News October 25, 2025
அரசியல் களத்தில் விஜய் தடுமாறுவது ஏன்?

சினிமாவில் ஜொலித்த விஜய்க்கு அரசியல் களத்தில் அடுத்தடுத்து தடைகள் ஏற்பட்டு வருகின்றன. சோசியல் மீடியா மற்றும் பிரசார களங்களில் பம்பரமாக சுழன்று வந்த அக்கட்சியின் தொண்டர்கள் சிறிது காலமாக சைலண்ட் மோடில் உள்ளனர். இதற்கு கரூர் சம்பவம் காரணமாக கூறப்பட்டாலும், சரியான வழிகாட்டுதல்கள் இல்லாமல் விஜய் தடுமாறுவதாகவும் கூறுகின்றனர். தங்களது ஆதங்கத்தை சிலர் விஜய்யை Tag செய்து X பக்கத்தில் பதிவிட்டுள்ளனர்.
Similar News
News October 25, 2025
அதிமுகவுடன் கூட்டணி.. அதிகாரப்பூர்வ அறிவிப்பு

அதிமுக உடனான கூட்டணியை அதிகாரப்பூர்வமாக தமாகா தலைவர் ஜி.கே.வாசன் உறுதி செய்துள்ளார். சென்னையில் ஜி.கே.வாசன் தலைமையில் நடந்த தமாகா பொதுக்குழுவில், அதிமுக தலைமையில் 2026 தேர்தலை சந்திப்போம் உள்ளிட்ட 18 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மேலும், திமுகவுக்கு எதிரான கொள்கை உடைய அனைத்து கட்சிகளும் ஓரணியில் திரள வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
News October 25, 2025
₹1 கோடி சம்பளம் வாங்கிய முதல் நடிகை யார் தெரியுமா?

சினிமாவில் முதலில் ₹1 கோடி சம்பளம் வாங்கிய ஹீரோ சிரஞ்சீவி. ஆனால் நடிகை யாரென்று தெரியுமா? இந்தியாவில் ஹீரோக்களுக்கு போட்டியாக முதல் முதலாக ₹1 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியவர் ஸ்ரீதேவி. 1993-ம் ஆண்டு வெளியான ‘ரூப் கி ராணி சொரோம் கா ராஜா’ படத்திற்காக இவர் ₹1 கோடி சம்பளம் பெற்றார். இந்த படத்தை தயாரித்தவர் அவரது கணவரான போனி கபூர் தான். இந்த படத்தில் அனில் கபூர் ஹீரோவாக நடித்தார்.
News October 25, 2025
நிதிஷ் குமாரை பாஜக கடத்தி சென்றுவிட்டது; தேஜஸ்வி

NDA கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தாலும் நிதிஷ் குமாரை முதல்வராக்க மாட்டார்கள் என்று தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். NDA கூட்டணி தற்போது நிதிஷ் கட்டுப்பாட்டில் இல்லை; அவர் பிஹாருக்கு வெளியில் இருந்து செயல்படும் மோடி, அமித்ஷாவால் கடத்தப்பட்டுள்ளார். வரவிருக்கும் சட்டப்பேரவைத் தேர்தலில் வெளியாட்களுக்கு வாக்களிக்காமல், ஒரு பிஹாரிக்கு வாக்களிக்க வேண்டும் என்று மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.


