News March 26, 2025
துக்க வீட்டில் கோஷம் எதற்கு..?

ஒரு பிரபலம் மரணமடைந்து விட்டால், அன்று அவர்கள் வீட்டில் கூட்டம் அலைமோதும். அஞ்சலி செலுத்த வருகிறார்களோ, இல்லையோ, வரும் மற்ற பிரபலங்களைக் காணவே கூட்டம் குவிகிறது. இதில், யாராவது வந்தால், கூச்சலிட்டு கோஷமும் எழுப்புவார்கள். அங்கே வேதனையில் தவிப்பவரின் நிலை, கொஞ்சம் கூட உணர முடியாதா. அவர்களும் மனிதர்கள் தானே. இனியாவது கொஞ்சம் கண்ணியம் காப்போமே. துக்க வீட்டில், ரசிகர்களின் கோஷமும் எதற்கு?
Similar News
News December 28, 2025
கண்ணதாசன் பொன்மொழிகள்!

*சிறகு கிடைத்தால் பறப்பது மட்டும் வாழ்க்கையல்ல. சிலுவை கிடைத்தாலும் சுமப்பது தான் வாழ்க்கை *தேவைக்கு மேல் பணமும், திறமைக்கு மேல் புகழும், உழைப்புக்கு மேல் பதவியும் கிடைத்து விட்டால், பார்வையில் படுவது எல்லாம் சாதாரணமாக தான் தெரியும் *சாக்கடை என்பது மோசமான பகுதிதான். ஆனால் அப்படி ஒன்று இல்லாவிட்டால் ஊரேச் சாக்கடை ஆகிவிடும் *அளவுக்கு மிஞ்சிய சாமர்த்தியம், முட்டாள்தனத்தில் போய் முடியும்.
News December 28, 2025
ஹிட்லர் ஆட்சி நடத்தும் CM ஸ்டாலின் : அன்புமணி

உரிமைக்காக போராடும் தொழிலாளர்கள் மீது திமுக அரசு அடக்குமுறையை கட்டவிழ்ப்பதாக அன்புமணி சாடியுள்ளார். திமுகவினரிடையே முறைகேடு தலைதூக்குமானால் சர்வாதிகாரியாக மாறுவேன் என கூறிய CM, அமைச்சர்களின் ஊழல் பற்றி ED அனுப்பிய ஆதாரங்களின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்காதது ஏன் என கேள்வி எழுப்பியுள்ளார். அடித்தட்டு மக்களிடம் வீரத்தை காட்டும் நவீன ஹிட்லரின் ஆட்சி 2026-ல் வீழ்வது உறுதி என X-ல் அவர் கூறியுள்ளார்.
News December 28, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 563
▶குறள்:
வெருவந்த செய்தொழுகும் வெங்கோல னாயின்
ஒருவந்தம் ஒல்லைக் கெடும்.
▶பொருள்: குடிமக்கள் அஞ்சும்படியாகச் செயல் செய்யும் கொடிய ஆட்சி விரைந்து அழிவது உறுதி.


