News August 10, 2024

சாப்பிட்டதும் வயிறு உப்புசமாவது ஏன்?

image

சாப்பிட்டதும் வயிறு உப்புசம் பிரச்னை ஏன் வருகிறது என மருத்துவர்கள் விளக்கம் அளித்துள்ளனர். ராஜ்மா, கொண்டைக்கடலை மாதிரியான கடலைகள், பால் போன்றவை வயிற்று உப்புசத்தை ஏற்படுத்தும் என்று அவர்கள் கூறுகின்றனர். மேலும், மலச்சிக்கல் உள்ளவர்களுக்கும் உப்புசம் அதிகமிருக்கும், புளித்த ஏப்பம், நெஞ்செரிச்சல் வரக்கூடும் என தெரிவிக்கின்றனர். எனவே உணவு முறையை மாற்றி தீர்வு காண பரிந்துரைக்கின்றனர்.

Similar News

News December 5, 2025

நீதித்துறையின் செயல் வெட்கக்கேடானது: சீமான்

image

மதுரையை இன்னொரு அயோத்தியாக மாற்றும் சூழ்ச்சிக்கு நீதித்துறையே துணை நிற்பது வெட்கக்கேடானது என சீமான் விமர்சித்துள்ளார். வாக்கு வேட்டைக்காக சமூக அமைதியை கெடுக்க முயல்வதுதான் உங்களது (பாஜக, இந்து அமைப்புகள்) ஆன்மீகப்பற்றா என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், மதவாதிகளின் பிரித்தாளும் சூழ்ச்சியை முறியடிக்க தமிழர் எனும் இனஉணர்வோடு ஓர்மைப்படுவோம் என்றும் சீமான் வலியுறுத்தியுள்ளார்.

News December 5, 2025

பாஜகவுடன் கூட்டணியா? விஜய் அறிவித்தார்

image

கரூர் சம்பவத்திலிருந்தே, NDA கூட்டணியில் விஜய்யை இணைக்க BJP விரும்புவதாக தகவல்கள் கசிந்தவாறு உள்ளன. இதற்கேற்றார் போலவே, தொட்டும் தொடாமல் BJP-யை விஜய் விமர்சித்து வருகிறார். இந்நிலையில், BJP உடன் இணக்கமாக உள்ளீர்களா என விஜய்யிடம் கேட்டதற்கு, அதற்கு மறுப்பு தெரிவித்து விட்டதாக நாஞ்சில் தெரிவித்துள்ளார். மேலும், இங்கு (தமிழகம்) அதிகாரத்தில் உள்ள கட்சியை விஜய் விமர்சனம் செய்வதாகவும் தெரிவித்தார்.

News December 5, 2025

அனில் அம்பானியின் ₹10,000 கோடி முடக்கம்

image

வங்கி கடன் மோசடி வழக்கில், ரிலையன்ஸ் அனில் அம்பானி குழுமத்திற்கு சொந்தமான ₹1,120 கோடி சொத்துக்களை ED இன்று முடக்கியுள்ளது. முன்னதாக, சமீபத்தில் ₹8,997 கோடியை முடக்கிய நிலையில், இன்றுடன் சேர்த்து ₹10,117 கோடி மதிப்பிலான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. தொடர்ந்து <<17314173>>அனில் அம்பானி<<>> மீது பிடியை இறுக்கி வரும் ED, நிதிக் குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீதான நடவடிக்கை தீவிரப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளது.

error: Content is protected !!