News March 26, 2025

துக்க வீட்டில் கோஷம் எதற்கு..?

image

ஒரு பிரபலம் மரணமடைந்து விட்டால், அன்று அவர்கள் வீட்டில் கூட்டம் அலைமோதும். அஞ்சலி செலுத்த வருகிறார்களோ, இல்லையோ, வரும் மற்ற பிரபலங்களைக் காணவே கூட்டம் குவிகிறது. இதில், யாராவது வந்தால், கூச்சலிட்டு கோஷமும் எழுப்புவார்கள். அங்கே வேதனையில் தவிப்பவரின் நிலை, கொஞ்சம் கூட உணர முடியாதா. அவர்களும் மனிதர்கள் தானே. இனியாவது கொஞ்சம் கண்ணியம் காப்போமே. துக்க வீட்டில், ரசிகர்களின் கோஷமும் எதற்கு?

Similar News

News December 15, 2025

கூட்டணி முடிவு.. அழைப்பு விடுத்தார் பிரேமலதா

image

கடலூரில் தேமுதிக சார்பில் ஜன.9-ல் ‘மக்கள் உரிமை மீட்பு’ மாநாட்டில் தேமுதிகவினர், பொதுமக்கள் தவறாமல் பங்கேற்க வேண்டும் என பிரேமலதா அழைப்பு விடுத்துள்ளார். மாநாட்டில் 2026 தேர்தலுக்கான கூட்டணி உள்ளிட்ட பல முக்கிய அறிவிப்புகள் வெளியிட இருப்பதாக தெரிகிறது. மேலும், ஜனவரிக்குள் கூட்டணியை இறுதி செய்து, கூட்டணிக் கட்சித் தலைவர்களையும் மாநாட்டில் பங்கேற்க வைக்க திட்டமிட்டுள்ளார்.

News December 15, 2025

சற்றுமுன்: மழை வெளுத்து வாங்கும்

image

தமிழகத்தில் டிச.17, 18 ஆகிய தேதிகளில் மழை பெய்யக்கூடும் என்று IMD கணித்துள்ளது. தென் தமிழக கடலோரம், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளில் மணிக்கு 35-45 கிமீ வேகத்தில் சூறாவளிக் காற்று வீசும் என்பதால், அப்பகுதிகளுக்கு மீனவர்கள் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளது. மேலும், தமிழகத்தில் குறைந்தபட்ச வெப்பநிலை 2-3 °C இயல்பை விட குறைவாக இருக்கக்கூடும் என தெரிவித்துள்ளது.

News December 15, 2025

BREAKING: ஞானசேகரன் மீதான குண்டம் சட்டம் ரத்து

image

அண்ணா யுனிவர்சிட்டி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் சிறையில் உள்ள ஞானசேகரன் மீதான குண்டர் சட்டத்தை சென்னை ஐகோர்ட் ரத்து செய்துள்ளது. அவரது தாயார் கங்காதேவி தொடர்ந்த மனுவை விசாரித்த கோர்ட், இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது. கடந்த ஜூன் 2-ம் தேதி சென்னை மகளிர் கோர்ட் அவருக்கு 30 ஆண்டுகள் ஆயுள் தண்டனை, ₹90,000 அபராதம் விதித்த நிலையில் தற்போது அவர் புழல் சிறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

error: Content is protected !!