News August 16, 2024

மகாராஷ்டிராவுக்கு தேர்தல் அறிவிக்காதது ஏன்?

image

இந்த ஆண்டுக்குள் 4 சட்டமன்றங்களுக்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே முதலில் ஜம்மு காஷ்மீர், ஹரியானாவுக்கும், பின்னர் மகாராஷ்டிரா, ஜார்கண்டிற்கும் தேர்தல் நடைபெறுவதாக கூறினார். பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையும் ஒரு காரணமென்ற அவர், மகாராஷ்டிராவில் மழை பாதிப்பு மற்றும் தொடர் விழாக்களை கருத்தில் கொண்டும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.

Similar News

News December 27, 2025

ஆபரேஷன் ஆகாட் 3.0: டெல்லியில் 285 பேர் கைது

image

புத்தாண்டையொட்டி முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஆபரேஷன் ஆகாட் 3.0-வை டெல்லி போலீஸ் நடத்தியது. இதில் குற்றச்சம்பவங்களில் தொடர்புடைய 285 பேரை போலீசார் கைதுசெய்தனர். அதோடு துப்பாக்கி, கத்தி உள்ளிட்ட ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டன. மேலும் 500-க்கும் மேற்பட்டோர் தடுப்பு காவலிலும் வைக்கப்பட்டுள்ளனர். முன்னதாக ஆபரேஷன் ஆகாட் 1.0-வில் 70 பேரும், 2.0-வில் 500 பேரும் கைது செய்யப்பட்டிருந்தனர்.

News December 27, 2025

ரேஷன் கார்டு ரத்து.. அரசு முக்கிய அறிவிப்பு

image

ரேஷன் கார்டு வைத்திருப்பவர்கள் வரும் டிசம்பர் 31-ம் தேதிக்குள் தங்கள் e-KYC சரிபார்ப்பைப் பூர்த்தி செய்ய வேண்டும் என அரசு அறிவித்திருக்கிறது. இந்த e-KYC-ஐ சரியான காலக்கெடுவிற்குள் முடிக்காவிட்டால், ஜனவரி 1-ஆம் தேதி முதல் உங்களுக்கு ரேஷன் பொருட்கள் கிடைப்பது நிறுத்தப்படலாம். நீங்கள் ஆன்லைன் மூலமோ (அ) ரேஷன் கடைக்கு நேரடியாக சென்றோ, e-KYC சரிபார்ப்பைச் சுலபமாக முடித்துக் கொள்ளலாம். SHARE IT.

News December 27, 2025

இரு சித்தாந்தத்திற்கு இடையேதான் போட்டி: சீமான்

image

2026 தேர்தலில் நாதக தோல்வியடைந்தால் அது மக்களின் தோல்வி என சீமான் தெரிவித்துள்ளார். சென்னை திருவேற்காட்டில் நடைபெற்ற நாதகவின் பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அவர், திராவிட சித்தாந்தத்துக்கும், தமிழ் தேசிய கருத்தியிலுக்கும் இடையேதான் தேர்தலில் போட்டி என கூறியுள்ளார். அரசு கொடுக்கும் இலவசங்கள் மக்களின் வளர்ச்சியை தடுப்பதாகவும், தற்சார்பே தங்கள் பொருளாதார கொள்கை என்றும் அவர் கூறியுள்ளார்.

error: Content is protected !!