News August 16, 2024

மகாராஷ்டிராவுக்கு தேர்தல் அறிவிக்காதது ஏன்?

image

இந்த ஆண்டுக்குள் 4 சட்டமன்றங்களுக்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே முதலில் ஜம்மு காஷ்மீர், ஹரியானாவுக்கும், பின்னர் மகாராஷ்டிரா, ஜார்கண்டிற்கும் தேர்தல் நடைபெறுவதாக கூறினார். பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையும் ஒரு காரணமென்ற அவர், மகாராஷ்டிராவில் மழை பாதிப்பு மற்றும் தொடர் விழாக்களை கருத்தில் கொண்டும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.

Similar News

News January 17, 2026

அண்ணாமலைக்கு புதிய பதவியா?

image

பாஜகவில் நயினாரும், அண்ணாமலையும் எதிரும் புதிருமாக இருந்து வந்தது டெல்லி தலைமையை அப்செட் செய்திருந்தது. இதனால், அவர்களை அழைத்து மத்தியஸ்தம் செய்திருக்கிறது டெல்லி பாஜக. இதனால் அண்ணாமலையும் சற்றே அனுசரித்து போக, அவருக்கு புதிய பதவி ஒன்றை கொடுக்க டெல்லி பாஜக திட்டமிட்டுள்ளதாம். அத்துடன் தேர்தல் களத்தில் பிரசார பீரங்கியாகவும் அண்ணாமலையை பயன்படுத்த பாஜக தரப்பில் திட்டங்கள் இருப்பதாக கூறப்படுகிறது.

News January 17, 2026

ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை: CM ஸ்டாலின்

image

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை நேரில் பார்வையிட்ட CM ஸ்டாலின், 2 புதிய அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார். *ஜல்லிக்கட்டு போட்டியில் அதிக காளைகளை அடக்கி, முதல் பரிசு பெறும் மாடுபிடி வீரர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் கால்நடை பராமரிப்புத்துறையில் அரசு வேலை. *அலங்காநல்லூரில் ₹2 கோடி செலவில் ஜல்லிக்கட்டு பயிற்சி மையம் & உயர்தர சிகிச்சை மையம் அமைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.

News January 17, 2026

டெல்லி செல்லும்முன் பற்ற வைத்த மாணிக்கம் தாகூர்

image

டெல்லி செல்வதற்கு முன் மாணிக்கம் தாகூர் போட்ட பதிவு தான், தமிழக அரசியலில் தற்போது ஹாட் டாப்பிக். டெல்லிக்கு செல்வது எனக்காக அல்ல!, என் இயக்கத்தை காக்கும் காங்கிரஸ்காரர்களின் உணர்வை சொல்ல வேண்டும் என்பதற்காகவும், காங்., உரிமையை (ஆட்சியில் பங்கு) மீண்டும் விட்டு கொடுத்துவிடக் கூடாது என்பதை தலைவர்களிடம் வலியுறுத்தவும் டெல்லி சொல்லவிருக்கிறேன் என பதிவிட்டு புதிய நெருப்பை பற்றவைத்துள்ளார்.

error: Content is protected !!