News August 16, 2024
மகாராஷ்டிராவுக்கு தேர்தல் அறிவிக்காதது ஏன்?

இந்த ஆண்டுக்குள் 4 சட்டமன்றங்களுக்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே முதலில் ஜம்மு காஷ்மீர், ஹரியானாவுக்கும், பின்னர் மகாராஷ்டிரா, ஜார்கண்டிற்கும் தேர்தல் நடைபெறுவதாக கூறினார். பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையும் ஒரு காரணமென்ற அவர், மகாராஷ்டிராவில் மழை பாதிப்பு மற்றும் தொடர் விழாக்களை கருத்தில் கொண்டும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.
Similar News
News January 12, 2026
முன்னாள் துணை ஜனாதிபதி AIIMS-ல் அனுமதி

முன்னாள் துணை ஜனாதிபதி ஜக்தீப் தன்கர் உடல்நலக்குறைவால் டெல்லி AIIMS-ல் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு டாக்டர்கள் தொடர்ந்து சிகிச்சை அளித்து வருகின்றனர். அவருக்கு என்ன பிரச்னை என்பது குறித்து எந்த தகவலும் வெளியாகவில்லை. இருப்பினும், நாளை அவரின் உடல்நிலை மற்றும் டிஸ்சார்ஜ் தொடர்பாக AIIMS அறிக்கை வெளியிட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
News January 12, 2026
நேந்திரம் பழத்தில் இவ்வளவு நன்மைகளா?

நேந்திர வாழைப்பழத்தில் பல்வேறு சத்துகள் நிறைந்துள்ளதால், வாரத்தில் 4 நாள்களாவது சாப்பிடுவது, பின்வரும் நன்மைகளை தருவதாக ஊட்டச்சத்து நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். *செரிமான மண்டலத்தை சீராக்குகிறது *உடலுக்கு உடனடி ஆற்றலை வழங்குகிறது *ரத்த அழுத்தத்தை சீராக்கி, இதயத்தை பாதுகாக்கிறது *எலும்புகளை வலுப்படுத்துகிறது *நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது *சருமம் மற்றும் முடி ஆரோக்கியத்துக்கு நல்லது.
News January 12, 2026
முதல்வர் ஸ்டாலின் உருக்கமாக இரங்கல்

தமிழக காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் கே.எஸ்.அழகிரி மனைவி மறைவுக்கு CM மு.க.ஸ்டாலின் உருக்கமாக இரங்கல் தெரிவித்துள்ளார். வத்சலா உடலுக்கு நேரில் சென்று அஞ்சலி செலுத்தாத நிலையில், தொலைபேசி மூலம் அழகிரியை தொடர்பு கொண்டு தனது இரங்கலை கூறியுள்ளார். இதற்கிடையில், திமுக நிர்வாகிகள், விசிக ரவிக்குமார் உள்ளிட்டோர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தியுள்ளனர்.


