News September 30, 2025

விஜய் ஏன் களத்தில் இல்லை? ஆ.ராசா MP

image

இந்தியாவின் இறையாண்மைக்கு எதிரான கருத்தை ஆதவ் அர்ஜுன பதிவிட்டுவிட்டு நீக்கியுள்ளதாக ஆ.ராசா குற்றம்சாட்டியுள்ளார். வன்முறையை தூண்டும் வகையில் பதிவிட்ட ஆதவ் அர்ஜுனாவை விஜய் கட்சியை விட்டு நீக்காமல் தன்னுடன் வைத்திருப்பது ஏன் என ஆ.ராசா கேள்வி எழுப்பியுள்ளார். கரூரில் விபத்து நடந்தபோது களத்தில் நிற்காமல் விஜய் ஓடி வந்தது ஏன் எனவும் ஆ.ராசா வினவியுள்ளார்.

Similar News

News September 30, 2025

நடக்கக் கூடாதது நடந்துவிட்டது: விஜய்

image

தனது பரப்புரையின் போது மக்களுக்கு பாதுகாப்பான இடங்களையே தேர்வு செய்வதில் கவனமுடன் இருந்ததாக விஜய் தெரிவித்துள்ளார். அரசியல் காரணங்களை எல்லாம் தவிர்த்துவிட்டு, மக்கள் பாதுகாப்பை மட்டுமே மனதில் கொண்டு பரப்புரைக்கு போலீஸிடம் அனுமதியும், பாதுகாப்பும் கேட்டோம் என்றார். எனினும், கரூரில் நடக்கக் கூடாத துயரம் நடந்துவிட்டதாக அவர் கவலையுடன் குறிப்பிட்டார்.

News September 30, 2025

ஆதரவு தெரிவித்தவர்களுக்கு நன்றி: விஜய்

image

கரூர் துயரச் சம்பவத்தின் போது, தனக்கு ஆதரவு தெரிவித்தவர்களுக்கு விஜய் நன்றி தெரிவித்துள்ளார். சற்றுமுன் வெளியிட்ட <<17876190>>வீடியோவில்<<>> பேசிய அவர், எங்களின் வலிகளை, நிலைமைகளை புரிந்துகொண்டு எங்களுக்காக பேசிய அரசியல் கட்சிகளை சார்ந்த நண்பர்கள், தலைவர்களுக்கு நன்றி என்று அவர் குறிப்பிட்டார். இபிஎஸ், அண்ணாமலை உள்ளிட்ட பல எதிர்கட்சி தலைவர்கள் விஜய்மீது மட்டும் குற்றம் சொல்ல முடியாது எனக் குறிப்பிட்டிருந்தனர்.

News September 30, 2025

CM சார், என்னை பழிவாங்குங்க, ஆனால்… விஜய் சவால்

image

கரூர் சம்பவம் பற்றி விளக்கம் அளித்த விஜய், CM ஸ்டாலினை சாடியுள்ளார். பழிவாங்கும் எண்ணம் இருந்தால் என்னை என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள், தொண்டர்கள் மீது கைவைக்க என்றார். நான் வீட்டிலோ அல்லது அலுவலகத்திலோ தான் இருப்பேன் என்று சவால் விடுத்தார். கரூரில் மட்டும் இப்படி ஒரு சம்பவம் நடந்தது ஏன் என்று கேள்வி எழுப்பியதுடன், தன் அரசியல் பயணம் இனிதான் வலிமையோடு தொடரும் என உறுதிபடக் கூறியுள்ளார்.

error: Content is protected !!