News August 16, 2024
மகாராஷ்டிராவுக்கு தேர்தல் அறிவிக்காதது ஏன்?

இந்த ஆண்டுக்குள் 4 சட்டமன்றங்களுக்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே முதலில் ஜம்மு காஷ்மீர், ஹரியானாவுக்கும், பின்னர் மகாராஷ்டிரா, ஜார்கண்டிற்கும் தேர்தல் நடைபெறுவதாக கூறினார். பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையும் ஒரு காரணமென்ற அவர், மகாராஷ்டிராவில் மழை பாதிப்பு மற்றும் தொடர் விழாக்களை கருத்தில் கொண்டும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.
Similar News
News January 12, 2026
ஹாஸ்பிடல் கொலைக்களமாக மாறியுள்ளது: அன்புமணி

கீழ்ப்பாக்கம் அரசு ஹாஸ்பிடலுக்குள் இளைஞர் ஒருவரை, மர்ம கும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இந்நிலையில், உயிர்காக்கும் ஹாஸ்பிடல்கள் கூட மக்களுக்கு பாதுகாப்பில்லாத கொலைக்களங்களாக மாறும் அளவுக்கு, திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைந்துள்ளதாக அன்புமணி குற்றஞ்சாட்டியுள்ளார். TN-யையும், TN மக்களையும் காப்பாற்ற ஒரே வழி, திமுகவை ஆட்சியில் இருந்து அகற்றுவது தான் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
News January 12, 2026
11 ஆண்டுக்கு பிறகு வரும் Perfect பிப்ரவரி!

உங்க காலண்டரை திருப்பி பாருங்க. பிப்ரவரியில் சரியாக 28 நாள்கள், 4 வாரங்கள் வரும். 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் தொடங்கி 28-ம் தேதி சனிக்கிழமையில் முடிகிறது. Non- Leap வருடங்களில் 1-ம் தேதி ஞாயிற்றுக்கிழமையில் வருவதே, Perfect February-யாக அமைகிறது. கச்சிதமாக வரும் இந்த February 6 அல்லது 11 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும். முன்னர், 2015-ல் நிகழ்ந்தது. அடுத்ததாக 2037-ல் தான் நிகழுமாம். SHARE IT.
News January 12, 2026
உயிர் பறிக்கும் இடமா ஹாஸ்பிடல்? EPS

உயிர் காக்கும் அரசு ஹாஸ்பிடல்கள் உயிரை பறிக்கும் களமாக மாறியிருப்பது கடும் வேதனை அளிப்பதாக EPS கண்டனம் தெரிவித்துள்ளார். கீழ்ப்பாக்கம் அரசு ஹாஸ்பிடலுக்குள் புகுந்து மகப்பேறு வார்டு அருகே இளைஞர் ஒருவரை மர்மகும்பல் சரமாரியாக வெட்டி படுகொலை செய்தது. இதற்கு விளம்பர மாடல் திமுக அரசு தான் காரணம் என குற்றஞ்சாட்டிய EPS, இன்னும் 3 மாதங்களில் இதற்கெல்லாம் முடிவு எட்டப்படும் என்று தெரிவித்துள்ளார்.


