News June 21, 2024
ஜெயலலிதாவை ஏன் பதவி விலக சொல்லவில்லை: மா.சு

ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் 53 பேர் விஷச்சாராயம் அருந்தி உயிரிழந்ததாக, அமைச்சர் மா.சுப்பிரமணியன் குற்றம்சாட்டியுள்ளார். கள்ளக்குறிச்சி விவகாரத்தில் இபிஎஸ் குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அவர், 2001இல் 53 பேர் உயிரிழந்த போது யாரும் ஜெயலலிதாவை பதவி விலகச் சொல்லவில்லை என்றார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்ப நிலையை கருதியே நிதியுதவி அளிக்கப்பட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.
Similar News
News September 12, 2025
OFFICIAL: நேபாள் இடைக்கால அரசு தலைவராகும் சுசீலா

நேபாள் நாடாளுமன்றம் அதிகாரப்பூர்வமாக கலைக்கப்பட்டது. அந்நாட்டின் இடைக்கால அரசு தலைவராக, முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, இன்று இரவு பதவியேற்க உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுசீலாவின் பதவியேற்பிற்காக அந்நாட்டு பிரதமர் அலுவலகம் தயார் செய்யப்பட்டு வருகிறது. GEN Z போராட்ட குழு – ராணுவம் இடையே இன்று நடந்த 2-ம் கட்ட பேச்சுவார்த்தையில், சுசீலாவை இடைக்கால PM-ஆக ஒருமனதாக ஏற்றுக் கொள்ளப்பட்டது.
News September 12, 2025
BREAKING: தீபாவளி பரிசாக ₹2,000?.. அரசு புதிய தகவல்

தீபாவளி பரிசாக PM KISAN திட்ட 21-வது தவணை தொகையை விரைவில் வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. நாடு முழுவதும் சுமார் 10 கோடி விவசாயிகளுக்கு 4 மாத இடைவெளியில் தலா ₹2,000 வழங்கப்பட்டு வருகிறது. கடந்த தவணை ஆக.2-ல் டெபாசிட் செய்யப்பட்டது. இந்நிலையில், வடமாநில வெள்ள பாதிப்பு கருதி தீபாவளி பண்டிகைக்கு முன் (அக்டோபர்) அடுத்த தவணை வரவு வைக்கப்படும் என மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
News September 12, 2025
Parenting: உங்கள் குழந்தையை இதிலிருந்து காப்பாத்துங்க

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரிக்கின்றன. இதிலிருந்து உங்கள் குழந்தையை காக்க, அவர்களுக்கு சில விஷயங்களை சொல்லிக்கொடுக்க வேண்டும். ➤அந்தரங்க உறுப்புகள் பற்றி கற்பியுங்கள் ➤தங்கள் அனுமதி இல்லாமல் யாரும் அவர்களை தொடக்கூடாது என சொல்லுங்கள் ➤எது நடந்தாலும் பெற்றோரிடம் சொல்லவேண்டும் என கூறுங்கள் ➤Good Touch, Bad Touch-ஐ விளக்க விழிப்புணர்வு வீடியோக்களை போட்டு காட்டுங்கள். SHARE.