News April 15, 2024
ஆளுநர் அனுமதி கொடுத்தும் அமைதி காப்பது ஏன்?

அதிமுக முன்னாள் அமைச்சர்கள் மீதான குட்கா வழக்கில் சிபிஐ நடவடிக்கைக்கு உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. குட்கா வழக்கில் சி.விஜயபாஸ்கர் மற்றும் பி.வி.ரமாணா மீது வழக்கு தொடர ஆளுநர் அனுமதி அளித்தும் 3 வருடங்களாக சிபிஐ அமைதி காத்து வருகிறது. ஒரு வழக்கின்
விசாரணையை முடிக்க இத்தனை ஆண்டுகள் தேவையா? என்று கேள்வி எழுப்பிய நீதிபதி, அடுத்த விசாரணையில் சிபிஐ பதிலளித்த உத்தரவிட்டார்.
Similar News
News April 28, 2025
ஒரே ஓவரில் 28 ரன்கள்

GT அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில், RR அணி வீரர்கள் ருத்ர தாண்டவம் ஆடி வருகின்றனர். முதலில் பேட்டிங் செய்த GT அணி, 209 ரன்கள் குவித்தது. அதனைத் தொடர்ந்து களமிறங்கிய RR அணி, 5 ஓவர்களில் விக்கெட் இழப்பின்றி 81 ரன்கள் குவித்துள்ளது. குறிப்பாக, நான்காவது ஓவரில் 6 6 4 0 6 Wd Wd 4 என 30 ரன்கள் விளாசினார் வைபவ் சூர்யவன்ஷி. இவருக்கு இணையாக ஜெய்ஸ்வாலும் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்துகிறார்.
News April 28, 2025
ஒரே நாளில் வெள்ளி விலை ₹1000 குறைவு

நீண்ட நாட்கள் கழித்து தங்கம் மற்றும் வெள்ளி விலை இன்று குறைந்துள்ளது. குறிப்பாக, தங்கம் விலை எகிறியதால், பலர் வெள்ளியை நாடினர். குறிப்பாக இன்று ஒரு நாளில் மட்டும் வெள்ளி விலை (கிலோ) ₹1000 குறைந்தது. வரும் நாட்களிலும் தங்கம் மற்றும் வெள்ளி விலை கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. இதனால், நகை பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News April 28, 2025
எந்த நேரத்திலும் இந்தியா தாக்கலாம்: பாக்., அமைச்சர்

இந்தியா எந்த நேரத்திலும் தங்கள் நாட்டை தாக்கலாம் என பாகிஸ்தான் பாதுகாப்பு அமைச்சர் கவாஜா முகமது ஆசிப் அச்சம் தெரிவித்துள்ளார். ஆகவே, இதை எதிர்கொள்ள தங்கள் ராணுவம் தயாராக உள்ளதாகவும், நாடு முழுவதும் உஷார் நிலையில் உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேலும், தேவையெனில் அணு ஆயுதங்களும் பயன்படுத்துவோம் என்றும் கூறியுள்ளார். பஹல்காம் தாக்குதலுக்கு பின் இருநாடுகள் இடையே உறவு முற்றிலும் சீர்குலைந்துள்ளது.