News October 7, 2024
அப்போ வராத வான்படை இப்போ எதுக்கு? சீமான் ஆவேசம்

மெரினாவில் விமானப் படை ஏர் ஷோ நிகழ்ச்சியில் 5 பேர் உயிரிழந்தது, அரசின் அலட்சியத்தால் நிகழ்ந்த படுகொலை என சீமான் விமர்சித்துள்ளார். மேலும், ஒக்கி புயலால் நடுக்கடலில் என் மீனவர்கள் தத்தளிக்கும் போது வராத வான்படை விமானங்கள், குரங்கணி காட்டுத் தீ விபத்தில் சிக்கியவர்களுக்காக வராத வான்படை விமானங்கள், இப்போது கடற்கரையில் சாகசம் காட்டுவதால் தமிழினத்திற்கு கிடைக்க போகும் நன்மை என்ன” என வினவினார்.
Similar News
News August 17, 2025
இன்று கூட்டணியை அறிவிக்கிறார் ராமதாஸ்

இன்று திட்டமிட்டபடி பாமக பொதுக்குழு நடைபெறவுள்ளது. பொதுக்குழுவில் 2026 தேர்தலில் யாருடன் கூட்டணி, கட்சியின் தலைவர் பதவி உள்ளிட்ட பல முக்கிய முடிவுகள் எடுக்கப்படுகின்றன. திமுகவை அட்டாக் செய்யும் அன்புமணி, அதிமுக – பாஜக கூட்டணியில் இணைய விரும்பும் நிலையில், ராமதாஸ் திமுகவுடன் கூட்டணி அமைக்க முடிவு செய்துள்ளதாகவும், இன்று அறிவிப்பு வெளியாகும் எனவும் தகவல் வெளியாகியுள்ளது.
News August 17, 2025
கோலியின் சாதனையை தகர்த்த பிரேவிஸ்

AUS-க்கு எதிரான T20 தொடரில் 2-1 என்ற கணக்கில் SA தோல்வியடைந்துள்ளது. இந்நிலையில்,’பேபி டிவில்லியர்ஸ்’ என வர்ணிக்கப்படும் பிரேவிஸின் அதிரடி ஆட்டம் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இத்தொடரில் 180 ரன்கள் அடித்த அவர், மொத்தம் 14 சிக்ஸர்களை பறக்கவிட்டார். AUS மண்ணில் அந்த அணிக்கெதிராக அதிக சிக்ஸர்கள் அடித்தவர்கள் பட்டியலில் கோலி(12) முதலிடத்தில் இருந்த நிலையில், தற்போது பிரேவிஸ் முந்தியுள்ளார்.
News August 17, 2025
அண்ணாமலைக்கான வாக்குகளும் நீக்கம்: அ.சம்பத்

EC-யை தொடர்ந்து விமர்சித்து வரும் ராகுல் காந்தியின் வாக்குரிமையை ரத்து செய்யவேண்டுமென அர்ஜுன் சம்பத் தெரிவித்துள்ளார். உண்மையிலேயே வாக்குகளை திருடுவது காங்கிரஸும், திமுகவும்தான் எனவும், கோவையில் அண்ணாமலை ஜெயித்துவிடக்கூடாது என்பதற்காக அவருக்கு வாக்களிப்பவர்களின் வாக்குகள் நீக்கப்பட்டதாகவும் கூறினார். திருப்பூரில் தூய்மை பணிகளை தனியாருக்கு விடும் முயற்சியை திமுக அரசு கைவிட வேண்டுமென்றார்.