News March 16, 2024

45 நாட்கள் இடைவெளி எதற்கு?

image

தமிழ்நாட்டில் வாக்குப் பதிவுக்கும் (ஏப்ரல் 19) வாக்கு எண்ணிக்கைக்கும் (ஜூன் 4) இடையே 45 நாட்கள் இடைவெளி இருக்கின்றன. தமிழ்நாட்டில் முதல் கட்டத்திலேயே வாக்குப்பதிவு நடைபெறுவதால் முடிவுகளை தெரிந்துகொள்ள 45 நாட்கள் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த இடைப்பட்ட நேரத்தில் வாக்குப் பெட்டிகளை பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டிய தேவையும் ஏற்பட்டுள்ளது.

Similar News

News November 22, 2025

இந்த நாள்களில் ரேஷன் கடைகள் லீவு.. அரசு அறிவிப்பு

image

தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளுக்கு 2026-ம் ஆண்டிற்கான விடுமுறை பட்டியலை உணவுப்பொருள் வழங்கல் துறை வெளியிட்டுள்ளது. பொங்கல் பண்டிகை, தைப்பூசம், ரம்ஜான், பக்ரீத், மே தினம், மிலாடி நபி, விநாயகர் சதுர்த்தி, ஆயுத பூஜை தீபாவளி, கிறிஸ்துமஸ் உள்பட மொத்தம் 23 நாள்கள் விடுமுறையாகும். மேலும், ஜன.14-க்குள் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுப் பொருள்களை வழங்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

News November 22, 2025

அதிமுக ஒருங்கிணைப்பு; பாஜகவின் புதிய ஸ்கெட்ச்!

image

அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில் பாஜக குறியாக இருக்கிறது. இதற்கு, EPS ஒத்துவராததால் பிரிந்தவர்களை சேர்க்க வேண்டும் என்ற பழைய பிளானுக்கு பதிலாக, தற்போது பாஜக புதிய ஸ்கெட்ச் ஒன்றை போட்டிருப்பதாக கூறப்படுகிறது. அதாவது, பாஜகவுக்கு ஒதுக்கப்படும் சீட்டுகளில் சிலவற்றை பிரிந்திருப்பவர்களுக்கு வழங்கலாம் என திட்டம் இருக்கிறதாம். இதனாலேயே அதிமுகவிடம் பாஜக 50 சீட்களை கேட்கிறது எனவும் கூறுகின்றனர்.

News November 22, 2025

தமிழ் நடிகர்கள் அடுத்தடுத்து மரணம்

image

நடிப்பு பயிற்சியாளர் கோபாலி(92), <<18290175>>இயக்குநரும், நடிகருமான வி.சேகர்<<>>(73), <<18248121>>நடிகர் அபிநய்(48)<<>> என இம்மாதத்தில் அடுத்தடுத்து முக்கிய நபர்களை தமிழ் சினிமா இழந்துவிட்டது. இதில் கோபாலி, ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், சிரஞ்சீவி, நாசர் உள்ளிட்ட பலர் உச்சபட்ச நடிகர்களுக்கு பயிற்சி அளித்தவர். கடந்த 18-ம் தேதி மறைந்த நிலையில், அவரது இல்லத்திற்கு இன்றும் சினிமா பிரபலங்கள் பலர் நேரில் சென்று ஆறுதல் கூறி வருகின்றனர்.

error: Content is protected !!