News August 16, 2024
மகாராஷ்டிராவுக்கு தேர்தல் அறிவிக்காதது ஏன்?

இந்த ஆண்டுக்குள் 4 சட்டமன்றங்களுக்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே முதலில் ஜம்மு காஷ்மீர், ஹரியானாவுக்கும், பின்னர் மகாராஷ்டிரா, ஜார்கண்டிற்கும் தேர்தல் நடைபெறுவதாக கூறினார். பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையும் ஒரு காரணமென்ற அவர், மகாராஷ்டிராவில் மழை பாதிப்பு மற்றும் தொடர் விழாக்களை கருத்தில் கொண்டும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.
Similar News
News December 30, 2025
பள்ளிகள் திறப்பு.. தமிழக அரசு புதிய உத்தரவு

பள்ளி திறக்கும் முதல்நாளிலேயே மாணவர்களுக்கு 3-ம் பருவ புத்தகங்களை வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி, மாவட்ட கல்வி அலுவலக குடோன்களில் இருந்து பள்ளி வாரியாக புத்தகங்களை பிரித்து அனுப்பும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. பள்ளிகளுக்கு புத்தகங்கள் சென்றதும், ஸ்டாக் வந்துவிட்டது என எமிஸ் தளத்தில் பதிவு செய்யவும், பற்றாக்குறை இருந்தால் உடனே தெரிவிக்கவும் HM-களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News December 30, 2025
பிறப்பால் இந்தியர்.. அரசியலில் இந்தியாவிற்கு எதிரானவர்!

இன்று காலமான வங்கதேச EX PM <<18710712>>கலீதா ஜியா<<>>, இந்தியாவில் பிறந்து இந்தியாவிற்கு எதிராக அரசியல் செய்தவர். பிரிட்டிஷ் ஆட்சியில் பிரிக்கப்படாத வங்காளத்தில் பிறந்து பாக்., ராணுவ அதிகாரியும், வங்கதேச ஜனாதிபதியுமான ஜியாதுர் ரஹ்மானை மணம் முடித்தார். கணவரின் கொலை அவரது வாழ்வில் திருப்பத்தை ஏற்படுத்தியது. அதையடுத்து தீவிர அரசியலில் ஈடுபட்டவர், கடைசி காலம் வரை இந்தியாவுக்கு எதிராக சீனாவிடம் நட்புறவை பேணினார்.
News December 30, 2025
ICC தரவரிசை பட்டியலில் ஷபாலி முன்னேற்றம்!

2025-ம் ஆண்டின் கடைசி மகளிர் டி20 தரவரிசை பட்டியலை ICC இன்று வெளியிட்டது. அதில் பேட்டர்கள் பட்டியலில் 10-வது இடத்தில் இருந்த இந்தியாவின் அதிரடி வீராங்கனை ஷபாலி வர்மா 6-வது இடத்திற்கு முன்னேறியுள்ளார். ஸ்மிருதி மந்தனா அதே 3-வது இடத்தில் நீடிக்கிறார். ஜெமிமா ஒரு இடம் பின்தங்கி 10-வது இடத்திற்கு சென்றார். பவுலர்கள் பட்டியலில் இந்தியாவின் தீப்தி ஷர்மா தொடர்ந்து முதலிடத்தில் நீடிக்கிறார்.


