News August 16, 2024
மகாராஷ்டிராவுக்கு தேர்தல் அறிவிக்காதது ஏன்?

இந்த ஆண்டுக்குள் 4 சட்டமன்றங்களுக்கு தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என, ராஜூவ் குமார் தெரிவித்துள்ளார். இதன்காரணமாகவே முதலில் ஜம்மு காஷ்மீர், ஹரியானாவுக்கும், பின்னர் மகாராஷ்டிரா, ஜார்கண்டிற்கும் தேர்தல் நடைபெறுவதாக கூறினார். பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையும் ஒரு காரணமென்ற அவர், மகாராஷ்டிராவில் மழை பாதிப்பு மற்றும் தொடர் விழாக்களை கருத்தில் கொண்டும் இம்முடிவு எடுக்கப்பட்டதாக விளக்கமளித்தார்.
Similar News
News December 31, 2025
தினம் ஒரு திருக்குறள்

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல் ▶அதிகாரம்: வெருவந்தசெய்யாமை
▶குறள் எண்: 566
▶குறள்:
கடுஞ்சொல்லன் கண்ணிலன் ஆயின் நெடுஞ்செல்வம்
நீடின்றி ஆங்கே கெடும்.
▶பொருள்: கடுஞ்சொல்லும், கருணையற்ற உள்ளமும் கொண்டவர்களின் பெருஞ்செல்வம் நிலைக்காமல் அழிந்துவிடும்.
News December 31, 2025
சாதனை படைத்த இந்திய மகளிர்

SL மகளிருக்கு எதிரான 5-வது டி20-ல் 68 ரன்கள் எடுத்து ஆட்டநாயகி விருதை(POM) ஹர்மன்பிரீத் கவுர் வென்றார். இதன்மூலம் டி20-ல் அதிக முறை POM வென்ற IND வீராங்கனை மிதாலி ராஜின்(12) சாதனையை அவர் சமன் செய்தார். 241 ரன்கள் குவித்த ஷபாலி வர்மாவும், அதிக முறை தொடர்நாயகி விருது வென்ற IND வீராங்கனைகள் பட்டியலில் மிதாலி ராஜ், தீப்தி சர்மா, ஹர்மன்பிரீத் கவுருடன் இணைந்துள்ளார். அனைவரும் 4 முறை POS வென்றுள்ளனர்.
News December 31, 2025
தமிழகத்தை உ.பி.,யுடன் ஒப்பிடுவது தவறு: காங்., MP

UP-ஐ விட அதிக கடனில் தமிழகம் உள்ளதாக காங்., நிர்வாகி பிரவீன் சக்ரவர்த்தி கூறியது, அவருடைய தனிப்பட்ட கருத்து என கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். UP-ஐ தமிழகத்துடன் ஒப்பிடுவது தவறு எனக் குறிப்பிட்ட அவர், இங்குள்ள சுகாதார, சமூக, கல்வி, பொருளாதார, முதலீடு குறியீடுகளை உபி.,யுடன் ஒப்பிடவே முடியாது எனவும் அவர் கூறினார். தமிழகம் போட்டி போட வேண்டியது மகாராஷ்டிராவுடன் மட்டுமே என்றும் அவர் பேசியுள்ளார்.


