News September 6, 2025

PAK உடனான போட்டியை புறக்கணிக்காதது ஏன்?

image

ஆசிய கோப்பையில் PAK உடனான போட்டியை இந்தியா புறக்கணிக்காதது குறித்து BCCI மவுனம் கலைத்துள்ளது. மத்திய அரசு வகுத்துள்ள கொள்கைகளின் படி சர்வதேச, பல தரப்பு போட்டிகளில் மட்டுமே IND அணி விளையாடுவதாகவும், PAK உடனான இருதரப்பு போட்டிகளில் விளையாடாது என்றும் விளக்கம் அளித்துள்ளது. மேலும், சர்வதேச போட்டிகளில் விளையாடாவிட்டால், இந்தியா மீது தடை விதிக்க வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

Similar News

News March 13, 2026

எண்ணெய் கப்பல்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாது: US

image

ஈரான் தாக்குதலால் ஹார்முஸ் நீரிணையில் பல்வேறு நாடுகளுக்கு செல்லக்கூடிய எண்ணெய் சரக்கு கப்பல்கள் காத்து கிடக்கின்றன. இந்நிலையில் ஹார்முஸ் வழியாக செல்லும் கப்பல்களுக்கு தாங்கள் பாதுகாப்பு வழங்க முடியாது; ஈரானை தாக்குவதில் தான் தங்கள் கவனம் உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. முன்னதாக ஹார்முஸ் நீரிணையை கப்பல்கள் துணிச்சலுடன் கடந்து செல்ல வேண்டும் என US கூறிய நிலையில், தற்போது பின்வாங்கியுள்ளது.

News March 13, 2026

ஈரான் அதிபருடன் பேசிய PM மோடி

image

மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றம் குறித்து ஈரான் அதிபர் மசூத் பெஷ்கியனுடன் விவாதித்ததாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். தனது X பக்கத்தில், பொதுமக்களின் உயிரிழப்பு & உள்கட்டமைப்புக்கு ஏற்படும் சேதம் குறித்து ஆழ்ந்த கவலை தெரிவித்ததாக கூறியுள்ளார். இந்திய குடிமக்களின் பாதுகாப்பு மற்றும் தடையற்ற எரிசக்தி விநியோகம் ஆகியவை தனது முதன்மையான முன்னுரிமைகள் என்பதையும் ஈரான் அதிபரிடம் மோடி வலியுறுத்தியுள்ளார்.

News March 13, 2026

பாகிஸ்தான் வீரரை ஏலத்தில் எடுத்த காவ்யா மாறன்

image

இங்கிலாந்தில் நடைபெறும் ’தி ஹண்ட்ரட்’ கிரிக்கெட் தொடருக்கான ஏலத்தில் பாக்., அணியின் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி எடுத்துள்ளது. லண்டனில் நடைபெற்ற ஏலத்தில் SRH அணியின் CEO காவ்யா மாறன் நேரடியாக பங்கேற்று சுமார் ₹2.34 கோடிக்கு அவரை வாங்கியுள்ளார். இதன்மூலம் இந்திய உரிமையாளர்கள் பாக்., வீரர்களை தேர்வு செய்வதில்லை என்ற எழுதப்படாத விதிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

error: Content is protected !!