News August 16, 2024

மகாராஷ்டிராவுக்கு தேர்தல் அறிவிக்காதது ஏன்?

image

இந்த ஆண்டுக்குள் 4 சட்டமன்றங்களுக்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே முதலில் ஜம்மு காஷ்மீர், ஹரியானாவுக்கும், பின்னர் மகாராஷ்டிரா, ஜார்கண்டிற்கும் தேர்தல் நடைபெறுவதாக கூறினார். பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையும் ஒரு காரணமென்ற அவர், மகாராஷ்டிராவில் மழை பாதிப்பு மற்றும் தொடர் விழாக்களை கருத்தில் கொண்டும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.

Similar News

News January 2, 2026

‘பொங்கல் பரிசாக ₹5,000 வழங்குக’.. நயினார் அறிக்கை

image

பொங்கல் பரிசு விவகாரத்தில் திமுக அரசை கண்டித்து நயினார் நாகேந்திரன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், பொங்கலுக்கு ₹5,000 வழங்குவார்கள் என எதிர்பார்த்துவரும் நிலையில், மக்களுக்கு திமுக அரசு ஏமாற்றத்தை பரிசளித்துள்ளதாக சாடியுள்ளார். ஆட்சி முடியும் தருவாயிலாவது போங்காட்டத்தை ஒதுக்கி வைத்து, ₹5,000 ரொக்கத்துடன் பொங்கல் பரிசை சரிவர வழங்குமாறு CM ஸ்டாலினுக்கு அவர் வலியுறுத்தியுள்ளார். உங்க கருத்து?

News January 2, 2026

AI எங்கிருந்து தகவல்களை பெறுகிறது தெரியுமா?

image

AI என்பது மனிதர்களைப் போல சிந்தித்து செயல்படக் கூடிய கணினி தொழில்நுட்பமாகும். ஆனால் AI-க்கு மனிதர்களைப் போல நேரடியாக அனுபவமோ அல்லது உணர்வோ கிடையாது. அது செயல்படுவதற்குத் தேவையான தகவல்களை பல்வேறு தளங்களிலிருந்து பெறுகிறது. அவை என்னென்ன தளங்கள் என்று, மேலே போட்டோக்களாக பகிர்ந்துள்ளோம். ஒவ்வொன்றாக ஸ்வைப் செய்து பாருங்க. SHARE.

News January 2, 2026

ஜோதிமணியின் பதிவு அதிர்ச்சியளிக்கிறது: SP

image

அழிவின் பாதையில் தமிழ்நாடு காங்கிரஸ் செல்வதாக <<18740431>>ஜோதிமணி<<>> SM-ல் பதிவிட்டது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் வளர்ச்சிக்கு அனைவரும் உழைக்கும்போது, அவர் ஏன் இவ்வாறு கூறினார் என்று தெரியவில்லை என செல்வப் பெருந்தகை(SP) தெரிவித்துள்ளார். ஜோதிமணி மாவட்டத்தில்(கரூர்) உட்கட்சி பிரச்னை இருப்பது உண்மையே, தான் அதை தீர்த்து வைத்துள்ளதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.

error: Content is protected !!