News May 31, 2024
சென்னை ஏன் அனலில் தகிக்கிறது?

தென்மேற்கு பருவமழை தொடங்கும்போது, மேற்கு திசை நோக்கி காற்று வலுவாக இருக்கும். இதனால் ஈரப்பதம் கடலை நோக்கி ஈர்க்கப்படும். எனவே ஒவ்வொரு ஆண்டும் பருவமழை தொடங்குவதற்கு முந்தைய வாரங்களில் கடலோரப் பகுதிகளில் வெப்பம் அதிகமாக காணப்படும். அதே போல, மேற்கில் இருந்து வரும் காற்று வலுவாக இருப்பதால், கடல் காற்று நிலப் பகுதிகளுக்குள் வருவது கிடையாது. இதன் காரணமாகவே கடலோர மாவட்டமான சென்னையில் அனல் வீசுகிறது.
Similar News
News September 8, 2025
ஓசூரில் விரைவில் முதலீட்டாளர்கள் மாநாடு: CM

தமிழ்நாடு கொண்டுள்ள மனித வளம் குறித்து, தானே எடுத்துரைக்க வேண்டும் என்பதற்காகதான் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொள்வதாக CM ஸ்டாலின் விளக்கமளித்துள்ளார். இதன் விளைவாக, தமிழ்நாட்டின் மீது நம்பிக்கை வைத்து ஜெர்மனியின் 10 புதிய நிறுவனங்கள் தொழில் தொடங்க முன்வந்துள்ளன என தெரிவித்தார். மேலும், தூத்துக்குடியில் நடத்தியது போல ஒசூரில் முதலீட்டாளர்கள் மாநாடு நடக்க இருப்பதாகவும் அவர் அறிவித்துள்ளார்.
News September 8, 2025
பெர்சனலாக மறக்கமுடியாத பயணம் இது: CM

முதலீடுகளை ஈர்த்து தமிழகம் திரும்பிய CM ஸ்டாலின், ஜெர்மனி & இங்கிலாந்து சுற்றுப்பயணத்தில் அதிகளவிலான முதலீடுகள் ஈர்க்கப்பட்டுள்ளதால் இது மாபெரும் வெற்றிப்பயணம் என தெரிவித்துள்ளார். இந்த பயணத்தில், 1000 ஆண்டுகள் பழமையான Oxford பல்கலையில், பெரியார் படத்தை திறந்து வைத்தது பெருமையாக இருந்ததாகவும், பெரியார் பேரனாக இது தனக்கு பெர்சனலாக மறக்கமுடியாத பயணம் எனவும் தெரிவித்துள்ளார்.
News September 8, 2025
மூலிகை: பருப்பு கீரையும்.. பல நன்மைகளும்!

சித்த மருத்துவர்களின் அறிவுரையின் படி,
*பருப்புக் கீரையை அரைத்து கொப்புலங்களின் மேல் பூசினால், அவை மறைந்து உடல் குளுமையடையும்.
*இக்கீரையின் விதைகளை 4 கிராம் அளவிற்கு எடுத்து நன்றாக தண்ணீர் கொண்டு சுத்தம் செய்து இளநீரில் போட்டு பருகினால் வயிற்று எரிச்சல், சிறுநீர் எரிச்சல் சரியாகும்.
*தலைவலி உள்ளவர்கள் பருப்புக் கீரையை மைபோல் அரைத்து தலைக்கு பற்றுப்போட்டல் தலைவலி குணமாகும். SHARE IT.