News November 20, 2024
IRFAN மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்? EPS கேள்வி

Youtuber Irfan குழந்தையின் தொப்புள் கொடி அறுத்த விவகாரத்தில் அரசு நடவடிக்கை எடுக்கவில்லை என EPS குற்றஞ்சாட்டியுள்ளார். நடவடிக்கை எடுப்பேன் என முதலில் வானத்துக்கும் பூமிக்கும் குதித்த அமைச்சர் மா.சு, பின் Irfan உதயநிதியுடன் சாப்பிடும் VIDEO வெளியானதும், இது கொலைக்குற்றமா என பம்மி பதுங்குவதாக சாடினார். குழந்தை பாலினத்தை வெளிப்படுத்தியதற்கும் அவர் மீது நடவடிக்கை எடுக்காததையும் சுட்டிக்காட்டினார்.
Similar News
News September 2, 2025
தோனிக்கு Away போட்டிகளே கிடையாது: ரவி பிஷ்னோய்

IPL தொடரில் தோனிக்கு Away போட்டிகள் என்பதே கிடையாது என்று ரவி பிஷ்னோய் தெரிவித்துள்ளார். சமீபத்திய பேட்டியில் பேசிய அவர், எந்த மைதானமாக இருந்தாலும் களத்திற்குள் வந்தாலே ‘தோனி தோனி’ என அனைவரும் ஆர்ப்பரிக்க தொடங்கி விடுகின்றனர் என நெகிழ்ந்துள்ளார். மேலும், தன் மீதான சந்தேகங்களை தவறு என தொடர்ந்து அவர் நிரூபிப்பதாலேயே இன்னும் அவர் விளையாடி வருகிறார் என்றார். தோனி என்றதும் நினைவுக்கு வருவது என்ன?
News September 2, 2025
விஜய் சேதுபதிக்கான கதையில் நடிக்கும் சூரி?

சூரியின் அடுத்த படம் குறித்த தகவல் வெளியாகி எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது. ‘இன்று நேற்று நாளை’, ‘அயலான்’ படத்தின் இயக்குநர் ரவிகுமார் இயக்கத்தில் அவர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. அதிலும், இப்படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த நிலையில், சூரி நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. கடைசியாக இவரது நடிப்பில் வெளியான ‘மாமன்’ படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.
News September 2, 2025
அண்ணாதுரை பொன்மொழிகள்

*கண்டனத்தை தாங்கிக் கொள்ளும் திடமனம் இல்லை என்றால் கடமையை நிறைவேற்ற முடியாது.
*எதிரிகள் தாக்கித்தாக்கி தங்களது வலுவை இழக்கட்டும், நீங்கள் தாங்கித்தாங்கி வலுவை பெற்றுகொள்ளுங்கள்.
*நடந்தவை நடந்தவையாக இருக்கட்டும், இனி நடப்பவை நல்லவையாக இருக்கட்டும்.
*பகுத்தறிவை பயன்படுத்துவதில்லை என்று முடிவு செய்துவிட்ட பிறகு, மனிதனிடம் வாதிடுவது செத்துப்போன மனிதனுக்கு மருந்து ஊட்டுவதற்கு நிகராகும்.