News April 17, 2025
அட்சய திருதியில் ஏன் தங்கம் வாங்க வேண்டும்?

சித்திரை மாத அமாவாசைக்கு அடுத்த வளர்பிறை திருதியையே அட்சயதிருதியை. அட்சயம் என்றால் தேயாது, குறையாது, வளர்தல் என்று பொருள். நன்மைகளை அள்ளிக் கொடுக்கும் இந்த நாளில், தானங்கள் செய்து புண்ணியத்தைப் பெறுவது மிகவும் சிறப்பு. இந்த நாளில் செய்யப்படும் புதிய தொடக்கங்கள், முதலீடுகள் அனைத்தும் அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் கொண்டு வரும் என்பது நம்பிக்கை. வரும் ஏப்ரல் 30-ம் தேதி இந்த திருதியை வருகிறது.
Similar News
News December 1, 2025
மதிமுக கூட்டணி மாற வாய்ப்பு: மல்லை சத்யா

திமுக கூட்டணியில் மதிமுக மதில் மேல் பூனையாகத்தான் எப்போதும் இருப்பதாக மல்லை சத்யா தெரிவித்துள்ளார். மதிமுகவுடன் பேச்சுவார்தை நடத்தியதை எல்.முருகன் மறைமுகமாக தெரிவித்துள்ளதாக கூறிய அவர், நிச்சயமாக மதிமுக கூட்டணி மாறுவதற்கான சூழல் இருப்பதாக பேசியுள்ளார். மேலும், துரைவைகோ அவ்வளவு பரிசுத்தமானவர் என்றால் MP பதவியை ராஜினாமா செய்துவிட்டு தனித்து நின்று தேர்தலை சந்திக்க வேண்டும் என விமர்சித்துள்ளார்.
News December 1, 2025
ஆட்டநாயகன் விருதுகள்… உச்சத்தை எட்டும் கோலி!

SA-வுக்கு எதிரான முதல் ODI-யில் சதம் அடித்த கோலி ஆட்டநாயகனாக தேர்வானார். இதன் மூலம், சர்வதேச அளவில் 3 வகை கிரிக்கெட்டிலும் சேர்த்து 70 முறை ஆட்டநாயகன் விருதை அவர் வென்றுள்ளார். ODI-யில் 44 முறை, T20-யில் 16 முறை, டெஸ்டில் 10 முறை ஆட்டநாயகனாக கோலி தேர்வாகியுள்ளார். இந்த பட்டியலில் சச்சின் 76 ஆட்டநாயகன் விருதுகளுடன் முதல் இடத்தில் உள்ளார். கடவுளின் ரெக்கார்டை கிங் முந்துவாரா?
News December 1, 2025
விடுமுறை அறிவித்தார் கலெக்டர்

நாகூர் ஆண்டவர் கந்தூரி திருவிழாவை முன்னிட்டு, டிச.1-ம் தேதி (இன்று) நாகை மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அளித்து, அம்மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி, பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு விடுமுறையாகும். இந்த விடுமுறையை ஈடு செய்ய டிச.13-ம் தேதி பணி நாளாக இருக்கும். மேலும், மிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்ட சில மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


