News March 20, 2025
ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயங்குவது ஏன்? அன்புமணி

பிஹார், தெலங்கானாவை பின்பற்றி தமிழ்நாட்டில் ஜாதிவாரி கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 2008ஆம் ஆண்டின் புள்ளிவிவரங்கள் சேகரிப்பு சட்டத்தின்படி சாதிவாரி மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்த மாநில அரசுகளுக்கு அதிகாரம் உண்டு எனவும், சமூக நீதியை காக்க சாதிவாரி கணக்கெடுப்பு மிகவும் அவசியம் என்றும் அவர் அறிவுறுத்தியுள்ளார்.
Similar News
News July 7, 2025
BREAKING: CM ஸ்டாலின் அதிரடி உத்தரவு

மதுரை மாநகராட்சியில் உள்ள அனைத்து மண்டல தலைவர்களும் பதவி விலக வேண்டும் என CM ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். மதுரை மேயர் இந்திராணியின் கணவன் பொன் வசந்தை கடந்த மே மாதம் கட்சியில் இருந்து நீக்கிய நிலையில், தற்போது அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளார். மதுரையின் நிழல் மேயராக பொன் வசந்த் செயல்பட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.
News July 7, 2025
8 இடங்களில் சதமடித்த வெயில்… கவனம் தேவை மக்களே!

தமிழகம், புதுச்சேரியில் வெப்பநிலை மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. இன்று சென்னை, வேலூர், மதுரை, தூத்துக்குடி உள்ளிட்ட 8 இடங்களில் வெயில் சதமடித்து (100 டிகிரி பாரன்ஹீட்) மக்களை வாட்டி வதைத்துள்ளது. இந்நிலையில், மேலும் 2 நாள்களுக்கு வெயில் 2 – 3 டிகிரி செல்சியஸ் வரை வெப்பநிலை அதிகரிக்கும் என எச்சரித்துள்ளது. இதனால், வீட்டில் இருந்து பகல் 11 மணி – மதியம் 3 வரை வெளியே செல்வதை தவிருங்கள் நண்பர்களே..!
News July 7, 2025
2001 தேர்தலை மறந்தாச்சா? திமுகவுக்கு EPS கேள்வி

பாஜகவுடன் கூட்டணி வைப்பதை விமர்சிக்கும் மு.க.ஸ்டாலினுக்கு, பழைய சம்பவம் மறந்துவிட்டதா எனக் கேட்டுள்ளார் இபிஎஸ். 1991-ல் பாஜகவோடு கூட்டணி வைத்தீர்களா இல்லையா? 2001 தேர்தலில் கூட்டணி வைத்தீர்களா இல்லையா? நீங்கள் கூட்டணி வைத்தால் பாஜக நல்ல கட்சி. நாங்கள் கூட்டணி வைத்தால் பாஜக மதவாத கட்சியா? என்றதுடன், நாட்டுக்கு நல்ல திட்டங்கள் தரும் பாஜகவுடன் கூட்டணி வைப்பதில் என்ன தவறு எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.