News March 26, 2025
துக்க வீட்டில் கோஷம் எதற்கு..?

ஒரு பிரபலம் மரணமடைந்து விட்டால், அன்று அவர்கள் வீட்டில் கூட்டம் அலைமோதும். அஞ்சலி செலுத்த வருகிறார்களோ, இல்லையோ, வரும் மற்ற பிரபலங்களைக் காணவே கூட்டம் குவிகிறது. இதில், யாராவது வந்தால், கூச்சலிட்டு கோஷமும் எழுப்புவார்கள். அங்கே வேதனையில் தவிப்பவரின் நிலை, கொஞ்சம் கூட உணர முடியாதா. அவர்களும் மனிதர்கள் தானே. இனியாவது கொஞ்சம் கண்ணியம் காப்போமே. துக்க வீட்டில், ரசிகர்களின் கோஷமும் எதற்கு?
Similar News
News December 14, 2025
கேரளாவில் மீண்டும் ஓங்கியது காங்கிரஸின் ‘கை’

கேரள உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. 6 மாநகராட்சிகளில் 4-ஐ காங்கிரஸ் கைப்பற்றியுள்ளது. திருவனந்தபுரத்தில் பாஜகவும், கோழிக்கோட்டில் இடதுசாரிகளும் வெற்றி பெற்றுள்ளன. அதேபோல், மொத்தமுள்ள 87 நகராட்சிகளில் காங்கிரஸ(UDF)-54, இடதுசாரிகள்(LDF) – 28, பாஜக(NDA) – 2-ஐ கைப்பற்றியுள்ளது. 941 கிராம பஞ்சாயத்துகளில் UDF – 505, LDF -340, NDA – 26, 64 இடங்களில் இழுபறி நீடிக்கிறது.
News December 14, 2025
விஜய் மீது பாய்ந்த அமைச்சர் TRB ராஜா

நாங்கள் வளர்ச்சியை முன்வைக்கிறோம், அவர் தொடர்ந்து அரசியலையே முன்வைக்கிறார் என விஜய்க்கு அமைச்சர் TRB ராஜா பதிலடி கொடுத்துள்ளார். புதுச்சேரியில் பேசிய அவர், மத்திய அரசின் ஒத்துழைப்பின்றி TN-ல் 16% பொருளாதார வளர்ச்சியை நிரூபித்துக்காட்டியுள்ளதாக கூறினார். புதுச்சேரியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், திமுக அரசு, CM ஸ்டாலின் செயல்பாடுகளை விஜய் கடுமையாக விமர்சித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
News December 14, 2025
அதிமுகவில் இருந்து விலகி தவெகவில் இணைந்தனர்

2026 தேர்தலையொட்டி, புதிய உறுப்பினர்களை சேர்க்கும் பணியில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில், திமுக, அதிமுக, தேமுதிக, மனித நேய ஜனநாயக கட்சி உள்ளிட்ட கட்சிகளிலிருந்து விலகி சுமார் 500-க்கும் மேற்பட்டோர், நாகை மாவட்ட செயலாளர் மா.சுகுமாறன் முன்னிலையில் தவெகவில் இணைந்தனர். அவர்கள் அனைவரும் விரைவில் விஜய்யை நேரில் சந்திக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாம்.


