News April 14, 2025
சித்திரையில் புத்தாண்டு ஏன்?

தை முதல் நாள்தான் தமிழர்களுக்கு புத்தாண்டு என்று ஒரு சிலர் சொல்கின்றனர். ஆனால், சித்திரையில் புத்தாண்டு கொண்டாட காரணம் இருக்கிறது. பண்டைய காலத்தில், மாதங்கள் பிரிக்கப்படுவதற்கு முன் ஆறு பெரும்பொழுதுகள்தான் இருந்தன. அவை, இளவேனில், முதுவேனில், கார், கூதிர், முன்பனி, பின்பனி என்பன. அவற்றில், இளவேனில் காலத்தின் முதல் மாதமான சித்திரைதான் புத்தாண்டாக கொண்டாடப்பட்டது. இக்கருத்தை மறுப்போரும் உள்ளனர்.
Similar News
News January 16, 2026
சற்றுமுன்: கூட்டணி.. விஜய்க்கு அதிர்ச்சி

தேர்தல் நெருங்கிவிட்ட நிலையில் ஆட்சியிலும், அதிகாரத்திலும் பங்கு என அறிவித்த தவெகவுடன் கூட்டணி அமைக்க எந்த கட்சியும் இதுவரை முன்வரவில்லை. காங்கிரஸுடன் கூட்டணி அமைக்க தவெக முனைப்பு காட்டினாலும், அக்கட்சி திமுக கூட்டணியிலேயே தொடரும் எனத் தெரிகிறது. AMMK, DMDK உடனான கூட்டணிப் பேச்சும் அடுத்தக்கட்டத்தை நோக்கி நகரவில்லை. இதனால் ஏமாற்றத்தில் உள்ள தவெக தலைமை, தை பிறந்ததால் வழி பிறக்கும் என நம்புகிறதாம்.
News January 15, 2026
உங்கள் மனம் கவர்ந்த பொங்கல் ரிலீஸ் எது?

பொங்கல் திருநாள் என்றாலே கரும்பு, சர்க்கரை பொங்கல், புத்தாடையுடன் புதுப்படங்களும் தமிழர்களின் வாழ்வில் இணைந்துவிடும். பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட விஜய்யின் ஜன நாயகன் ரிலீஸாகவில்லை. எனினும் சிவகார்த்திகேயனின் பராசக்தி, கார்த்தியின் வா வாத்தியாரே, ஜீவாவின் தலைவர் தம்பி தலைமையில் ஆகியவை பொங்கல் ரீலிசாக வெளிவந்துள்ளன. இவற்றில் எந்த படத்தை பார்த்தீர்கள்? எது உங்களின் மனம் கவர்ந்தது? கமெண்ட் பண்ணுங்க..
News January 15, 2026
மாரடைப்பு ஆபத்தை தடுக்கும் பழம்

தற்போது சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மாரடைப்பு ஏற்பட்டு வருகிறது. இந்த அபாயத்தை இயற்கையாக குறைக்க தினமும் 2 ரம்புட்டான் பழங்களை சாப்பிடும்படி டாக்டர்கள் அறிவுறுத்துகின்றனர். இந்த பழத்தில் பொட்டாசியம் & மக்னீசியம் நிறைந்திருப்பதால், ரத்த அழுத்தம் கட்டுக்குள் இருக்கிறது. இதனால், இதய ஆரோக்கியம் மேம்பட்டு மாரடைப்பு ஏற்படும் அபாயமும் குறைகிறதாம். இந்த பயனுள்ள தகவலை SHARE பண்ணுங்க.


