News August 16, 2024
மகாராஷ்டிராவுக்கு தேர்தல் அறிவிக்காதது ஏன்?

இந்த ஆண்டுக்குள் 4 சட்டமன்றங்களுக்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே முதலில் ஜம்மு காஷ்மீர், ஹரியானாவுக்கும், பின்னர் மகாராஷ்டிரா, ஜார்கண்டிற்கும் தேர்தல் நடைபெறுவதாக கூறினார். பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையும் ஒரு காரணமென்ற அவர், மகாராஷ்டிராவில் மழை பாதிப்பு மற்றும் தொடர் விழாக்களை கருத்தில் கொண்டும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.
Similar News
News January 31, 2026
BREAKING: இந்தியா அபார வெற்றி

நியூசி., அணிக்கு எதிரான கடைசி T20 போட்டியில் இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. முதலில் பேட்டிங் செய்த இந்தியா, 271 ரன்களை குவித்தது. இந்திய வீரர் இஷான் கிஷன் சதமடித்து அசத்தினார். இமாலய இலக்குடன் களமிறங்கிய நியூசி., வீரர்கள் முதல் 10 ஓவர்களில் 131 ரன்கள் குவித்து மிரட்டலான தொடக்கம் கொடுத்தனர். எனினும், அடுத்த 10 ஓவர்களில் இந்திய வீரர்களின் ஆதிக்கத்தால் அந்த அணி 225 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
News January 31, 2026
மார்பக மறுசீரமைப்பு சிகிச்சை செய்துகொள்ளலாமா?

மார்பக மறுசீரமைப்பு சிகிச்சை செய்துகொள்வதில் எந்த தவறுமில்லை என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர். இது பற்களை சீரமைப்பது போலத்தான், இதை யார் வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம் என்றும் கூறுகின்றனர். இச்சிகிச்சையையினால் மார்பக புற்றுநோய் ஏற்படுமோ என்ற அச்சத்தில் பலர் உள்ளனர். ஆனால், இந்த சிகிச்சையால் புற்றுநோய் ஏற்படாது; பெண்கள் தன்னம்பிக்கை பெற தாராளமாக மறுசீரமைப்பு செய்துகொள்ளலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
News January 31, 2026
BREAKING: அதிமுகவில் மீண்டும் இணைந்தனர்

OPS பக்கம் இருந்த ராமநாதபுரத்தை சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் மீண்டும் அதிமுகவிற்கு திரும்பியுள்ளனர். ராமநாதபுரம் மாவட்ட எம்ஜிஆர் மன்றச் செயலாளர், மாவட்ட இலக்கிய அணிச் செயலாளர், பல்வேறு நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி ஒன்றிய செயலாளர்கள், திருவாடானை, முதுகுளத்தூர், கமுதி, ராமேஸ்வரம், பரமக்குடி, கடலாடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பல முக்கிய நிர்வாகிகள் EPS முன்னிலையில் அதிமுகவில் மீண்டும் இணைந்தனர்.


