News October 16, 2025

இதுதான் வடகிழக்கு பருவமழை..!

image

நிலம் கடலுக்கு இடையேயான வெப்பநிலை வேறுபாடு காரணமாக பருவமழை ஏற்படுகிறது. நிலப்பரப்பில் உருவாகும் உயர் அழுத்தத்தால் காற்று வடகிழக்கு திசையில் வீசுகிறது. இது வங்காள விரிகுடாவில் இருந்து ஈரப்பதத்தை ஈர்த்து, தமிழகம் மற்றும் இந்திய கிழக்கு கடற்கரை பகுதிகளில் மழையை தருகிறது. இதுவே வடகிழக்கு பருவமழை. இது, அக்டோபர் முதல் டிசம்பர் வரை நிகழ்கிறது. இதை, ‘பின்னடையும் பருவமழை’ என்றும் அழைக்கின்றனர்.

Similar News

News October 16, 2025

சத்தீஸ்கரில் ஒரேநாளில் 171 நக்சல்கள் சரண்

image

சத்தீஸ்கரில் இன்று ஒரே நாளில் 171 நக்சல்கள் சரணடைந்துள்ளதாக அமித்ஷா தெரிவித்துள்ளார். அரசமைப்பை நம்பி வன்முறையை கைவிட்டு வந்தவர்களை பாராட்டுவதாகவும், மோடி அரசின் தீவிர நடவடிக்கையால் நக்சலிசம் அழிவின் இறுதியில் உள்ளதாகவும் கூறியுள்ளார். மீதமுள்ள நக்சல்களும் சரணடைய வேண்டும் என வலியுறுத்திய அவர், இல்லையென்றால் ஆயுதப்படைகள் அவர்களை வீழ்த்தும் எனவும் எச்சரித்துள்ளார்.

News October 16, 2025

பழைய பென்ஷன் திட்டம்: பேச்சுவார்த்தைக்கு அரசு தயார்

image

திமுக தேர்தல் வாக்குறுதிப்படி பழைய பென்ஷன் திட்டம் அமல்படுத்துவது, உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழகத்தின் ஓய்வு பெற்ற ஊழியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறனர். அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த அரசு தயாராக உள்ளதாக சட்டப்பேரவையில் அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவைத்தொகை வழங்க ₹1,300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

News October 16, 2025

உதவி பேராசிரியர் தேர்வு.. நாளை முதல் Apply பண்ணுங்க

image

அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 2,708 உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு, நாளை முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. www.trb.tn.gov.in என்ற தளத்தில் விண்ணப்பதாரர்கள் தங்களது கல்வித் தகுதி, வயது, பாடவாரியான விவரங்களை பதிவு செய்ய வேண்டும். இதற்கான கால அவகாசம் நவ.10-ம் தேதியுடன் நிறைவடைகிறது.

error: Content is protected !!