News August 16, 2024

மகாராஷ்டிராவுக்கு தேர்தல் அறிவிக்காதது ஏன்?

image

இந்த ஆண்டுக்குள் 4 சட்டமன்றங்களுக்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே முதலில் ஜம்மு காஷ்மீர், ஹரியானாவுக்கும், பின்னர் மகாராஷ்டிரா, ஜார்கண்டிற்கும் தேர்தல் நடைபெறுவதாக கூறினார். பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையும் ஒரு காரணமென்ற அவர், மகாராஷ்டிராவில் மழை பாதிப்பு மற்றும் தொடர் விழாக்களை கருத்தில் கொண்டும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.

Similar News

News January 19, 2026

பராசக்தி கேரக்டராக மாறிய சீமான்

image

கடந்த 3 தலைமுறைகளாக தாய்மொழியை எழுத படிக்க தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கியுள்ளோம் என சீமான் கூறியுள்ளார். தமிழ் படிக்காமலேயே உயர்ந்த பட்டம் பெற்று பணிக்கு சென்றுவிடலாம் என்ற சூழல் உருவாகிவிட்டதாக கூறிய அவர், மொழி போரில் ஏற்பட்ட புரட்சியால் ஆட்சியை பிடித்த திமுக, ஹிந்தி எதிர்ப்பில் உறுதியாக இல்லை என்றார். மேலும், பராசக்தி படத்தில் வரும் செழியன் கதாபாத்திரம் நான்தான் எனவும் தெரிவித்துள்ளார்.

News January 19, 2026

பராசக்தி கேரக்டராக மாறிய சீமான்

image

கடந்த 3 தலைமுறைகளாக தாய்மொழியை எழுத படிக்க தெரியாத ஒரு தலைமுறையை உருவாக்கியுள்ளோம் என சீமான் கூறியுள்ளார். தமிழ் படிக்காமலேயே உயர்ந்த பட்டம் பெற்று பணிக்கு சென்றுவிடலாம் என்ற சூழல் உருவாகிவிட்டதாக கூறிய அவர், மொழி போரில் ஏற்பட்ட புரட்சியால் ஆட்சியை பிடித்த திமுக, ஹிந்தி எதிர்ப்பில் உறுதியாக இல்லை என்றார். மேலும், பராசக்தி படத்தில் வரும் செழியன் கதாபாத்திரம் நான்தான் எனவும் தெரிவித்துள்ளார்.

News January 19, 2026

குடும்ப அட்டைகளுக்கு ₹3,000.. தமிழக அரசு அறிவிப்பு

image

விடுபட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு இன்று முதல் ரேஷன் கடைகளில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படவுள்ளது. ₹3,000 ரொக்கம், பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, வேட்டி, சேலை, முழுக் கரும்பு ஆகிய தொகுப்பு வழங்கப்படவுள்ளன. 97% குடும்ப அட்டைகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்பட்ட நிலையில், மீதமுள்ள 3% பேருக்கும் முறையாக வழங்க வேண்டும் என ரேஷன் கடை ஊழியர்களுக்கு அரசு அறிவுறுத்தியுள்ளது.

error: Content is protected !!