உடலில் சுரக்கும் கார்டிசோல் ஹார்மோன், எதிர்ப்பு சக்தியை குறைக்கிறதாம். இதனால் மன அழுத்தத்தை முறையாக கையாள்வதோடு, 8 மாதங்களுக்கு ஒரு முறை பல் செக்-அப் செய்துகொள்ள வேண்டும் எனவும் தினமும் 2 முறை பல் துலக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். SHARE IT.

error: Content is protected !!