News August 16, 2024

மகாராஷ்டிராவுக்கு தேர்தல் அறிவிக்காதது ஏன்?

image

இந்த ஆண்டுக்குள் 4 சட்டமன்றங்களுக்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே முதலில் ஜம்மு காஷ்மீர், ஹரியானாவுக்கும், பின்னர் மகாராஷ்டிரா, ஜார்கண்டிற்கும் தேர்தல் நடைபெறுவதாக கூறினார். பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையும் ஒரு காரணமென்ற அவர், மகாராஷ்டிராவில் மழை பாதிப்பு மற்றும் தொடர் விழாக்களை கருத்தில் கொண்டும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.

Similar News

News January 1, 2026

தவெக கூட்டணியில் விசிக வருகிறதா? KAS பதில்

image

விஜய் மக்கள் சக்தியோடு CM-ஆக வருவார் எனவும், அதை எந்த சக்தியாலும் தடுத்து விட முடியாது என்றும் KAS தெரிவித்துள்ளார். திருப்பூரில் இன்று பேசிய அவர், <<18721651>>திருமா<<>> பேச்சால் திமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது. அடுத்து என்ன நடக்கும் என்பதற்கு காலம் தான் பதில் சொல்லும். மேலும், தவெக கூட்டணியில் விசிக வருகிறதா என்பதை விட, விசிக தொண்டர்கள் அனைவரும் தவெகவிற்கு வருகிறார்கள் என்பதே உண்மை எனத் தெரிவித்தார்.

News January 1, 2026

2025-ல் AI செய்த சிறப்பான சம்பவங்கள்

image

2025-ல் AI, வெறும் சக்திவாய்ந்த தொழில்நுட்பமாக மட்டும் பிரபலமடையவில்லை. உணர்ச்சி, படைப்பாற்றல், நகைச்சுவை, எளிதாக அணுகும்முறை ஆகியவற்றால் டிரெண்டானது. இந்த தொழில்நுட்பம் மனிதத்தன்மை வாய்ந்ததாக உணரப்பட்டது. அந்த வகையில் எதுவெல்லாம் டிரெண்டானது என்று, மேலே உள்ள போட்டோக்களை ஸ்வைப் செய்து பாருங்க. இதில் நீங்கள் எதை என்ஜாய் செய்தீங்க? கமெண்ட்ல சொல்லுங்க. SHARE.

News January 1, 2026

திமுகவின் அடிமைகளான VCK, கம்யூனிஸ்ட் கட்சிகள்: பாஜக

image

தமிழகத்தில் செவிலியர்கள், ஆசிரியர்கள், தூய்மை பணியாளர்கள் என பல தரப்பினரும் அரசுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தமிழிசை சுட்டிக்காட்டியுள்ளார். ஆனால் திமுக அரசுக்கு எதிராக திருமாவளவனோ, கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களோ குரல் கொடுக்கவில்லை என்றும், அவர்கள் திமுகவின் அடிமைகளாக மாறிவிட்டதாகவும் கடுமையாக சாடியுள்ளார். மேலும் காங்கிரஸில் உட்கட்சி மோதல் வெடித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!