News May 13, 2024

பிரதமர் மோடி தயங்குவது ஏன்?

image

ஓய்வு பெற்ற நீதிபதிகளின் கோரிக்கையை ஏற்று பிரதமருடனான விவாதத்திற்கு ராகுல் காந்தி தயார் என கூறினார். ஆனால், பிரதமர் மோடியிடம் இருந்து பதில் வராத நிலையில், பிரதமர் தயங்குவது ஏன் என தமிழ்நாடு காங்., தலைவர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பியுள்ளார். மேலும், பிரதமருக்கு துணிவில்லாததால், விவாதத்திற்கு வரவில்லை என்ற அவர், மடியில் கனமிருப்பதாலேயே அவர் தயங்குகிறார் என சாடியுள்ளார்.

Similar News

News August 22, 2025

விஜய்யின் பலம் என்ன? அண்ணாமலை கேள்வி

image

கூட்டமாக கூடுவோரை வாக்குகளாக மாற்ற தவெகவுக்கு சித்தாந்தம் வேண்டும் என அண்ணாமலை கூறியுள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், மற்றவர்களின் பலவீனம் குறித்து பேசிய விஜய் தனது பலம் குறித்து ஏதும் பேசவில்லை என சாடியுள்ளார். பழங்கதைகளை கூறாமல் 21-ம் நூற்றாண்டின் அரசியலுக்கு விஜய் வர வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். அண்ணாமலையின் பேச்சு குறித்து உங்கள் கருத்து என்ன?

News August 22, 2025

வெறிநாய்களை வெளியே விடக்கூடாது: SC

image

தெருநாய்களை பிடித்தாலும் அவற்றுக்கு கருத்தடை & புழுநீக்கம் செய்து, தடுப்பூசி செலுத்திவிட்டு, அவற்றை பிடித்த இடத்திலேயே மீண்டும் விட்டுவிட வேண்டும் என SC <<17481254>>தீர்ப்பளித்துள்ளது<<>>. அதேநேரம், ரேபிஸ் தொற்று பாதித்த நாய்களையும், வெறிப்பிடித்த நாய்களையும் தெருவில் விடவும் தடை விதித்துள்ளது. தெருநாய்கள் தொடர்பாக அனைத்து மாநிலங்களையும் ஆலோசித்து தேசியக் கொள்கை உருவாக்கவும் மத்திய அரசை SC வலியுறுத்தியுள்ளது.

News August 22, 2025

மதிய உணவிற்குப் பிறகு சோம்பலா.. இதை பண்ணுங்க!

image

ஆபிசில் இருக்கும் போது, சாப்பிட்ட பிறகு, பயங்கரமாக தூக்கம் வரும். இதனால், வேலையும் கேட்டுவிடும். அப்படி, தூக்கம் வராமல் இருக்க..
*மதியம் எளிதில் ஜீரணிக்ககூடிய உணவுகளை மட்டும் எடுத்துக் கொள்ளுங்கள்.
*நிறைய தண்ணீர் குடியுங்கள்.
*சிறிது தூரம் நடப்பது, உடலை சுறுசுறுப்பாக்கி, மந்த நிலையை விரட்டும்.
*கண்டிப்பாக காஃபினை தவிர்க்கவும்.
*தூக்கம் வந்தால், சுவாசப்பயிற்சி செய்யவும்.

error: Content is protected !!