News August 16, 2024
மகாராஷ்டிராவுக்கு தேர்தல் அறிவிக்காதது ஏன்?

இந்த ஆண்டுக்குள் 4 சட்டமன்றங்களுக்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே முதலில் ஜம்மு காஷ்மீர், ஹரியானாவுக்கும், பின்னர் மகாராஷ்டிரா, ஜார்கண்டிற்கும் தேர்தல் நடைபெறுவதாக கூறினார். பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையும் ஒரு காரணமென்ற அவர், மகாராஷ்டிராவில் மழை பாதிப்பு மற்றும் தொடர் விழாக்களை கருத்தில் கொண்டும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.
Similar News
News January 21, 2026
ஹேப்பி பர்த்டே சந்தானம்!!

நக்கல், நையாண்டி கலந்த இவரின் ஒன் லைன்களுக்கு சிரிக்காதவர்களே இருக்க முடியாது. கலாய் மன்னன் சந்தானத்திற்கு இன்று பிறந்தநாள். ஹீரோவாக கலக்கினாலும், இன்னும் Vintage காமெடி சாண்டாவைதான் ரசிகர்கள் அதிகமாக விரும்புகின்றனர். கடந்த ஆண்டு வெளியான ‘மதகதராஜா’ பட வெற்றியே அவரை ண்டும் காமெடி ரோலில் பார்க்க ரசிகர்கள் எவ்வளவு விரும்புகிறார்கள் என்பதற்கு சாட்சி. உங்களுக்கு பிடித்த சந்தானம் காமெடியை சொல்லுங்க.
News January 21, 2026
திமுக அரசுக்கு நெருக்கடி கொடுக்கும் அரசு டாக்டர்கள்!

கோரிக்கைகளை நிறைவேற்றாவிட்டால் வரும் 28-ம் தேதி முதல் சென்னையில் 2 நாட்கள் அடையாள உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என அரசு டாக்டர்கள் அறிவித்துள்ளனர். அரசாணை 354 மறு வரையறை, ஆரம்ப சுகாதார நிலைய படி ₹3,000 உள்ளிட்ட கோரிக்கைகளை அவர்கள் வலியுறுத்தி வருகிறனர். ஏற்கெனவே கடந்த 12-ம் தேதி முதல் தங்களது கோரிக்கைகள் அடங்கிய அட்டை அணிந்து 20,000 அரசு டாக்டர்கள் TN முழுவதும் பணியாற்றி வருகின்றனர்.
News January 21, 2026
Assembly: மறைந்தவர்களுக்கு இரங்கல் வாசிப்பு

2-ம் நாள் சட்டப்பேரவை கூட்டம் தொடங்கியது. 2025-ல் உயிரிழந்த முன்னாள் MLA-க்கள் சா.பன்னீர்செல்வம், எல்.கணேசன் , MLA பொன்னுசாமி, மக்களவை முன்னாள் தலைவர் சிவராஜ் பாட்டில், ஈரோடு தமிழன்பன், ஏவிஎம்.சரவணன், தொழிலதிபர் அருணாச்சலம் முருகானந்தத்துக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. இவர்களின் இறப்புக்கு ஆழ்ந்த இரங்கலையும் அனுதாபத்தையும் தெரிவித்துக்கொள்வதாக கூறிய அப்பாவு, இரங்கல் தீர்மானத்தை நிறைவேற்றினார்.


