News March 26, 2025
துக்க வீட்டில் கோஷம் எதற்கு..?

ஒரு பிரபலம் மரணமடைந்து விட்டால், அன்று அவர்கள் வீட்டில் கூட்டம் அலைமோதும். அஞ்சலி செலுத்த வருகிறார்களோ, இல்லையோ, வரும் மற்ற பிரபலங்களைக் காணவே கூட்டம் குவிகிறது. இதில், யாராவது வந்தால், கூச்சலிட்டு கோஷமும் எழுப்புவார்கள். அங்கே வேதனையில் தவிப்பவரின் நிலை, கொஞ்சம் கூட உணர முடியாதா. அவர்களும் மனிதர்கள் தானே. இனியாவது கொஞ்சம் கண்ணியம் காப்போமே. துக்க வீட்டில், ரசிகர்களின் கோஷமும் எதற்கு?
Similar News
News March 29, 2025
அதிமுகவுடன் கூட்டணி பேசி வருகிறோம்: அமித்ஷா தடாலடி

ADMK – BJP கூட்டணி பேச்சுவார்த்தை நடந்துவருவதை அமித்ஷா உறுதி செய்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், அதிமுகவுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும், சரியான நேரம் வரும்போது அறிவிப்போம் என்றும் கூறியுள்ளார். மேலும், DMK அரசின் நடவடிக்கையால் மக்கள் சிரமத்தை எதிர்கொண்டு வருவதாகவும் அவர் விமர்சித்துள்ளார். அமித்ஷாவை சந்தித்தபோது அரசியல் குறித்து பேசவில்லை என EPS கூறியிருந்தது கவனிக்கத்தக்கது.
News March 29, 2025
பாதிக்கப்பட்ட தமிழர்களுக்காக உதவி எண்கள்

மியான்மர் மற்றும் தாய்லாந்தில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் பெரும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது. இந்நிலையில் நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட தமிழர்கள் தொடர்புகொள்ள உதவி எண்களை அயலக தமிழர் நலத்துறை அறிவித்துள்ளது. இந்தியாவில் இருப்பவர்கள் 18003093793 என்ற எண்ணிலும், வெளிநாட்டில் இருப்பவர்கள் +918069009901 என்ற எண்ணிலும் தொடர்புகொள்ளலாம். nrtchennai@gmail.com என்ற மின்னஞ்சலிலும் தொடர்புகொள்ளலாம்.
News March 29, 2025
திமுக கொள்கை கூட்டணி அல்ல சூட்கேஸ் கூட்டணி

அதிமுகவினர் மீது திமுகவினர் கரிசனம் காட்டுவதுபோன்று பேசுவது ஏமாற்று வேலை. இது, ஆடு நனைகிறது என்று ஓநாய் கவலைப்படுவது போன்று உள்ளதாக செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். திமுக கூட்டணி கொள்கைக் கூட்டணி அல்ல; சூட்கேஸ் கூட்டணி என்று விமர்சித்த அவர், திமுகவுக்கு எதிராக பேசும் கூட்டணி கட்சியினரை சூட்கேஸ் உடன் சென்று அமைச்சர்கள் பார்க்கின்றனர் என்று குற்றம் சாட்டியுள்ளார்.