News October 17, 2025

கடல் நீர் உப்பாக இருப்பது ஏன்?

image

ஆத்து தண்ணி சுவையா இருக்கு, ஆனா இதிலிருந்து கடலுக்கு போற தண்ணி ஏன் உப்பா இருக்குன்னு தெரியுமா? நிலத்தில் விழும் மழைநீர் பாறை, மணலில் உள்ள தாது, உப்புகளை அடித்துச்சென்று ஆறுகளில் கலக்கிறது. இந்த ஆறுகள் உப்பு நிறைந்த நீரை கடலில் கொண்டு சேர்க்கின்றன. கடலில் உள்ள இந்த நீர் கடும் வெயிலால் ஆவியாகிறது. எனவே உப்பு கடலிலேயே தங்கிவிடுகிறது. இதனால்தான் கடல்நீர் எப்போதும் உப்பாகவே இருக்கிறது. SHARE.

Similar News

News October 17, 2025

செவ்வாய்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறையா?.. வந்தது அப்டேட்

image

தீபாவளி பண்டிகைக்கு மேலும் ஒருநாள்(அக்.21) விடுமுறை விட அரசு பரிசீலனை செய்வதாக தகவல் வெளியாகியுள்ளது. கல்வி, வேலை உள்ளிட்ட காரணங்களுக்காக சென்னை, கோவை, திருப்பூர் உள்ளிட்ட நகரங்களில் உள்ளோர் சொந்த ஊர்களுக்கு கிளம்பியுள்ளனர். இதனிடையே, போக்குவரத்து சிரமங்களை தவிர்க்க செவ்வாய் அன்றும் சேர்த்து 4 நாள்கள் விடுமுறை விட அரசுக்கு, அரசு ஊழியர்கள் சங்கம் ஏற்கெனவே கோரிக்கை விடுத்திருந்தது.

News October 17, 2025

₹21 லட்சத்துக்கு Free ஆக உணவு சாப்பிட்ட நபர்!

image

ஜப்பானில் ஒருவர் உணவு ஆர்டர் செயலியை ஏமாற்றி கடந்த 2 ஆண்டுகளாக ரூ.21 லட்சத்துக்கு உணவு சாப்பிட்டுள்ளார். செயலியில் ஆர்டர் செய்த உணவு வரவில்லை என புகார் கொடுப்பதை நம்பி, செயலியும் பணத்தை திருப்பி கொடுத்து, உணவையும் அளித்து வந்துள்ளது. 124 போலி சிம் கார்டு மூலம் 1,095 முறை அவர் உணவை சாப்பிட்ட நிலையில், சந்தேகத்தின் பேரில் செய்த விசாரணையை தொடர்ந்து அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

News October 17, 2025

புதிய கொடி அறிமுகம்.. அண்ணாமலை எடுத்த முடிவு

image

நெல்லையில் அண்ணாமலைக்கு மன்றம் தொடங்கியதோடு, புதிதாக கொடி அறிமுகம் செய்யப்பட்டது கவனம் ஈர்த்துள்ளது. இந்நிலையில் இதுபற்றி X-ல் பதிவிட்டுள்ள அண்ணாமலை, என் மீது வைத்திருக்கும் அன்புக்கு கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால், இதுபோன்ற அமைப்புகள், கொடி உள்ளிட்டவற்றில் எனக்கு உடன்பாடு இல்லை என்றும், அனைவரும் முதலில் தங்களது குடும்பத்தினரின் நலனுக்கு முன்னுரிமை கொடுக்கவும் அறிவுறுத்தியுள்ளார். உங்க கருத்து?

error: Content is protected !!